search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யலூர் ஆட்டுச்சந்தை"

    • தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
    • வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு, கோழி, சேவல் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    பெரும்பாலும் ஆடு, கோழிகள் வாங்குவதற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகை தருவதுண்டு. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிக அளவு பணம் சந்தைக்கு கொண்டு வர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. பங்குனி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஆடுகள் பலியிடப்படும்.

    மேலும் ரம்ஜான் பண்டிகைக்காகவும், தேர்தலுக்காக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும் ஆடுகள் அதிக அளவு விற்பனையாகும் என நினைத்து ஏராளமான செம்மறி, வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டன. மெயின் ரோட்டில் வழியாக வராமல் புறவழிச்சாலையில் உள்ள கிராமப்புறங்கள் வழியாக அதிக அளவு வாகனங்கள் சந்தைக்கு வந்தன.

    தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.8000 வரை விற்கப்பட்டது. விதவிதமான சேவல்களை கிராமப்புறங்களில் வளர்த்து வரும் வாலிபர்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ரூ.3000 முதல் ரூ.30000 வரை சேவல்கள் விற்பனையாகின. தேர்தல் சமயத்தில் ஆடு, கோழிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகுமோ என்று விவசாயிகள் கவலையடைந்த நிலையில் அதிக அளவு கால்நடைகள் எதிர்பார்த்த விலைக்கு விற்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் அதிக அளவு வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது.
    • ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகள், கோழி உள்ளிட்ட கால்நடை களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, கரூர், சேலம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கால்நடைகளை வாங்க வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. புதுமண தம்பதிகள் தலைதீபாவளிக்கு விருந்துக்கு வருவார்கள். அவர்களுக்கு அசைவ உணவு தயாரித்து பரிமாறுவதற்காக அதிக அளவில் ஆடுகள் வாங்க வந்தனர்.

    மேலும் திருவிழாக்கள், விஷேசங்கள் தொடர்ந்து வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வெளியூர்களில் வேலை பார்க்கும் பொதுமக்கள் தீபாவளியையொட்டி அடுத்த வாரம் ஊர் திரும்புவார்கள். அய்யலூர் ஆட்டுச் சந்தையில் அதிக அளவு வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது.

    10 கிலோ கொண்ட ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.350 முதல் ரூ.380 வரை விற்பனையானது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதிகாலையிலேயே சந்தை கூடி 9 மணிக்கு முன்பே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது. வருவாய் அதிகரித்த போதும் வாரச்சந்தையில் குடிநீர், மின்விளக்கு, சுகாதார வசதிகள் இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வசூலில் அதிக கவனம் செலுத்தும் தனியார் நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை. தற்போது மழைகாலம் என்பதால் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்குகிறது. இதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    எனவே வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை வாங்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலையிலேயே சந்தையில் குவிந்தனர். செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    மருக்கை ஆடுகளையும் விவசாயிகள் வளர்ப்புக்காக அதிக அளவில் வாங்கிச் சென்றனர். நாட்டுக்கோழி ரூ.380 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கட்டுச்சேவல்கள் ரூ.3000 முதல் ரூ.30,000 வரை விற்பனையானது. சேவல்களை சந்தையிலேயே விளையாட வைத்து அதன் தரத்தை ஆய்வு செய்து வாங்கிச் சென்றனர்.

    வழக்கமாக காலை 5 மணிக்கே ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இன்று சந்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் அதற்காகவும் ஆடுகள் வாங்கிச் செல்லப்பட்டன.

    மதுரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் 100 ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்கள் வீட்டில் ஒரு வாரத்துக்கு முன்பே வளர்த்து பண்டிகை நாளில் அதன் இறைச்சியை 3 கூறுகளாக பிரிப்பார்கள். ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், மற்றொரு பகுதியை தங்கள் உறவினர்களுக்கும், மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்துக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

    வருடத்தில் ஒரு முறை குர்பானி கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அய்யலூர் சந்தைக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர்.

    வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே இது போன்ற விற்பனை நடைபெறும் நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகைக்கும் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.

    • நாட்டு கோழி 1 கிலோ ரூ.350 முதல், ரூ.400 வரையும், சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.
    • மேலும் அதிகாலையில் வரும் வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டு ச்சந்தை கூடி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை க்காக கொண்டு வருகின்றனர்.

    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்வதால் இப்பகுதி ஆடு மற்றும் கோழிகளுக்கு வரவேற்பு உள்ளது. தைப்பூசத்தை யொட்டி பழனி முருகன் கோவிலுக்கும், சமயபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை சென்றனர்.

    இதனால் அவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துள்ளனர். இதன் காரணமாக ஆடு மற்றும் கோழிகள் விற்பனை சரிந்துள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படும் அய்யலூர் சந்தை களை இழந்து காணப்படுகிறது.

    இருந்த போதும் நாட்டு கோழிகள் மற்றும் சேவல்கள் ஓரளவு விற்பனையானது. நாட்டு கோழி 1 கிலோ ரூ.350 முதல், ரூ.400 வரையும், சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    தற்போது குளிர் காலம் என்பதால் குளிரை அதிகம் தாங்கும் செம்மறி ஆட்டு க்குட்டிகள் விற்பனையும் கணிசமாக இருந்தது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.7500க்கு விற்பனை யானது. பல்வேறு பகுதிக ளில் இருந்து அய்யலூர் சந்தைக்கு வியாபாரிகள் வருகின்றனர்.

    தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின் போது கோடிக்கணக்கில் வர்த்தக மாகும். சாதாரண நாட்களில் ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வர்த்தம் நடைபெற்று வருகிறது. எனவே சந்தையை பேரூரா ட்சி ஏற்று நடத்தினால் வருவாய் அதிகரிக்கும்.

    மேலும் அதிகாலையில் வரும் வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்ற னர். சாலையிலும் அதிக அளவு கூட்டம் கூடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்ற னர். எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அய்யலூர் ஆட்டுச்சந்தையில் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு, கோழி, சேவல் வாங்க ஆர்வமுடன் குவிந்திருந்தனர்.
    • வாரச்சந்தையில் மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடு, நாட்டுக்கோழி வாங்க குவிந்து வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை என்பதால் கிராமங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு, கோழி, சேவல் வாங்க ஆர்வமுடன் குவிந்திருந்தனர். தரமான சேவல்கள் ரூ.1500 லிருந்து ரூ.8000 வரை விலைபோனது. செம்மறி ஆடுகள், வெள்ளாட்டு கிடா ஆகியவற்றுக்கும் நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    7 கிலோ கொண்ட ஆடு ரூ.4500 முதல் ரூ.5500 வரை விற்பனையானது. மதுரையில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க வந்திருந்தனர். தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் திருவிழாக்கள் இருக்கும் என்பதால் கூட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவில் விவசாயிகள், வியாபாரிகள் கூடும் வாரச்சந்தையில் மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    வாரச்சந்தை பகுதி குண்டும் குழியுமாக இருப்பதால் மழை காலத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×