search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bakrid festival"

    • ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது.
    • இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.

    தென்காசி:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் ஆட்டுச்சந்தைகளுக்கு ஆடுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு கோடிக்கணக்கில் வருவாயும் கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அரசு ஆட்டுச் சந்தையில் இன்று காலை முதலே பொதுமக்களும், குவியத் தொடங்கினர்.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திர பட்டணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கடையநல்லூர், மேலப்பாளையம், தென்காசி, கடையம், ரவண சமுத்திரம், பொட்டல்புதூர், வீராணம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    எப்பொழுதும் ஆடுகளை வாங்குவதற்கு ஆண்களே அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.

    இன்று ஒரு நாள் மட்டும் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    மேலும் 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது. மொத்தம் இன்று கூடிய ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி செம்மறியாடுகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை வாங்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலையிலேயே சந்தையில் குவிந்தனர். செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    மருக்கை ஆடுகளையும் விவசாயிகள் வளர்ப்புக்காக அதிக அளவில் வாங்கிச் சென்றனர். நாட்டுக்கோழி ரூ.380 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கட்டுச்சேவல்கள் ரூ.3000 முதல் ரூ.30,000 வரை விற்பனையானது. சேவல்களை சந்தையிலேயே விளையாட வைத்து அதன் தரத்தை ஆய்வு செய்து வாங்கிச் சென்றனர்.

    வழக்கமாக காலை 5 மணிக்கே ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இன்று சந்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் அதற்காகவும் ஆடுகள் வாங்கிச் செல்லப்பட்டன.

    மதுரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் 100 ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்கள் வீட்டில் ஒரு வாரத்துக்கு முன்பே வளர்த்து பண்டிகை நாளில் அதன் இறைச்சியை 3 கூறுகளாக பிரிப்பார்கள். ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், மற்றொரு பகுதியை தங்கள் உறவினர்களுக்கும், மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்துக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

    வருடத்தில் ஒரு முறை குர்பானி கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அய்யலூர் சந்தைக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர்.

    வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே இது போன்ற விற்பனை நடைபெறும் நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகைக்கும் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம்.
    • தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இறைச்சிக்காக ஆடுகள் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி இருக்கிறது.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது.

    தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறும்போது, "இந்த ஆண்டு ரம்ஜானுக்காக வருகிற 23-ந்தேதி மாலையில் இருந்தே ஆடுகள் விற்பனைக்காக வர இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வருகின்றன. ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் ஆடுகள் தரத்துக்கு ஏற்ப விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சில ஆடுகள் மட்டுமே ரூ.40 ஆயிரம் வரையில் விலை போகும் என்று எதிர்பார்க்கிறோம். எப்போதுமே பக்ரீத் பண்டிகையை ஒட்டி கொம்பு வளர்ந்த ஆடுகளையே விரும்புவார்கள்.

    அந்த வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஆடுகளே கொம்புகளுடன் காணப்படும். இதன் காரணமாகவே தென் மாநிலங்களை சேர்ந்த ஆடுகளுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி கிராக்கி இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டும் கொம்பு வைத்த ஆடுகளே வர வழைக்கப்படுகின்றன.

    ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள ஆடுகளுக்கு கொம்பு இருக்காது. இதனை பக்ரீத் பண்டிகையை யொட்டி வெட்டுவதற்கு விரும்ப மாட்டார்கள். சென்னையில் ரெட்டேரி சந்தை, புளியந்தோப்பு, ஆட்டு தொட்டி, தாம்பரம் சந்தை, வில்லிவாக்கம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர், வட குரும்பூர், கிளியூர், மடப்பட்டு ,சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெறும்.

    இந்த நிலையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்

    8 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் ஆடுகள் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை ஆகும். இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மேலப்பாளையம் சந்தையில் கூடுவார்கள். இங்கு வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக நாட்டுக்கிடா வகை ஒன்று ரூ. 40 ஆயிரம் வரை விலை போனது. வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். அடுத்த வாரம் ஆடுகளை வாங்க கூட்டம் அதிகரித்து காணப்படும் என கூறப்படுகிறது.

    தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. மேலப்பாளையம் சந்தையில் கோழிகளும் விற்கப்படுவதால் அதனை வாங்கவும் ஏராளமானவர்கள் திரண்டனர்.

    • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
    • இஸ்லாத்தின் புனித நூலான குரான் சொல்லும் வழியில் பயணிப்போம் நாட்டில் அமைதியை நிலைநாட்டி மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கண்ணியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

    இறைவனின் கட்டளையை ஏற்றுத் தவம் இருந்து பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தனது மகனான இஸ்மாயிலை கடவுளுக்குப் பலியிட நினைத்த இறைத்தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தைப் போற்றும் தினமாகக் கொண்டாடப்படும் இந்த புனித நாளில் நபிகள் கூறிய அறவழியில் பயணிப்போம்.

