search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blood donation"

    • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இந்திய எல்லையை காத்த மாவீரன் ஹவில்தார் பழனியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம், மரக்கன்று வழங்கும் விழா கழுகூரணி கிராமத்தில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

    வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனி உருவ படத்திற்கு அவரது மனைவி வானதி தேவி, அவரது குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து ரத்ததான முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், மரம் நடுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. இந்த அனைத்து நிகழ்வுகளையும் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் வள்ளுவன் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் அவரின் வீரத்தினையும், தேச பற்றினையும் நினைவு கூறும் வகையில் நினைவு மண்டபம் அல்லது நினைவு ஸ்தூபியினை இந்த மூன்றாவது ஆண்டிலாவது தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    • 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தானம் செய்யலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சார்பாக உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நல்லூர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தானத்தில் சிறந்தது ரத்த தானம், முகம் தெரியாதவர்களை காப்பாற்ற அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தானம் செய்யலாம் என்றார்.

    மாணவர்கள் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி மாணவ செயலர்கள் ராஜபிரபு, விஜய், காமராஜ், மது கார்த்திக், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் ரத்த தான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இம்முகாமில் 19 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சிந்தியா, முரளி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
    • ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா பிகேடி நர்சிங் ஹோமில் 'உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ராய்டிரஸ்ட் இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்திருந்தது.

    இதில் ஆக்சிஸ் வங்கி திருத்துறைப்பூண்டி கிளை, பி. கே. டி. நர்சிங் ஹோம், த.மு.மு.க திருத்துறைப்பூண்டி நகர ஒன்றியம், தமிழ்நாடு குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளர் நல சங்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருத்து றைப்பூண்டி கிளை, திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம், தமிழக அமைப்பு சாரா தெருவோர சுமை சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற் சங்கம் மற்றும் கிங்ஸ் இன்டிரியர் வுட் வோர்க்ஸ் முத்துப்பேட்டை போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தின.

    இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    நகர்மன்ற செயலாளர் கவிதா பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருத்துறைப்பூண்டி ஆக்சிஸ் வங்கி மேலாளர் பிரேம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    முன்னாள் நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாண்டியன் , திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீமான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    த.மு.மு.க ஒன்றிய செயலாளர் அன்சாரி, நகர தலைவர் இக்பால்ராஜா , நகர செயலாளர் நிஜாம், நகர பொருளர் முகமது யூசுப், நகர இளைஞரணி செயலாளர் பைசல், கடியாச்சேரி உறுப்பினர்கள் சாதிக் அலி மற்றும் அபுபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    அம்மாலு, அனுசியா தலைமையிலான ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி ஊழியர்கள் 7 பேர் தானமாக வழங்கப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர்.

    முடிவில் மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் செய்யது யூசுப் நன்றி கூறினார்.

    • சிவகாசியில் நடந்த ரத்ததான விழாவில் கலெக்டர், எம்.பி. பங்கேற்றனர்.
    • பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    உலக குருதி கொடை யாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி பகுப்பாய்வு மையம் துவக்க விழா மற்றும் குருதி கொடையாளர் தினவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இதில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ரத்த பகுப்பாய்வு உபகரணங் களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் சி.எஸ்.ஆர் நிதியில் வழங்கினர்.

    குருதி கொடையாளர் களுக்கு கேடயத்தினை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கி வாழ்த்தி பேசினார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொழிலதிபர் ஏ.பி.செல்வரா ஜன், சிவகாசி மேயர் இன்பம், ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஆணையா ளர் சங்கரன், விருதுநகர் முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் மாரனேரியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டது. 

    • ரத்த தானம் வழங்கிய 50 பேருக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.
    • உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று மனிதச் சங்கலி நடைபெற்றது.

    இதில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    பாராட்டு நிகழ்ச்சி

    தொடர்ந்து மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் ஆண்டுக்கு 3 முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 125 முறை ரத்த தானம் வழங்கிய டவுன் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உட்பட 50 பேருக்கு சான்றித ழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.

    பின்னர் மருத்துவ மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ரத்த தானம் செய்வது தொடர் பாக உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    ரத்த வங்கி துறை எனக்கு பிடித்த துறை. காரணம் நான் மருத்துவம் படிக்கும் போது ஆப்சனல் பாடமாக ரத்த வங்கி துறையைத்தான் தேர்வு செய்தேன். அரிதான ரத்த பிரிவுகள் உட்பட இன்றைக்கு ரத்தம் இல்லா மல் ஒரு உயிரிழப்புகள் நிகழாது என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. அதற்கு காரணம் ரத்த கொடையாளர்கள் தான்.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே ரத்தம் கிடைக்கிறது. அதுவும் ரத்த கொடையாளர்கள் மூலமாகவே கிடைக்கிறது. மகப்பேறு கால உயிரிழப்புகளை தடுப்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

    மகப்பேறு காலத்தில் தாய், சேய் என இருவரையும் காப்பாற்றுவதில் ரத்த கொடையாளர்களின் பங்கும் முக்கியமானது. சமூக அக்கறையுடன் பலர் ரத்த தானம் செய்ய முன்வருவதால் உயிரிழப்பு களை படிபடியாக குறைத்து வருகிறோம்.

