மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் விவசாயி பலி

சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் கதிர்வேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடிக்கு வந்து கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டது.
மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் விவசாயி பலி
Published on

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள பாண்டியம் பாளை யம் அடுத்த சீதாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (42). இவர்களுக்கு கவுரீஸ்வரி (20). என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் கவுரீஸ்வரிக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு சென்னையில் வேலை கிடைத்தது. இதை யொட்டி அவர் சென்னை யில் இருந்து வந்தார். இதை யடுத்து கவுரீஸ்வரி விடுமுறையில் கவுந்தப்பாடிக்கு வந்தார்.

இதை தொடர்ந்து விடுமுறை முடிந்து ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக கவுரீஸ்வரியை அழைத்து கொண்டு சுப்பிரமணி மொபட்டில் ஈரோட்டுக்கு சென்றார். அவர்களுடன் அவரது உறவினர் கதிர்வேல் (15). என்பவரும் சென்றார்.

ரெயிலில் கவுரீஸ்வரியை சென்னைக்கு அனுப்பி விட்டு சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் கதிர்வேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடிக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் காஞ்சிகோவில் அடுத்த மணிபுரம் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

எதிரே கவுந்தப்பாடி அடுத்த ஈங்கரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (21). என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிர மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதில் படுகாயம் அடைந்த கதிர்வேல் பெருந் துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் தங்கராஜ் தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com