search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 22-ந் தேதி மக்களுடன் முதல்வர் முகாம்
    X

    கோவையில் 22-ந் தேதி மக்களுடன் முதல்வர் முகாம்

    • கோரிக்கை மனுக்கள் மீது 15 நாளில் நடவடிக்கை
    • கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் காளப்பட்டி மெயின்ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியம், சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரி ஆகிய பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை நடக்க உள்ளது.

    இந்த முகாம் தொடர்பாக ஆலோசனைக்குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுரேஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத்சிங், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனை வோர் கலந்து கொண்டு எரிசக்திதுறையில் புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

    அவை இணையத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுடன் முதல்வர் முகாமுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×