கண் சிகிச்சை முகாமில் 90 பயனாளிகள் பயன்அடைந்தனர்

கண் அறுவை சிகிச்சைக்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.
பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

முன்னதாக செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

சேர்மன் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.

முகாமில் 90-க்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் கண் அறுவை சிகிச்சைக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் உறுப்பினர்கள் அண்ணாத்துரை, செந்தில், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com