search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breast cancer"

    • நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும்.

    பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது.

    இந்த நோய் வருவதற்கு பரம்பரைதான் முக்கிய காரணம். குடும்பத்தில் அம்மா, அக்கா, தங்கை மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்திருக்குமானால், அந்த குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தராத பெண்களுக்கும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்திய பெண்களுக்கும் இது வருவதுண்டு.

    சிறு வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதும் இந்த நோய்க்கு வரவேற்பு தருகிறது. கோவிலுக்கு செல்லும்போதும், வீட்டில் விசேஷ நாட்களின்போதும் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இளம் வயதில் இதை எடுத்துக்கொண்டாலும் 20 வருடங்கள் கழித்து மார்பகப் புற்றுநோய்க்கு அது வழி அமைத்து விடுகிறது. பெண்களுக்கு மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் துணைபோவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவுக்கு மீறி சுரந்து விட்டால் மார்பக வளர்ச்சியை அதிகப்படுத்தி விடும்.

    இளம் வயதில் இது அழகாக இருக்கலாம். 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும். குறிப்பாக, இன்றைய இளம் பெண்கள் விரைவு உணவையும் பாக்கெட் உணவையும் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதே வேளையில் மார்பகத் திசுக்களும் பெருகுகின்றன. இது இயற்கையை மீறி நிகழ்வதால், மார்பகத்தில் கட்டிகள் உருவாகவும் இது வழி செய்கிறது. அந்தக் கட்டி புற்றுநோயாக மாறுவதற்கும் இடம் தருகிறது.

    குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொண்ட பெண்களுக்கும், குழந்தையே இல்லாத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம். அதேபோல 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. கணவர் புகைபிடிப்பவராக இருந்தால், அந்தப் புகையைச் சுவாசிக்கிற மனைவியையும் இது தாக்கும் ஆபத்து பல மடங்கு அதிகம்.

    மார்பக தோலின் நிற மாற்றம், தோல் சுருங்குதல், மார்பக காம்புகள் உள்நோக்கி இழுத்தல், காம்பிலிருந்து நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்பகத்தில் கட்டி, வலி, அக்குளில் கட்டி போன்றவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். இவற்றை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொண்டால் முழுவதுமாக குணம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, நோயைக் கவனிப்பதில் தாமதப்படுத்தி, நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் இந்த நோயால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகம்.

    • சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.

    குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

    அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.

    • கோவை மெடிக்கல் சென்டர் டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார்.
    • பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    திருப்பூர் :

    ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், ஏ.வி.பி. பள்ளியின் இண்ட்ராக்ட் கிளப், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இணைந்து ஹீல் திட்டத்தின் கீழ் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சந்திரன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவரும், ரோட்டரி மாவட்ட பயிற்றுனருமான கார்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜ், உதவி ஆளுனர் மெல்வின் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், ஹீல் திட்டத்தின் மண்டல செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் பி.லிட் லீலாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முகாமில் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏ.வி.பி. அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டது
    • வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது

    வள்ளியூர்:

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து, குறிப்பாக முதல் கட்டம், 2-வது கட்ட மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கான ஆலோசனையும் மருந்துகளும் வழங்கினர். சுமார் 22 பெண்கள் கலந்து கொண்டு பலன் அடைந்தார்கள். வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் மேக்ரோ காலேஜ் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமையில் வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் வள்ளியூர் சென்ரல் ரோட்டரி சங்கத்தின் கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் டாக்டர் சங்கரன் அவர்களும் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், செயலர் சுதிர்ந்தன், டாக்டர்கள் ஜேக்கப், ஜெய்கணேஷ், முன்னாள் தலைவர் பிரபா நவமணி, முன்னாள் தலைவர் வேல்முருகன், டாக்டர் தாமரைச்செல்வி கலந்து கொண்டனர். செயலர் சுகர்கந்தன் நன்றி கூறினார்.

    • உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது
    • பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர்.

    நெல்லை:

    பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய புற்றுநோய் களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது.

    பிங்க் மாதம்

    எனவே உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதம் என்று அறிவிக்கப்பட்டு அதன் அறிகுறிகள் முதல் மீண்டு வருவது வரை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிமுறைகளை வலியுறுத்தி வருவதே இம்மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இதனையொட்டி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வழிகாட்டு தலின்படி, புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    கலந்துரையாடல்

    பேரணியை மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர். தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களின் சாதனை கூட்டத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரை யாடலும் நடைபெற்றது.

    புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றி, மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    மார்பக புற்று நோயிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகள் கொரோனா காலம் தொட்டு இன்றுவரை தாங்கள் பயணித்து வந்த உணர்வு பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கேட்போரை கண் கலங்க செய்தது.

    தொடர்ந்து, அவர்கள் கூறுகையில், இங்கு எங்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் இலவசமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளும் பெற்று வருகிறோம். அனைவரின் சார்பிலும் மருத்துவமனை நிர்வாகத்தி ற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நமது அரசாங்கத்திற்கும் நன்றி கூறுவது மிகவும் பெருமையாக கருதுகிறோம் என்றனர்.

    நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செவிலியர்கள் கலந்து கொண்ட மார்பக புற்றுநோய் குறித்த பட்டி மன்றம் நடந்தது.

    தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கவிதை, ஓவிய போட்டி மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன.‌

    நிகழ்ச்சியில் கதிரியக்க துறைத் தலைவர் தெய்வநாயகம், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பியூலா, தலைமை செவிலி யர் கண்காணிப்பாளர் திருமால் தாய், செவிலியர் போதகர் ஆயிரத்தம்மாள் மற்றும் பல்வேறு மருத்துவத் துறையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிங்க் கலர் பலூன்களை பறக்கவிட்டனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

    • மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம்.
    • மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது.

    மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் ஆண்களும் பாதிப்புக்கு ஆளாகலாம். சமீபத்தில் புதுடெல்லியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அதில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆண்களில் ஒரு சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மும்பையை சேர்ந்த பிரபல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அனில் ஹரூர் தெரிவித்துள்ளார். மார்பக புற்றுநோய் பாலினத்தை பொறுத்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    ஆண், பெண் இரு பாலருமே சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை, நோய் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்றும் அவர் கூறுகிறார். ''மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது. ஏனெனில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், புற்றுநோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. சமீப காலமாக ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது'' என்றும் குறிப்பிடுகிறார்.

    45 வயதுடைய ஆண் ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்கிறார். ''அந்த நபருக்கு மார்பகம் பெரிதாகிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் வலி இல்லாமல் இருந்ததால் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டார். நாளடைவில் மார்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்ததால் தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு வந்தார். அவரது மார்பு பகுதியில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தோம். அது வெடிக்கும் தருவாயில் இருந்தது.

    உடனே கட்டியின் அளவைக் குறைக்க கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது மார்பக திசு மற்றும் பாதிக்கப்பட்ட தசை பகுதி அகற்றப்பட்டது. ஆண்களுக்கு, மேமோகிராபி சிகிச்சை மேற்கொள்வது சவாலானது. எனவே, சோனோகிராபி மற்றும் பயாப்ஸி முறையில் சிகிச்சை அளித்து புற்றுநோயை கண்டறிந்தோம். துரதிருஷ்டவசமாக தாமதமாக மருத்துவ சிகிச்சையை நாடியதால் புற்றுநோய் பரவ தொடங்கி இருந்தது.

    ஆண்களுக்கு மார்பக திசுக்கள் குறைவாக இருப்பது புற்றுநோய் விரைவாக பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது. எனினும் அவரது தசைகளை மட்டுமே பாதித்தது. கல்லீரல், நுரையீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் புற்றுநோயின் தீவிர நிலையில் இருந்து அவரை காப்பாற்றிவிட்டோம்.

    ஆண்கள் இந்த விஷயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு வெட்கப்படவோ, தயங்கவோ கூடாது. குறிப்பாக மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம். குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்திருந்தால் மற்றவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். எனவே மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அசட்டையாக இருக்காமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

    • தினசரி 25 பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வரை மூன்று நாட்களில் 78 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
    • முகாம் கடைசி நாளான இன்று மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கம் மற்றும் தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் தினசரி 25 பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வரை மூன்று நாட்களில் 78 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முகாம் கடைசி நாளான இன்று மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கங்களின் மாவட்ட தலைவர் சூரிய பிரபா ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் தங்கமயில் ஜூவல்லரியின் முதன்மை இயக்க அதிகாரி விஷ்வ நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசினார். இந்து மிஷன் மருத்துவமனையின் நிர்வாகி சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா நாகராஜன் பேரணி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் மீனா சுரேஷ், ஆண்ரூஸ் சேகர், உமா சந்தோஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

    • திருச்சி இந்து மிஷன் மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் நடைபெற்றது
    • தொடர்ச்சியாக 4 நாட்கள் 100 பேருக்கு பரிசோதனை செய்து அதனை ஜெட்லீ புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்ய இருக்கிறது

    திருச்சி:

    திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் கிளப், திருச்சி தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோயை கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் இந்து மிஷன் ஆஸ்பத்திரியில் இன்று காலை தொடங்கியது.

