search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camp"

    • வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலுக்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்திட ஏதுவாக தேர்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை ( சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கடந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள தவறிய பொது மக்கள் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இச்சிறப்பு முகாமில் 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் அடுத்து வரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதிநாளில் (அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1) 18 வயதினை பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, படிவம் எண் 6 பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களினால் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 பூர்த்தி செய்தும், வாக்களார் பட்டியலில் அனைத்து வகையான திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8 பூர்த்தி செய்தும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு படிவம் 6பி பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும், மேற்படி முகாமினை பயன்படுத்திகொள்ள இயலாத வாக்காளர்கள் அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 9.12.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மற்றும் Voters Help Line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

    மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • 28-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முகாம் நடக்கிறது.
    • தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம்.

    கோவை,

    கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குறைதீர்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடக்கிறது.

    கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், பாரதி பார்க் சாலை, வனக்கல்லூரி வளாகம் அருகில், சாய்பாபா காலனி, கோவை.

    திருப்பூரில் சி.ஆர். கார்மெண்ட்ஸ், ஸ்ரீகோகுல கிருஷ்ணா நகர், டி.கே.டி. மில்ஸ் பல்லடம் சாலை, திருப்பூர்.

    நீலகிரியில் ஜே.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோஸ் கார்டன் அருகில் ஊட்டி.

    மேற்கண்ட இடங்களில் நடைபெற உள்ள இம்முகாமில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள். ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    • பா.ஜ.க. மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் தலைமையில், புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • பின்னர் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    புதுக்கோட்டை

    பா.ஜ.க. மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் தலைமையில், புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை திருமயம் சாலை அரசு மாமன்னர் கல்லூரி எதிரில் பந்தல் அமைத்து நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாமில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இம்முகாமில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மிஸ்டுகால் கொடுத்து பா.ஜ.க.வில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். புதுக்கோட்டை நகர பா.ஜ.க. இளைஞரணித் தலைவர்கள் சுதாகர்,சிரஞ்சீவி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • திருப்பத்தூரில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கலெக்டர் பங்கேற்று ஆய்வு நடத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் ''மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் சிறப்பு முன்னோடி முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலமைச்சரின் புதிய திட்டமான "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டம் தமிழகத்தில் செயல்ப டுத்தப்படவுள்ளது. இதில் அரசின் 13 துறைகள் பங்கேற்க வுள்ளன. இத்துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்க ளின் பயன்களை பெறு வதற்கு ஏதுவாக இம்மு காமினை நடத்துவதற்கு முதல்-அமைச்சரால் உத்தர விடப்பட்டுள்ளது.

    அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 6 மாநக ராட்சிகள், 7 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 பிற நகர் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடை பெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று நடந்த முகாமில் மொத்தம் 944 மனுக்கள் பெறப் பட்டுள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய பலன்கள் வழங்கப்படும்.

    இதுபோன்று, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்க ளை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலு வலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்கள் நல சட்டங்கள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள்ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும், காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்கள் நல சட்டங்கள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கல்லூரி முதல்வர் மல்லிகாதேவி தலைமை தாங்கினார். காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் ஜெகதீசன், பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இந்த முகாமில் பெண்கள் நல சட்டங்களான வரதட்சணை தடை சட்டம், குழந்தைத் திருமண தடை சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்திய விவாகரத்து சட்டம், மகப்பேறு நன்மை சட்டம், மருத்துவக் கருவுறுதல் சட்டம், வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், தேசிய மகளிர் ஆணைய சட்டம், சம ஊதிய சட்டம் பற்றியும் மாணவ மாணவிகளிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.


    வேலாயுதம்பாளையம்


    கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமைதொடங்கி வைத்தார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், உதவி இயக்குநர் டாக்டர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் டாக்டர் உஷா, டாக்டர் தமிழரசன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், சிகிச்சைப் பணிகள், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை போன்ற பணிகள் மேற்க்கொண்டனர். விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. .சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. முகாமில் திருக்காடுதுறை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.




    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
    • நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே செல்வநகர் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. எனவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

    • முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார்
    • ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பரஞ்சேர்வழியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    1996-ம் ஆண்டு 4-வது முறையாக தமிழக முதல்வராக கலைஞர் பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல், கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க, இது சிறந்த திட்டமாக உள்ளது. இன்று பரஞ்சேர்வழி ஊராட்சியில் நடைபெற்ற ஒரு இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். என்றார்.

    முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுவான நோய்கள், இருதய நோய், சர்க்கரை நோய், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை தொடர்பான நோய், கண் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகளுக்கான மருத்துவம், தோல் நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முகாம் மூலம் 480 பேருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை சார்ந்த 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்று பணிபுரிந்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
    • 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

    ஊட்டி,

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கே.பி.டி.எல் பவுண்டேஷன், ஆல் த சில்ரன் ஒயிட் அரோ டிரஸ்ட், நீலகிரி உதவும் கரங்கள் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நீலகிரி உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகி சாரதா முன்னிலை வகித்தனர்.

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் அந்தோனியமமாள், ராகுல் உள்ளிட்டோர் கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    • கண் அறுவை சிகிச்சைக்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

    சேர்மன் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 90-க்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் கண் அறுவை சிகிச்சைக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இதில் உறுப்பினர்கள் அண்ணாத்துரை, செந்தில், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை மற்றும் கால்நடை பராம்பரிப்புத்துறை இணைந்து டிஆர்டீ.182 அயிலூர் பால் உற்பததியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை சிகிச்சை முகாமில் சிறந்த கன்றுக்குட்டிகளுக்கு பரிசுகளை கால்நடைத்துறை உதவி இயக்குனர் குணசேகரன் வழங்கினர். அருகில் பால்வளத்துறை கூட்டுறவு சர்பதிவாளர் விஜயா பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக fileim கண்காணிப்பாளர் ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விஸ்வநாதன், ஆவின் உதவி பொது மேலாளர் முனுசாமி, ஆவின் கால்நடை மருத்துவர் அன்பழகன், விரிவாக்க அலுவலர் இளங்கோவன், கால்நடை மருத்தவ குழு சிறுவாச்சூர், ஆவின் மருத்துவ குழு இணைந்து முகாமில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கச் செயலாட்சியர் பிரேம்குமார் செய்து இருந்தார்.

    ×