search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Common Entrance Test"

    • பொது நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் ஷத்ரியா வித்யாசாலா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு பொது சட்ட நுழைவுத்தேர்விற்கு விண் ணப்பித்துள்ள மாணவர்க ளுக்கான சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து, மாதிரி வினாக்க ளுக்கு தீர்வு அளித்து, மாண வர்களுக்கு விளக்கி பாடம் கற்பித்தார்.

    பின்னர், அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணு கும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவு ரைகளை வழங்கினார்.

    மேலும், இந்த போட்டித் தேர்வில் பெரும்பாலும் வரும் கேள்விகளுக்கு குறைந்தபட்ச புரிதலும், தொடர் பயிற்சியும், கடந் தாண்டு வினாத்தாள்களை ஆராய்ந்தும் தங்களை தயார்படுத்திக் கொண்டால், தேர்வில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நுழைவு தேர்விற்கான பயிற்சிக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது
    • இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கானசட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி க்கு இலவசமாகவழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும்.

    இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, நேர்காணல், குழு விவாதம், எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. 

    • அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    சேலம்:

    ராணுவத்தில் சேருவ தற்கான அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது. ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் ராணுவ ஆள் சேர்ப்பில் முதல் முறையாக எழுத்து தேர்வுக்கு பின்பு தான் உடற்தகுதி தேர்வு நடை பெறும் என மத்திய பாது காப்பு அமைச்சகம் கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு அறிவித்தது.

    இந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்பு வோர் மார்ச் மாதம் 15-ந்தே திக்குள் பதிவு செய்ய அனும திக்கப்பட்டனர். பதிவு செய்த நபர்களுக்கு பொதுத் நுழைவு தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஷிப்ட் முறையில் இந்த தேர்வு நடக்கிறது.

    சேலம், நாமக்கல் இளைஞர்கள்

    இந்த தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி உள்பட சில நகரங்களி லும் புதுச்சேரி யிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்க ளில் சேலம், நாமக்கல், தரும்புரி, கிருஷ்ணகிரி மாவட்ட இளை ஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆன்லைன் வழியாக எழுதுகிறார்கள். குறிப்பாக இந்த 4 மாவட்டங்க ளிலும் இருந்தும் ராணுவத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் திரளான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்

    • இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் என்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ந்தேதி வெளியிடப்படது.

    சேலம்:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகம், மாநில பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் என்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ந்தேதி வெளியிடப்படது.

    சேலம், நாமக்கல்...

    இந்த நிலையில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் என்ற பல்கலைக்கழக பொதுநுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட மாவட்டங்களில் உள்ள இளநிலை பட்டதாரிகள் உள்பட நாடு முழுவதும் 6.07 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டு, தரவரிசை பட்டியல் என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து , மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி). அறிவுறுத்தி உள்ளது.

    ×