    தங்கமயில் ஜூவல்லரி முதன்மை இயக்க அதிகாரி ரோட்டேரியன் வி.விஷ்வா நாராயணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பெண்களின் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மெமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒரு எந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள முடியும். தொடர்ச்சியாக 4 நாட்கள் 100 பேருக்கு பரிசோதனை செய்து அதனை ஜெட்லீ புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்ய இருக்கிறோம்.

    4-வது நாள் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்றார்.

    இந்து மிஷன் ஆஸ்பத்திரி நிர்வாகி சுப்பிரமணியம், திருச்சி இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் வள்ளியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைவர் கவிதா நாகராஜன், செயலாளர் மீனா சுரேஷ் , ரோட்டேரியன் நாகராஜன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூஸ் சேகர், சி.ஜி.ஆர்.உமா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மார்பக புற்றுநோய் பெண்களிடையே அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே.
    • பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம்.

    மார்பக புற்றுநோய் பெண்களிடையே அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். 80 சதவீத மார்பகக் கட்டிகள், புற்றுநோயாக இருப்பதில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதாகும். பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். இது தொடர்பான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் விரைவில் குணப்படுத்த முடியும் என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் தமிழ்செல்வி.

    சுய பரிசோதனை செய்யும் முறை:

    * கண்ணாடி முன் நின்று கொண்டு மார்பகங்களை கவனிக்கவும். கைகளைத் தலைக்கு மேல் தூக்கிய நிலையிலோ அல்லது இடுப்பின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டோ மார்பகங்களை சற்று முன்னிறுத்தி உற்று நோக்கவும். மார்பகங்களில் தடிப்பு, வீக்கம், மரு, நிற மாறுபாடு மற்றும் மார்பக காம்புகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

    * கைவிரல்களைத் தட்டையாக வைத்துக் கொண்டு, நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ மார்பகத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மேலும் கீழுமாக அழுத்திப் பார்க்கவும். வட்டவடிவத்தில் மார்பகத்தை சுற்றியும், மார்பக காம்புகளையும், அக்குள் பகுதி தொடங்கி அழுத்தியும், தடவியும் பார்க்கவும். இதன் மூலம் கட்டிகள், வீக்கங்கள் மற்றும் மார்பகக் காம்பில் ஏதேனும் திரவம் ரத்தம் கலந்த நிலையில் வெளியேறுகிறதா எனவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    * நின்று கொண்டு செய்த அதே சுய பரிசோதனையை, கீழே நேராக நிமிர்ந்து படுத்தவாறும் செய்து பார்க்கவும். வலது தோளுக்கு கீழே தலையணை வைத்துக்கொண்டு, வலது கையை தலைக்கு கீழே வைத்தபடி, வலது மார்பகத்தை இடது கை கொண்டு பரிசோதிக்கவும். இவ்வாறு இடது மார்பகத்தையும் பரிசோதிக்கவும்.

    பரிந்துரைகள்:

    * மார்பக சுய பரிசோதனையை மாதவிடாய் காலத்தின் இறுதி நாட்களில் செய்வது சிறந்தது. பெண்கள் 20 வயது முதல் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    * இந்த சுய பரிசோதனையின் மூலம் மார்பகங்கள் உங்களுக்கு பரிச்சயமாகி விடுவதால், மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் எளிதில் தெரிந்துகொண்டு, மருத்துவரை அணுகி தீர்வு காண முடியும்.

    * 29 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறை 'மெமோகிராம் பரிசோதனை' செய்து கொள்வது நல்லது.

    * புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் 80 சதவீதம் குணப்படுத்த முடியும். சுய பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

    மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா.
    மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா. இவரது தலைமையிலான குழுவினர் வடிவமைத்த அந்த அதிசய பிராவை 250 பெண்களை அணியவைத்து பரிசோதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது, இந்த பிரா மூலம் தொடக்க நிலையிலே கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளித்து குணப்படுத்திவிட்டார்கள்.