    ஒரு தாய் பிள்ளை போல் வாழ்ந்து வரும் நம்மைத் துண்டாட நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் தலையாகக் கடமையாக உள்ளது. இஸ்லாத்தின் புனித நூலான குரான் சொல்லும் வழியில் பயணிப்போம் நாட்டில் அமைதியை நிலைநாட்டி மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்.

    நாட்டில் நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லாம் கிடைத்திட இறைவனை வேண்டி துவா செய்வோம். அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    • மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேம்படுத்த வேண்டும்.

    இஸ்லாமியர்களின் பெருநாளான பக்ரீத் பண்டியை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, காலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டின் முக்கியத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஈத் முபாரக்! ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அன்னூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
    • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கோவை:

    கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர்.

    அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    அன்னூரில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும். அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வார இறுதி நாளான இன்று, அன்னூர் சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தினர். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

    அன்னூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. சந்தை தொடங்கியதும் மழையில் நனைந்தவாறு வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குட்டிகள் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    அதே போல சந்தையில் நாட்டுக்கோழிகள் மற்றும் இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகைக்கு அன்னூர் ஆட்டுச்சந்தையில் பெரிய அளவில் விற்பனை நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 50 முதல் 70 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்தைக்கு வியாபாரிகள் அதிக அளவு வந்து செல்வதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல சந்தையில் அதிக அளவிலானோர் கூடியுள்ளதால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது.
    • குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுப்பது வழக்கம்.

    வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனர்.

    அவரவர் வசதிக்கேற்ப ஆடு, மாடு அல்லது ஒட்டக இறைச்சியை வாங்கியோ அல்லது உயிருடன் வாங்கி கூறுபோட்டு உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்துக்கு பிரித்து கொடுப்பார்கள்.

    இதனால் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாகவே ஆடு விற்பனை களை கட்ட தொடங்கி விடும். சென்னையில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள இறைச்சி கூடங்களில் குர்பானி ஆடு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    நேற்று முதல் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். சென்னையில் சுமார் 50 ஆயிரம் ஆடுகள் குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் 20 ஆயிரம் ஆடுகள் விற்பதற்கு தயாராக உள்ளன.

    இதுகுறித்து ஆட்டிறைச்சி வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஸ்ரீராமலு கூறியதாவது:-

    குர்பானி ஆடு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. குறைவாகத்தான் விற்பனை நடக்கிறது. பக்ரீத்துக்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே ஆடுகளை வாங்கி செல்வார்கள். 15 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உயிருடன் கிலோ ரூ.650 வீதமும், கறியாக கிலோ ரூ.600 வீதமும் விற்பனை செய்கிறோம்.

    ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் வருவதால் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டும். இந்த வாரம் கூடுதலாக விற்பனையாகும் என்பதால் ஆடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் குர்பானி ஆடுகள் விற்பனை இப்போதே மும்முரமாக நடந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் ஒட்டக இறைச்சியும் விற்கப்படுகிறது.

    மாடுகளும் அதிகளவு வெட்டுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாட்டு இறைச்சி கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படுவதால் மாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கும் மாட்டு இறைச்சி விற்பனை அமோக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவு மாடுகளை கொண்டு வந்துள்ளனர்.

    பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது. குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.

    சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்சல் உணவு அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பிரியாணி விற்பனை குறிப்பிடும் வகையில் உள்ளது.

    • அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம்.
    • ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனை

    திருப்பூர் :

    இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூலை 10 ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த பண்டிகைக்கு ஆடுகள் குா்பானி கொடுக்கப்பட்டு இறைச்சியை பகிா்ந்தளிப்பது வழக்கம். அந்நாளில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம். இந்நிலையில், திருப்பூரில் குா்பானி கொடுப்பதற்காக பெரிய அளவிலான செம்மறியாடுகள் வரத்து தொடங்கியுள்ளது.

    இதில் ஆடுகளின் எடை மற்றும் உயரம், நிறம், கொம்பின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடுகளை விலை பேசி வாங்கிச் செல்கிறாா்கள். கா்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் வாகனங்கள் மூலமாக திருப்பூா் கொண்டுவரப்பட்டுள்ளன.ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனையாகும் என்று ஜம்ஜம் நகரை சோ்ந்த இஸ்மாயில் என்பவா் தெரிவித்துள்ளாா்.

    மதுரையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். #bakridfestival

    மதுரை:

    இஸ்லாமியர்களின் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை மதுரையில் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை கோரிப்பாளையம், காஜிமார் தெரு, மகபூப் பாளை யம், ஆரப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல் களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

    அரசரடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் டவுன் காஜியார் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    ஏழைகளுக்கு உதவிடும் திருநாள் பக்ரீத் பண்டிகை என்பதால் மதுரையில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர். இதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டன. #bakridfestival

    ×