search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camp"

    • அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பேரூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் பயனடைந்தன.

    திருச்சி

    அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பேரூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமில் மண்டல இணை இயக்குனர் முரு எஸ்தர் ஷீலா மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் கணபதி பிரசாத் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர்கள், சுரேஷ் பாபு, அன்பரசி மற்றும் சௌந்தர்யா கால்நடை ஆய்வாளர்கள் சம்சாத், தவமணி, கவியரசு, கிருஷ்ணவேணி, சுந்தர்ராஜன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை அளித்தனர்.

    இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் பயனடைந்தன. சிறந்த கன்று மற்றும் பராமரிப்பு மேலாண்மைக்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் கலெக்டர் தலைமை யில் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள் ளார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் கலெக்டர் தலைமை யில், அரியலூர் மாவட்ட நிர்வாகமும், அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் இணைந்து வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கலெக்டர் அலுவலகத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, பான் கார்டு, சாதி சான்று, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கடன் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு அழைப்பு கடிதம், கல்லூரியில் சேர்ந்த தற்கான கடிதம், கல்லூரி யின் சான்று, முதல் பட்ட தாரி சான்று, உறுதி மொழி சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப் படங்கள் ஆகிய ஆவணங்க ளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள் ளார்.

    • அரியலூர் மணக்குடியில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
    • மணக்குடி ஊராட்சி மன்ற செயலர் தேசிங்கு நன்றி கூறினார்.

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், மணக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை ஊராட்சித் தலைவர் சங்கீதா தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் ரிச்சர்ட் ராஜ் முன்னிலை வகித்தார்.

    முகாமில் பெரிய, சிறிய மணக்குடி மற்றும் நுரையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 445 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 350 பசு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசியும், 400 ஆட்டினங்களுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

    உரிய நேரத்தில் பருவத்துக்கு வராத 19 கிடாரிகள், பலமுறை கருவூட்டல் செய்தும் சினையுறாத பசு மாடுகள் உள்ளிட்ட 61 மாடுகளுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய தாது உப்பு கலவை பொட்டலங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆடுகள் மற்றும் மடிவீக்க நோயால் பாதிக்கப்பட்ட 3 பசு மாடுகளில் இருந்து சாணம் மற்றும் பால் உள்ளிட்ட மாதிரி பொருள்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    முகாம் முடிவில் கன்று கள் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்து கொண்ட 22 கிடேரி கன்றுகளில் சிறந்த 10 கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் தலைமையில், ஓட்ட கோயில் கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், பொய்யாத நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ராஜா, கால்நடை ஆய்வாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராமலிங்கம், மாரிமுத்து, கலியமூர்த்தி, ஜெயக்குமாரி உள்ளிட்ட மருத்துவ குழுவி னர் முகாம் பணிகளை மேற்கொண்டனர். முடிவில், மணக்குடி ஊராட்சி மன்ற செயலர் தேசிங்கு நன்றி கூறினார்.

    • 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்
    • ஒவ்வொரு மாதமும் இலவச முகாம் நடத்த முடிவு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோட்டில் உள்ள லப்பை சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் ஊட்டி ஐ பவுண்டேஷன் சார்பில் ஜாவாபேட்டை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குன்னூர் சின்ன பள்ளிவாசல் ஜமாத்தார் செய்திருந்தனர். இலவச மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    தொடர்ந்து ஜமாத் தலைவர் நூர்முகமது, செயலாளர் முபாரக் கூறுகையில், வருகிற டிசம்பர் மாதமும் இலவச பொதுநலமருத்துவ முகாம் நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் மதம்-இன வேறுபாடு இன்றி இலவச முகாம் நடத்தப் போவதாக தெரிவித்து உள்ளனர்.

    • புதுக்கோட்டையில் கால்நடைகளுக்கு 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் நடைபெற்றது
    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திருமலைரா யசமுத்திரத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், கால்நடைகளுக்கு 4 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார்.சிறந்த கிடாரி கன்று வளர்ப்போருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும், சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு விவசாயி விருதுகளையும், பயனாளிகளுக்கு தாதுஉப்பு கலவைகளையும் வழங்கினார்.பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை களுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், அனைத்து பசுக்களுக்கும், எருமைகளுக்கும் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 38 குழுக்கள் அமைத்து 3,21,926 கால்நடை களுக்கு இலவசமாக இன்று முதல் தொடங்கி தொடர்ச்சி யாக 21 நாட்கள் அனைத்து கிராமங்களிலும் போடப்பட வுள்ளது.

