search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camp"

    • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • கால்நடை மருத்துவர்கள் தீபக், அரவிந், நவீன்குமார் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்

    கரூர்

    கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் 6-ம் நாள் குளித்தலை சரகத்தில் உள்ள செல்லாண்டிபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் பால்வளத்துறை துணைப்பதிவாளர் த.சோ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், நன்றாக பராமரிக்க வேண்டும் என உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

    சங்க உறுப்பினர்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்றனர். அதிக பால் உற்பத்தி செய்த உறுப்பினர், நன்றாக கால்நடை பராமரிப்பு ஆகிய உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கள அலுவலர்கள் குமார், சதீஷ்குமார், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, ஆவின் உதவி பொது மேலாளர் மருத்துவர் துரையரசன் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் குறித்தும், நோய்கள் வராமல் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் சங்க உறுப்பினர்களுக்கு தனது சிறப்புரையில் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    கால்நடை மருத்துவர்கள் தீபக், அரவிந், நவீன்குமார் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கப்பட்டது. சங்க செயலாட்சியர் திரு.ந.முரளி வரவேற்புரையாற்றினார், செயலாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார் , ஆவின் பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம்

    வேலாயுதம்பா ளையம், 

    கரூர் மாவட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.

    புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மல்லீஸ்வரன் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் மூலம் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.

    முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகா விற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதா ரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசிஎண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர்.

    அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்த னர்.முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

    • வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.
    • முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    அரியலூர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் ,உடையார்பா ளையம் வரு வாய் கோட்டங்களில் வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.

    அரியலூர் கோட்டாட்சி யர் அலுவல கத்தில் நடை பெற்ற முகாமில், பொது மக்களிடமிருந்து பல்வேறு பட்டாக்கள் தொடர்பான 802 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதே போல் உடையார்பா ளையம் வருவாய் கோட்ட த்துக்கான முகாம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

    முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த இருமுகாம்களை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, தீர்வுக் காணப்பட்ட நபர்க ளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார்.

    இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர்கள் அரி யலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிம ளம் மற்றும் தாசில்தார்கள், வருவாய்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கருப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இன்று மருத்துவ முகாமை நடத்தியது. புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் கருணாநிதி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இம்முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதய மருத்துவம், நுரையீரல் , காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும், ஹூமோகிளோபின், இரத்த வகை கண்டறிதல், சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, இ.சி.ஜி. ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மருத்துவ குழுவினரால் 250 தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு ஆசோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 43 தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களால் மேற்பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து இயற்கை யோக தினமான இன்று ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாபழம், வாழைப்பழம், நெல்லிக்காய், ஊட்டச்சத்து பொடி, உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய "நலவாழ்வு பைகள்" முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர், மூலிகை தேநீர், பானகம், சிவப்பு அவுல், முளைகட்டிய பயிர் வகைகள், முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.

    மேலும் கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றமைக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மருத்துவர் முத்துகுமாருக்கு சுழற்கேடயத்தை வழங்கினார். கரந்தை, மகர்நோம்புசாவடி, சீனிவாசபுரம் சிறப்பிடம் பெற்றதற்காகவும் மருத்துவ குழுவினருக்கு பாரா ட்டுகளை தெரிவித்தார்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி தலைமையிலான மருத்துவர்கள் செய்திருந்தனர்.

    • கோரிக்கை மனுக்கள் மீது 15 நாளில் நடவடிக்கை
    • கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் காளப்பட்டி மெயின்ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியம், சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரி ஆகிய பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை நடக்க உள்ளது.

    இந்த முகாம் தொடர்பாக ஆலோசனைக்குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுரேஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத்சிங், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனை வோர் கலந்து கொண்டு எரிசக்திதுறையில் புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

    அவை இணையத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுடன் முதல்வர் முகாமுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.
    • இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கரூர்

    மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.

    இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    விழிப்புணர்வு முகாமில் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குநர் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கூட்டுறவு வார விழா வருடா வருடம் நவம்பர் மாதம் 14 முதல் 20-ந்தேதி வரையில் எதற்காக கொண்டாடப்படுகிறது, நவம்பர் 14-ம் தேதியில் குழந்தைகள் தினத்தன்று ஏன் தொடங்கி நடைபெறுகிறது எனவும், கூட்டுறவில் என்னென்ன வகையான சங்கங்கள் உள்ளது எனவும்,ஆவின் பாலில் உள்ள சத்துக்கள் குறித்தும்,கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் ஏன் உறுப்பினர்களாக சேரவேண்டும் எனவும், உறுப்பினர்களாக சேர்வத னால் உறுப்பினர்களுக்கு கிடைக்க கூடிய பயன்கள் என்ன எனவும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பி னர்களாக யார்யார் எல்லாம் சேரலாம் எனவும், உறுப்பினர்களாக சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்க ளில் அதன் உறுப்பினர்க ளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதனால் சங்கத்திற்கு கிடைக்கக்கூடிய லாபம் கூட்டுறவு சங்கங்களில் சட்டம் மற்றும் விதிகளின் படி சங்க உறுப்பினர்களுக்கே பிரித்து வழங்கப்படுகிறது எனவும்,18-வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் எனவும் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் சங்க உறுப்பினர்க ளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு முகாமில், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்திருப்பதி வரவேற்புரையாற்றினார்.கள அலுவலர் நீலாவதி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியா ளர்கள் மற்றும் பொதுமக்க ளும் விழிப்புணர்வு முகா மில் கலந்துகொண்டார்கள்.

