search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாய்ப்பு முகாம்
    X

    வேலை வாய்ப்பு முகாம்

    • உசிலம்பட்டியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் பி.கே.எம் அறக் கட்டளை, ரோட்டரி நலச்சங்கம் மற்றும் எக்விடாஸ் அறக் கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமை தாங்கினார். பி.கே.எம். அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் பிரேமலதா வரவேற்று பேசினார். உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் முகாமை துவக்கி வைத்து பேசினார். ரோட்டரி மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் துணை ஆளுநர் சேகர் தலைவர் ராம் பிரகாஷ் செயலாளர் செந்தில் குமார் எக்விடாஸ் அறக்கட்டளை சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் துணை தலைவர் கிறிஸ்டோபர் மேலாளர் ராஜா, பிரபு பி.கே.எம். அறக்கட்டளை துணை செயலாளர் இளஞ்செழியன் துணை தலைவர் பிரேம் ஆனந்த் முன்னாள் நிர்வாகி கள் ராஜா, ஜெயராஜ் அ.தி.மு.க நிர்வாகிகள் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். முகாமில் 50 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணி திட்ட பேராசிரியர்கள் சிவகுமார், திருசெல்வி மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×