search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய ராணுவத்தில் சேர பொது நுழைவு தேர்வு தொடங்கியது
    X

    இந்திய ராணுவத்தில் சேர பொது நுழைவு தேர்வு தொடங்கியது

    • அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    சேலம்:

    ராணுவத்தில் சேருவ தற்கான அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது. ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் ராணுவ ஆள் சேர்ப்பில் முதல் முறையாக எழுத்து தேர்வுக்கு பின்பு தான் உடற்தகுதி தேர்வு நடை பெறும் என மத்திய பாது காப்பு அமைச்சகம் கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு அறிவித்தது.

    இந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்பு வோர் மார்ச் மாதம் 15-ந்தே திக்குள் பதிவு செய்ய அனும திக்கப்பட்டனர். பதிவு செய்த நபர்களுக்கு பொதுத் நுழைவு தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஷிப்ட் முறையில் இந்த தேர்வு நடக்கிறது.

    சேலம், நாமக்கல் இளைஞர்கள்

    இந்த தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி உள்பட சில நகரங்களி லும் புதுச்சேரி யிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்க ளில் சேலம், நாமக்கல், தரும்புரி, கிருஷ்ணகிரி மாவட்ட இளை ஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆன்லைன் வழியாக எழுதுகிறார்கள். குறிப்பாக இந்த 4 மாவட்டங்க ளிலும் இருந்தும் ராணுவத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் திரளான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்

    Next Story
    ×