என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை கல்லூரியில் ரத்ததான முகாம்
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். முகாமை கல்லூரி முதல்வர்சோ.கி.கல்யாணி தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் கலைமுகில், செவிலியர்கள், பால் வினைப்பிரிவு ஆலோசகர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ரத்த சேகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இம்முகாமில் மாணவர்கள் 54 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கல்யாணி வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கன்னிமுத்து மற்றும் மாணவர்கள் ரோகித் குமார், வசந்தகுமார், மோகன்குமார், சுரேஷ்குமார், தமிழரசன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்