search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு வழிகாட்டல்"

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல், நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்க–ளுக்கு வழிகாட்டுதல் மற்றும் நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல்காதர் வரவேற்றார்.

    கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார். கல்லூரி முதன்மை அதிகாரி எம்.எஸ்.சகிலா ஷா, நியூக் ளியர் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, முன் னாள் முதல்வர் டாக்டர் நவராஜ் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கருணாகரன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். (சமூக பொருளாதார மறு கட்டமைப்பு வளர்ச்சி நிறு–வன தலைவர்) சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலாம் ஆண்டு மாண–வர்கள் வருகையை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி–றோம். கல்லூரி வந்துள்ள கடைசி நிமிடங்களில் படித்து தேர்வு எழுதலாம் என்று நினைப்பது கை கொடுக்காது. கல்லூரி கல்வியை கற்றுத் தேர்வது மாணவர்களுடைய கையில் தான் உள்ளது. மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பெற் றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

    மாணவர்கள் உலகத்தை வெல்ல வேண்டும் என்றால் நீ முதலில் உன்னை வெல்ல வேண்டும். மாணவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைவ–தற்கு அவர்களுக்குள்ளேயே ஒரு உந்து சக்தியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு நூலகங் களை அதிகமாக பயன்ப–டுத்துவதோடு கல்லூரி பேராசிரியர்களின் திறமை–யும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூ–ரியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட், ஏவியே–சன் ஸ்டடி, தடையவியல் துறை, மேலாண்மை துறை, கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி பேரா–சிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல் லூரி பேராசிரியை கார்த் திகா நன்றி தெரிவித்தார்.

    ×