search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ மீது கார் மோதி டிரைவர் படுகாயம்
    X

    ஆட்டோ மீது கார் மோதி டிரைவர் படுகாயம்

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அம்பூர் பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40). இவர் தனது ஆட்டோவை ஒட்டிக் கொண்டு அண்ணா நகரில் இருந்து நியூடவுன் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நியூடவுன் பைபாஸ் சாலையில் எதிர் திசையில் ஜெயபால் (42) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தலைகுபுற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக படுகாயம் அடைந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர் .

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×