    ஐந்து வருடங்களுக்கு முன்பு சீமாவின் காதுகளில் விழுந்த உரைதான், அவரை உறக்கமில்லாத அளவுக்கு சிந்திக்கவைத்து இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்திருக்கிறது. அந்த உரை புற்றுநோய் ஆராய்ச்சி மைய டாக்டர் சதீசனால், கேரளாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.

    அவர், ‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒன்றரை லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாற்பது வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தொடக்கத்திலே கண்டறியும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால்தான் இந்த பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு?’ என்று எலக்ட்ரானிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த கேள்வி, அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முனைவர் சீமாவை ஆழமாக சிந்திக்கவைத்திருக்கிறது.

    எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டு பிடிப்பை உருவாக்கி, அதன் மூலம் மார்பக புற்றுநோயை முதலிலே எப்படி கண்டறியலாம்? என்று சிந்தித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு அதற்கான தீர்வை கண்டுபிடித்துவிட்டார். மார்பக புற்றுநோயை கண்டறியும் பிராவை உருவாக்கி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார்கள். இதை முனைவர் சீமா பணிபுரியும் சீமெட் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது.

    “இ்ந்த பிராவில் சென்சர் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பெண்கள் அணியும்போது அதிலுள்ள சாக்கெட் மூலமாக கம்ப்யூட்டருக்கு படங்கள் கிடைக்கும். அதைவைத்து, அவரது மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடலாம்” என்று முனைவர் சீமா சொல்கிறார். அதற்காக இவருக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.

    அவரிடம் சில கேள்விகள்:

    எப்படி இந்த பிரா மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது?

    புற்றுநோய் பாதித்த திசுக்கள் பரவும்போது உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் தோன்றும். அதனை கண்டறிவதற்காக ஒரு மில்லி மீட்டர் நீளமும், ஒரு மில்லி மீட்டர் அகலமும், ஒன்றரை மில்லி மீட்டர் கனமும் கொண்ட சென்சர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வடிவமைத்து காட்டன் துணியில் உருவான பிராவுக்குள்வைத்து தைத்திருக்கிறோம். அவைகள் மூலமான தகவல்கள் கம்ப்யூட்டர் வழியாக படங் களாக சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலே மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதில் கதிர்வீச்சு பற்றிய எந்த பயமும் இல்லை.

    மெக்சிகோவில் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பு முன்பே இருந்ததாக கூறப்படுகிறதே?

    அடிப்படையில் அதில் இருந்து இது மாறுபட்டது. இது பெண்களின் மார்பகங்களின் சீதோஷ்ணநிலையை அளவிடுகிறது. அதன் ரிசல்ட் ஒரு படமாக கிடைக்கும். புற்றுநோயை கண்டுபிடிக்கும் மாமோகிராம் பரிசோதனையை நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செய்வதில்லை. இதை பத்து, பதினைந்து வயது சிறுமிகளுக்குகூட தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இந்த பரிசோதனையில் அந்த பெண்களின் தனிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்த தயக்கமும் இன்றி இதனை மேற்கொள்ளலாம். இந்த பிராவை அணிந்துகொண்டு அதற்கு மேல் விருப்பப்பட்ட உடையை வழக்கம்போல் உடுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் ஐம்பது ரூபாயில்கூட மிக எளிதாக இந்த சோதனையை நடத்திவிடலாம்.

    இந்த புற்றுநோய் பிராவுக்கான ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்ள தனிப்பட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

    சமூகத்திற்கு ஏதாவது நல்லகாரியம் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு வந்தது. அதனால் உடனே அதை பயன்படுத்திக்கொண்டேன். எங்கள் அமைப்பு பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது. அதனால் மக்களுக்கு நன்மைபயக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமைகொடுக்கிறோம். பொதுமக்களுக்கு பலன் தரும் பல பொருட்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் ஒன்று விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் எமர்ஜென்சி லாம்ப். ஒரு நிமிடத்திலே அதில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில் மின்சார வசதி இல்லாத ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் அது மக்களுக்கு பெரும் பலன் தரும். சூரிய சக்தி மூலமும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இப்போது இது போன்ற எமர்ஜென்சி லாம்ப்களை தைவான், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

    புற்றுநோய் கண்டறியும் பிரா வடிவமைப்பில் உங்கள் பணி எவ்வாறு அமைந்திருந்தது?

