search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Grievance"

    • மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 7-ந்தேதி நடக்கிறது
    • மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய் கிழமை வார்டு மறுவரை யறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 7-ந்தேதி சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    (மண்டலம் 4 (தெற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.29, செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார் புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண்.46 பழைய குயவர் பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதே மில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளி வீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகள்)

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.

    இந்த தகவலை மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை மாநகராட்சி மண்டலம் 5-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடக்கிறது.
    • மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையில் வார்டு மறு வரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    மண்டலம் 5 (மேற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.71 மாடக்குளம், 72 முத்துராமலிங்கபுரம், 73 முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, 74 பழங்காநத்தம், 78 கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, 79 தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, 80 வீரகாளியம்மன் கோவில் தெரு, 81 ஜெய்ஹிந்துபுரம், 82 சோலையழகுபுரம், 83 எம்.கே. புரம், 84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 91 மீனாட்சி நகர் அவனியாபுரம், 92 பாம்பன் சுவாமி நகர், 93 பசுமலை, 94 திருநகர், 95 சவு பாக்யாநகர், 96 ஹார்விப் பட்டி, 97 திருப்பரங்குன்றம், 98 சன்னதி தெரு, திருப்ப ரங்குன்றம், 99 பாலாஜி நகர், 100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகள்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமை தாங்கினார்.

    முகாமில் நாச்சியாபுரம், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி ஆகிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராஜ், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி, சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
    • ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

    பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள புகார்தாரர்கள் இரு தரப்பினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு வழக்குகளை முடிக்க ஆவண செய்யும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த முகாமில் கணவன்-மனைவி பிரச்சனை, நில பிரச்சனை, தகராறு உள்பட 6 மனுக்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த 6 மனுக்களையும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஒவ்வொரு மனுதாரர்களை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர். மற்ற 5 மனுதாரர்களும் கோர்ட்டு வழக்கு மூலம் தீர்வு கொள்வதாக தெரிவித்தனர்.

    • மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூார்து நகர், ஆத்திக்குளம், புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதி பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்க்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல ங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டலம் 4-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமை தாங்குகிறார்கள். இதில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜர் புரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    ×