search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு முகாம்
    X

    கோவை, திருப்பூர், நீலகிரியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு முகாம்

    • 28-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முகாம் நடக்கிறது.
    • தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம்.

    கோவை,

    கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குறைதீர்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடக்கிறது.

    கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், பாரதி பார்க் சாலை, வனக்கல்லூரி வளாகம் அருகில், சாய்பாபா காலனி, கோவை.

    திருப்பூரில் சி.ஆர். கார்மெண்ட்ஸ், ஸ்ரீகோகுல கிருஷ்ணா நகர், டி.கே.டி. மில்ஸ் பல்லடம் சாலை, திருப்பூர்.

    நீலகிரியில் ஜே.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோஸ் கார்டன் அருகில் ஊட்டி.

    மேற்கண்ட இடங்களில் நடைபெற உள்ள இம்முகாமில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள். ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×