    நோய் தடுப்பு முறைக ளான, நோய் பாதித்தவுடன் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் அலுவல ரிடம் தெரிவிக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடை களை உடனடியாக அகற்றி தனியே வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. கொட்டகையினை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். நோயுற்ற பகுதியிலிருந்து புதிய கால்நடைகளை வாங்க கூடாது.வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி போட வேண்டும். நோய் பாதித்த கறவை மாடு பாலை கன்றுகளுக்கு அளிக்க கூடாது. சிறந்த பராமரிப்பு, தடுப்பூசி மட்டும் இந்நோயினை தடுக்க உகந்த வழி ஆகும் என்றார்.

    இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (கால்ந டைத்துறை) ராமச்சந்திரன், கால்நடை உதவி மருத்து வர்கள் தெட்சி ணாமூர்த்தி, தினேஷ்குமார், பிரபு, சுப்ரமணியன், அபிநயா, விக்னேஷ்,ரவிச் சந்திரன், தாசில்தார் கவியரசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
    • புதிய வாக்காளர்களுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. வாழ்த்துகளை தெரிவித்தார்.

    திருவாரூர்:

    நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஆணைக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம் தொடர்பாக அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சியின் மாவட்டச்செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது 1.1.2024 இல் 18 வயது நிரம்புகின்ற இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கட்சியினரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    மேலும் வாக்காளர் சேர்க்கை முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த இளம் வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    இந்நிகழ்வின் போது நன்னிலம் ஒன்றியச் செயலாளர் இராம. குணசேகரன், நன்னிலம் நகரச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
    • டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதனை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் வி.கே. முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்க மீரான்மைதீன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கல்லூர் பாலா, ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் நவநீதன், தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மான், வட்ட செயலாளர் வேல்முருகன், ஆறுமுகம், மலை கண்ணன், தொப்பி காஜா, செல்வகுமார், ஜாய் மரகதம், சாலி மவுலானா, மைதீன் பிள்ளை, சாகுல் ஹமீது, அலி, முத்துச்சாமி, வேல்சாமி பாண்டியன், தர்வேஸ் மைதீன், காதர் ஒளி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்புவாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்புவாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர் அரசு தொடக்கப்பள்ளி, நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓலப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி, கரைப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, இளங்கோ நகர்

    அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி, தவுட்டுப்பாளையம் அரசு நடுப்பள்ளி, கூலக்கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி, நன்செய் புகளூர் அரசு தொடக்கப்பள்ளி, வேளாண்மை அலுவலகம், காந்தியார் நடுநிலைப்பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புகளூர் சர்க்கரைஆலை பள்ளி, புன்னம் சத்திரம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள். சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

    • உசிலம்பட்டியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் பி.கே.எம் அறக் கட்டளை, ரோட்டரி நலச்சங்கம் மற்றும் எக்விடாஸ் அறக் கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமை தாங்கினார். பி.கே.எம். அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் பிரேமலதா வரவேற்று பேசினார். உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் முகாமை துவக்கி வைத்து பேசினார். ரோட்டரி மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் துணை ஆளுநர் சேகர் தலைவர் ராம் பிரகாஷ் செயலாளர் செந்தில் குமார் எக்விடாஸ் அறக்கட்டளை சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் துணை தலைவர் கிறிஸ்டோபர் மேலாளர் ராஜா, பிரபு பி.கே.எம். அறக்கட்டளை துணை செயலாளர் இளஞ்செழியன் துணை தலைவர் பிரேம் ஆனந்த் முன்னாள் நிர்வாகி கள் ராஜா, ஜெயராஜ் அ.தி.மு.க நிர்வாகிகள் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். முகாமில் 50 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணி திட்ட பேராசிரியர்கள் சிவகுமார், திருசெல்வி மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

    • வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது. முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள்.

    சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இன்றும் இந்த முகாம் நடைபெறுகிறது.

    • கோவை மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் தொடங்கியது.
    • மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்

    கோவை,

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக வரைவுப்பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது.

    கோவை மாவட்டத்திலும் வாக்காளர் வரைவுபட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் 14,36,770 ஆண் வாக்காளர்களும், 15,51,665 பெண் வாக்காளர்களும், 569 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 30,49,004 பேர் உள்ளனர்.

    அன்றைய தினத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ளும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் தொடங்கியது.

    வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குசாவடிகளுக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா என்பதை சரிபார்த்தனர். அப்படி பெயர்கள் விடுபட்டிருந்தால், உரிய விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தனர். இதேபோல் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்பி கொடுத்து விண்ணப்பித்தனர்.

    சிறப்பு முகாமையொட்டி கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவ டிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    அவர்கள் அங்கு பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த முகாமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.கோவை  

    • மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 7-ந்தேதி நடக்கிறது
    • மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய் கிழமை வார்டு மறுவரை யறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 7-ந்தேதி சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    (மண்டலம் 4 (தெற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.29, செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார் புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண்.46 பழைய குயவர் பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதே மில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளி வீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகள்)

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.

    இந்த தகவலை மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×