என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பக்ரீத் பண்டிகையையொட்டி களைகட்டிய அன்னூர் வாரச்சந்தை
- அன்னூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
- வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கோவை:
கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர்.
அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அன்னூரில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும். அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வார இறுதி நாளான இன்று, அன்னூர் சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தினர். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர்.
அன்னூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. சந்தை தொடங்கியதும் மழையில் நனைந்தவாறு வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குட்டிகள் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதே போல சந்தையில் நாட்டுக்கோழிகள் மற்றும் இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகைக்கு அன்னூர் ஆட்டுச்சந்தையில் பெரிய அளவில் விற்பனை நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 50 முதல் 70 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தைக்கு வியாபாரிகள் அதிக அளவு வந்து செல்வதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல சந்தையில் அதிக அளவிலானோர் கூடியுள்ளதால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்