search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னை பாத்திமா கல்லூரி"

    • அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
    • பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார்.

    மதுரை

    ஆண்டுதோறும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாள் விழா இளைஞர் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி திறமையான நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கு பல்கலைக்கழகம் வாரியாக முகாம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் இணைந்துள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிக ளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளின் முகாம் திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்து உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தொடங்கி வைத்தார். அன்னை பாத்திமா கல்லூரி யின் தாளாளர் எம்.எஸ். ஷா புதிய தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார். மாணவ- மாணவிகள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

    மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் செந்தில் குமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி ஆகியோர் பேசினர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் மாணவ-மாணவி களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனி யாண்டி, ராமுத்தாய், ஜோதி, உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு மற்றும் சிஸ்டம் என்ஜினீயர் உதய கதிரவன், மனிதவள மேனேஜர் முகமது பாசில் ஆகியோர் செய்தனர். இறுதியில் செந்தமிழ் கல்லூரி பேராசிரியர் பூங்கோதை நன்றி கூறினார்.

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற உலக சுற்றுலா தின பேரணி நடந்தது.
    • பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருமங்கலத்தில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுற்றுலா விழிப்பு ணர்வு பேரணி நடைபெற் து. கல்லூரி முதல்வர் டாக்டர். எம்.அப்துல் காதிர் பேரணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசு கையில், முதன்முதலில் 1980-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதியை சுற்றுலா தின மாக ஐ.நா. சபை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. உலகளாவிய சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் கான பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. உலகின் பல்வேறு முக்கிய மான இடங்களை, கலாசார ரீதியாக தெரிந்து கொள்ள உதவுகிறது. சுற்றுலா மூலம் பொருளாதாரம் விரிவடை யும், உலக நாடுகளுக்குள் நல்லுறவு, சமாதானம், கலா சாரம் மேம்படும் என்றார்.

    பேரணி ஏற்பாட்டை ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் முனி யாண்டி, பேராசிரியர் கள் செந்தில், அருண், கங்கா தரன், சிங்கராஜா, சீமாட்டி, உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார், சிஸ்டம் என்ஜினீயர் உதய கதிரவன் உள்ளிட்டோர் செய்தனர். திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் ஆரம்பித்து தாலுகா அலுவலகம் அருகில் நிறைவுற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்ஷா பந்தன் விழா கல் லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசுகை யில், சகோதர, சகோதரிக்கு இடையேயான உறவு பந் தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத் தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ரக்ஷாபந்தன் விழா.

    இப்பண்டிகையை, 'ராக்கி' என்றும் அழைப்பர் எனவும், இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட் டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர் என்றும் ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாது காப்பு பந்தம்' என்றும் பொருள் எனவும் பேசினார்.

    இதையடுத்து திருமங்கலம் பிரம்ம குமாரிகள் அமைப் பச் சேர்ந்த புனிதா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிருக்கு ராக்கி கயிறு கட்டினார். அப்போது அவர் பேசுகையில், தீய விஷயங்கள் மற்றும் தீவி னைகளில் இருந்து சகோ தரர்களைக் காப்பாற்ற வும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயு ளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்ப டுகிறது எனவும் கூறினார்.

    பின்பு, நிர்வாக மேலாண் மைத்துறை இயக்குனர் டாக்டர். நடேசபாண்டியன், மேலாண்மை துறை பேரா சிரியர் டாக்டர் நாசர் மற்றும் பேராசிரியர்கள் தங்கபாண்டியன், திருப்பதி, சிங்கராஜா, ராமுத்தாய், கார்த்திகா, மணிமேகலை, ஜோதி, ஆறுமுக ஜோதி, முதல்வர் அலுவலக ஊழி யர் பிரியங்கா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு ராக்கி கயிறு அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட் டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல், நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்க–ளுக்கு வழிகாட்டுதல் மற்றும் நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல்காதர் வரவேற்றார்.

    கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார். கல்லூரி முதன்மை அதிகாரி எம்.எஸ்.சகிலா ஷா, நியூக் ளியர் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, முன் னாள் முதல்வர் டாக்டர் நவராஜ் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கருணாகரன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். (சமூக பொருளாதார மறு கட்டமைப்பு வளர்ச்சி நிறு–வன தலைவர்) சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலாம் ஆண்டு மாண–வர்கள் வருகையை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி–றோம். கல்லூரி வந்துள்ள கடைசி நிமிடங்களில் படித்து தேர்வு எழுதலாம் என்று நினைப்பது கை கொடுக்காது. கல்லூரி கல்வியை கற்றுத் தேர்வது மாணவர்களுடைய கையில் தான் உள்ளது. மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பெற் றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

    மாணவர்கள் உலகத்தை வெல்ல வேண்டும் என்றால் நீ முதலில் உன்னை வெல்ல வேண்டும். மாணவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைவ–தற்கு அவர்களுக்குள்ளேயே ஒரு உந்து சக்தியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு நூலகங் களை அதிகமாக பயன்ப–டுத்துவதோடு கல்லூரி பேராசிரியர்களின் திறமை–யும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூ–ரியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட், ஏவியே–சன் ஸ்டடி, தடையவியல் துறை, மேலாண்மை துறை, கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி பேரா–சிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல் லூரி பேராசிரியை கார்த் திகா நன்றி தெரிவித்தார்.

    ×