என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் - வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது
- அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் கலெக்டர் தலைமை யில் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
- முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள் ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் கலெக்டர் தலைமை யில், அரியலூர் மாவட்ட நிர்வாகமும், அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் இணைந்து வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கலெக்டர் அலுவலகத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, பான் கார்டு, சாதி சான்று, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கடன் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு அழைப்பு கடிதம், கல்லூரியில் சேர்ந்த தற்கான கடிதம், கல்லூரி யின் சான்று, முதல் பட்ட தாரி சான்று, உறுதி மொழி சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப் படங்கள் ஆகிய ஆவணங்க ளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள் ளார்.