    அதற்கான பரிசோதனைக்கூடத்தில் 24 மணி நேரமும் பிராவின் சீதோஷ்ண நிலையை கண் காணித்தோம். அப்போதெல்லாம் முழுநேரமும் பரிசோதனைக்கூடத்தில்தான் இருந்தேன். ஆராய்ச்சிப் பணிகள் எதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூற முடியாது. விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைபார்த்தோம். இந்த துறையை சார்ந்த மாணவிகளும் எங்களோடு சேர்ந்து பணியாற்றினார்கள்.

    இந்த பிராவை வடிவமைத்ததும் நான்தான் அதை அணிந்து பரிசோதித்து பார்த்தேன். அதன்பின்பு என்னோடு பணிபுரிபவர்களும் அதை அணிந்துகொள்ள முன்வந்தனர். அடுத்து மலபார் கேன்சர் சென்டரில் உள்ளவர் களோடு பேசி, அவர்கள் மூலமும் பரிசோதனை செய்தோம். 250 பேர்களுக்கு பயன்படுத்தியதில் இ்ந்திராவுக்கு புற்றுநோய்க்கான தொடக்க அறிகுறி இருந்தது இந்த பிரா மூலம் கண்டறியப்பட்டது. தொடக்கத்திலே கண்டுபிடிக்க முடிந்ததால் அவருக்கு எளிதாக சிகிச்சை அளித்து குணப் படுத்த முடிந்தது. ஒருவரையாவது காப்பாற்ற முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.
    பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.
    பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். இந்தியப்  பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த மார்பகப் புற்றுநோய்தான். காரணம் சரியான விழிப்புணர்வின்மை மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமை. மருத்துவமனைக்கு வருபவர்களில் 60 சதவிகிதத்தினர் நோய் முற்றிய நிலையில் வருகின்றனர்.

    * மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
    * மார்பக அமைப்பில் மாற்றம்
    * மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
    * மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
    * மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
    * மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன. மரபணு(DNA) அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும். இவை பல்கிப் பெருகுவதுதான் கட்டியாக (tumor) மாறுகிறது. சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம்.

    சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு, பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டியா அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும். இதில் ஸ்டேஜ் 0 என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள்.

    ஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள்.மேலும் புற்று நோய் என்பது தொற்று நோயும் அல்ல. நோயாளியைத் தொடுவதாலோ அவருடன் உறவு கொள்வதாலே, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. மேலும் பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை.

    உடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம். துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை(hemotherapy), கதிரியக்க சிகிச்சை(radiotherapy) ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தேவை தைரியமும் தன்னம்பிக்கையும். மார்பகப் புற்றுநோயுக்கும் இது அத்தனையும் பொருந்தும். 
    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டிஜிட்டல் மெமோகிராம் நவீன மருத்துவ கருவி மூலம் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #KilpaukGovtHospital
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிஜிட்டல் மெமோகிராம் நவீன மருத்துவ கருவி பொருத்தப்பட்டன.

    பெண்களுக்கு மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் இந்த மருத்துவ கருவி 3-டி தொழில்நுட்பம் கொண்டது. ஜூன் மாதம் முதல் தற்போது வரை நவீன கருவி மூலம் 1868 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

    இதில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் வசந்தாமணி கூறியதாவது:-

    சராசரியாக மாதம் 10 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் தற்போது வரை நவீன கருவி மூலம் பரிசோதனை செய்ததில் 77 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    மேலும் 66 பேருக்கு மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது. பரிசோதனையில் மார்பக புற்றுநோய் இல்லை என்றால் 15 நிமிடத்தில் பரிசோதனை முடிவு கிடைத்துவிடும். ஒருவேளை புற்றுநோய் இருந்தால் அதை உறுதி செய்ய 1 அல்லது 2 நாட்கள் ஆகும்.

    மேலும் ஆஸ்பத்திரியில் மார்பக புற்று நோய் கிளினிக்கும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வசதிகள் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்றுநோய் கண்டு பிடிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மெமோகிராம் நவீன மருத்துவ கருவி மூலம் 4 மி.மீ. அளவில் உள்ள புற்றுநோய் சிதைவைக்கூட துல்லியமாக கண்டறிய முடியும். அதன்மூலம் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் சிதைவை அப்புறப்படுத்த முடியும். #KilpaukGovtHospital
    ×