search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer killed in"

    • மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.
    • சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை, நவ.8-

    சென்னிமலை அருகே உள்ள தட்டாங்காட்டு புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். (வயது 79). விவசாயி. இவர் தன்னுடைய வீட்டில் இருந்து அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றார்.

    அப்போது சென்னிமலை-காங்கேயம் மெயின் ரோட்டை அவர் கடந்த பொழுது ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த கவின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.
    • மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பாலக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ்குமார் தனது மொபட்டில் லக்காபுரத்தில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிரு ந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.

    இந்த விபத்தில் மொபட்டில் வந்த சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோ தனை செய்த டாக்டர் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பண்டபள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் நந்தகுமார் (23) மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் கதிர்வேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடிக்கு வந்து கொண்டு இருந்தனர்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள பாண்டியம் பாளை யம் அடுத்த சீதாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (42). இவர்களுக்கு கவுரீஸ்வரி (20). என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கவுரீஸ்வரிக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு சென்னையில் வேலை கிடைத்தது. இதை யொட்டி அவர் சென்னை யில் இருந்து வந்தார். இதை யடுத்து கவுரீஸ்வரி விடுமுறையில் கவுந்தப்பாடிக்கு வந்தார்.

    இதை தொடர்ந்து விடுமுறை முடிந்து ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக கவுரீஸ்வரியை அழைத்து கொண்டு சுப்பிரமணி மொபட்டில் ஈரோட்டுக்கு சென்றார். அவர்களுடன் அவரது உறவினர் கதிர்வேல் (15). என்பவரும் சென்றார்.

    ரெயிலில் கவுரீஸ்வரியை சென்னைக்கு அனுப்பி விட்டு சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் கதிர்வேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடிக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் காஞ்சிகோவில் அடுத்த மணிபுரம் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

    எதிரே கவுந்தப்பாடி அடுத்த ஈங்கரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (21). என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிர மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த கதிர்வேல் பெருந் துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் தங்கராஜ் தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள செலம்பகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (58) விவசாயி. சம்பவத்தன்று இரவு முனியப்பன் தனது மொபட்டில் பால் கேன் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    இந்நிலையில் பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த முனியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    ×