    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், திருத்துவதற்கு வாய்ப்பு
    • வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களாக வழங்கி பயன்பெறலாம்

    கோவை,

    பொது விநியோக திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோவை மாவட்ட த்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும், வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக 18-ந் தேதி(நாளை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது.

    இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் நகல் குடும்ப அட்டை பெறுதல் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதியில்இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

    வேலாயுதம் பாளையம் 

    கரூர் மாவட்டம் டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதி யில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோ தனை முகாம் நடைபெற்றது.

    ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்த னர். ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோத னை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோத னை களை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    பொதுமக்கள் கீரை, காய்கறிகள் போன்ற சத்தா ன உணவுகளை அதிக அள வில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக கிராம பகுதியில் உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு உண்டான வழிமுறை செய்ய வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பானைகளை திறந்து வைக்காமல் மூடி இருக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். பொது மக்கள் பாது காப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
    • கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை தொகுப்புகள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    ஊட்டியில் கூட்டுறவு சங்கத்தின் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாள் நிகழ்ச்சி ஊட்டி அடுத்த கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

    அப்போது நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா் பதிவாளா் மற்றும் செயலாட்சியா் சி.அய்யனாா் முன்னிலையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் கால்நடை டாக்டர்கள் சிவசங்கா், டேவிட் மோகன், விஜயபிரபாகரன் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு மருத்துவம் பார்த்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பூச்சி மருந்து வழங்குதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு (பால்வளம்) சாா் பதிவாளா் ஒ.கே.பிரேமன், முதுநிலை ஆய்வாளா்கள் சுந்தரநடராஜன், சிவராஜ், கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க செயலாளா் மகாலிங்கம் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • வருகிற 18-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் உள்வட்டம் தெற்குத்தரவை (நியாய விலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-புதுரோடு- (நியாய விலைக்கடை), திருவா டானை வட்டம் - மல்லனூர் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - கள்ளிக்குடி (நியாய விலைக்கடை), முது குளத்தூர் வட்டம் - புல்வாய்க்குளம் (நியாய விலைக்கடை), கடலாடி வட்டம் - பிள்ளையார்குளம் (பஞ்சாயத்து இ-சேவை மையம்), கமுதி வட்டம் - பாக்குவெட்டி (நியாய விலைக்கடை) கீழக்கரை வட்டம் - நேருபுரம், (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - மோர்ப்பண்ணையில் (நியாயவிலைக் கடை) குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும்.

    இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப் பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத் திருத்தம், புகைப்படம் பதி வேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற் கொள்ளப்படும்.

    மேலும் நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத் திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
    • பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார்.

    மதுரை

    ஆண்டுதோறும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாள் விழா இளைஞர் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி திறமையான நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கு பல்கலைக்கழகம் வாரியாக முகாம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் இணைந்துள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிக ளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளின் முகாம் திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்து உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தொடங்கி வைத்தார். அன்னை பாத்திமா கல்லூரி யின் தாளாளர் எம்.எஸ். ஷா புதிய தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார். மாணவ- மாணவிகள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

    மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் செந்தில் குமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி ஆகியோர் பேசினர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் மாணவ-மாணவி களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனி யாண்டி, ராமுத்தாய், ஜோதி, உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு மற்றும் சிஸ்டம் என்ஜினீயர் உதய கதிரவன், மனிதவள மேனேஜர் முகமது பாசில் ஆகியோர் செய்தனர். இறுதியில் செந்தமிழ் கல்லூரி பேராசிரியர் பூங்கோதை நன்றி கூறினார்.

    • பொது நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் ஷத்ரியா வித்யாசாலா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு பொது சட்ட நுழைவுத்தேர்விற்கு விண் ணப்பித்துள்ள மாணவர்க ளுக்கான சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து, மாதிரி வினாக்க ளுக்கு தீர்வு அளித்து, மாண வர்களுக்கு விளக்கி பாடம் கற்பித்தார்.

    பின்னர், அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணு கும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவு ரைகளை வழங்கினார்.

    மேலும், இந்த போட்டித் தேர்வில் பெரும்பாலும் வரும் கேள்விகளுக்கு குறைந்தபட்ச புரிதலும், தொடர் பயிற்சியும், கடந் தாண்டு வினாத்தாள்களை ஆராய்ந்தும் தங்களை தயார்படுத்திக் கொண்டால், தேர்வில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×