    இன்றைக்கு ரத்த தானம், கண் தானம் என வளர்ந்து இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடப்பதற்கு அடிப்படையே இந்த ரத்த தானம்தான். இதற்காக தமிழக மக்கள் ரத்ததான கொடையாளர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளா ர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வாழ்நாள் சாதனையாளர் விருது

    நிகழ்ச்சியின் போது நெல்லை அரசு மருத்துவ மனையின் ரத்த வங்கி துறை தலைவர் டாக்டர் மணிமாலாவிற்கு கலெக்டர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.

    அப்போது டாக்டர் மணிமாலா பேசுகையில், நெல்லை அரசு மருத்துவ மனையில் கடந்த 22 ஆண்டுகளில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிரிழ ப்புகள் கூட நிகழவில்லை. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 38 யூனிட் ரத்தம் தானமாக சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் 23 ஆயிரத்து 500 பேர் காப்பாற்றப்ப ட்டுள்ளனர் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி உதவி முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் ஷியாம் சுந்தர் மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) லதா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் அமலவளன், திட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • ம.தி.மு.க.சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    ராமநாதபுரம்

    ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் தலைமையில் நடந்தது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், பரமக்குடி நகரசபை துணைத் தலைவருமான குணா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் ஏற்பாட்டிலும், கேணிக்கரை பகுதியில் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி ஏற்பாட்டிலும், பரமக்குடி நகர் பகுதியிலும் மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

    திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் செய்திருந்தார்.

    • பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி லயன்ஸ் சங்கம், கொள்ளிடம் லயன்ஸ்சங்கம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வ ரன்கோயில், திருவெண்காடு லயன்ஸ் சங்கங்கள், வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி சண்முகவேல் தலைமை வகித்தார்.

    சீர்காழி சங்கத்தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சக்திவீரன் நன்றிக்கூறினார்.

    • காரைக்காலில் சிறப்பு ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
    • 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெருந்தலை வர் காமராஜர் அரசு பொறி யியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமிற்கு, கல்லூரியின் பேராசிரியர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பேராசிரி யர்கள் பிரவின்குமார், ஞான முருகன். ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு, ரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவன்பஷீர், மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மனோகரன் மற்றும் மன்சூர் வின்சென்ட், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி தாமோதரன், உதயகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி அனைவரும் ரத்ததானம் வழங்கி ஜாதி வேற்றுமைகளை கலைய வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ரத்ததானதினத்தை முன்னிட்டு திருத்துறை பூண்டி ராய் டிரஸ்ட் ரத்ததான குழு,ஆலத்தம்பாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான விழிப்புணர்வு முகாம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் வரவேற்று, ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி ,அனைவரும் ரத்ததா னம் வழங்கி ஜாதி வேற்று மைகளை கலைய வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.டாக்டர்.கௌரி கலைச் செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் உலக ரத்த தான உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.நகராட்சி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், ரொட்டரியன்.ராஜ்நா ராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரமன்ற மேலாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.இதில் நகராட்சி மற்றும் வட்டார மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் ரத்த தானம் செய்தவர்களை பாராட்டி ரத்த தானம் குறித்து எடுத்துக் கூறினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி ரத்த தானம் குறித்து எடுத்துக் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ,வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் கல்லூரி மாணவர்கள் செய்தனர்.
    • ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளனர,

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். முன்னதாக மருத்துவர் வசந்தகுமார்இரத்த தானம் ஏன் வழங்க வேண்டும், யாரெல்லாம் ரத்த தானம் வழங்கலாம் என்று மாணவர்களுக்கு விளக்கிகூறினார். மேலும் தானம் செய்யும்இரத்தம் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுகிறது. ரத்த தானம் செய்ய மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார்.

    அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில் , ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளோம். முகம் தெரியாத உயிரை காப்பாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பின்பு மாணவ பிரதிநிதி பாலசுப்பிரமணியன் தலைமையில் 17 யூனிட்ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கல்யாணி வழங்கினார்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். முகாமை கல்லூரி முதல்வர்சோ.கி.கல்யாணி தொடங்கி வைத்தார்.

    அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் கலைமுகில், செவிலியர்கள், பால் வினைப்பிரிவு ஆலோசகர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ரத்த சேகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இம்முகாமில் மாணவர்கள் 54 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கல்யாணி வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கன்னிமுத்து மற்றும் மாணவர்கள் ரோகித் குமார், வசந்தகுமார், மோகன்குமார், சுரேஷ்குமார், தமிழரசன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    ×