search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyappan"

    • பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.
    • தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.

    சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது.

    தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.

    திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள்- கடன் நிவாரணத்தை அளிக்கும்.

    பஞ்சகவ்யம்-ஞானம் அருளும்.

    பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.

    பசும்பால்-செல்வ வளத்தை அளிக்கும்.

    தயிர் அபிஷேகம்-தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.

    நெய் அபிஷேகம்- நோயற்ற வாழ்வு தரும்.

    தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.

    கருப்பஞ்சாறு -வம்ச விருத்தி உண்டாகும்.

    பழச்சாறுகள்-தோற்றப்பொலிவைத் தரும்.

    இளநீர்-சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.

    சந்தன அபிஷேகம்- தான்ய லாபத்தையும் தேக சௌக்கியத்தையும் அளிக்கும்.

    விபூதி அபிஷேகம்- ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.

    புஷ்போதக அபிஷேகம்-ராஜ பதவியை அளிக்கும்.

    • சபரிமலையை தவிர மற்ற கோவில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம்.
    • சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா, விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்.

    பகவான் சாஸ்தாவுக்குத் தேவர்கள் அபிஷேகம் செய்யும் தீர்த்தமே உரல் குழி தீர்த்தமாக-கும்பளம் தோடு எனும் இடத்தில் உருவாகி வெளி வருகிறது.

    சபரிமலையின் முக்கிய தீர்த்தமாக இது விளங்குகிறது.

    சபரி மலை யாத்திரையின் போது, கட்டு நிறை முடிந்து யாத்திரை கிளம்புவதற்கு முன் நாம் தேங்காய் உடைத்து விட்டு கிளம்புகிறோம்.

    இது நமக்காகக் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அய்யபனின் பரிவார தெய்வங்களுக்காக உடைப்பது.

    அய்யப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத்தில் ஜோதிஸ்வரூபனாகவே காண்கின்றனர்.

    மண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாள்களாகவே கூறப்பட்டது.

    கார்த்திகை ஒன்றாம் நாள் மாலையிட்டு மகர விளக்கு தரிசனமே ஒரு சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்.

    சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா, விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்,

    ஆலயத்தின் பூஜை முறைகளையும், யாத்தரைக்கான வழிகாட்டுதலையும் உருவாக்கி கொடுத்தவர் அகத்திய மகரிஷி.

    மணிகண்ட அவதார காலத்தில், பவான் பூதநாதனால் தன் வளர்ப்புத் தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத நூலே 'ஸ்ரீ பூதநாத கீதை'

    சபரிமலையை தவிர மற்ற கோவில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம்.

    அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும் மறு கால் மடித்தபடியும் இருக்கும்.

    மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

    நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களைக் குறிக்கும் ஆறு சாஸ்தா சேத்திரங்கள் உண்டு.

    அவை..

    மூலாதாரம்- சொரிமுத்தய்யன் கோவில், ஸ்வாதிஷ்டாவனம் - அச்சன் கோவில், மணிபூரகம்- ஆர்யங்காவு, அனாஹதம்- குளத்துபுழை, அனாஹதம்- குளத்துபுஜை, விசுத்தி- எருமேலி, அக்ஞை- சபரிமலை.

    • சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது.
    • இருமுடியில்லாமல் அய்யப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.

    கலியுக தேவதையாக அய்யப்பன் விளங்கும் காரணத்தால் சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது.

    அதனால்தான் சபரிமலை இந்த தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    இருமுடியில்லாமல் அய்யப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.

    மஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் புறப்பட்ட போது, தேவேந்திரனே சிங்கமாகவும் குதிரையாகவும் உருக்கொண்டு அய்யப்பனைத் தாங்கி நின்றான்.

    வன்புலி வாகனன் என்று நாம் அய்யப்பனை அழைத்தாலும், அது புலிப்பாலுக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் மட்டுமே.

    உண்மையில் சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைத்தான் கொடி மரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்..

    பதினெட்டாம் படிகளுக்குக் காவலாக கடூரவன் என்ற கடுத்த சுவாமியும், க்ருஷ்ணாபன் என்ற கருப்ப சுவாமியும் இருப்பதாக ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுகிறது.

    சபரி மலையின் மணிகண்டனின் அங்கரஷகனாக விளங்குபவன் வாபுரன் என்ற சிவ பூதகணத் தலைவன்.

    கணேசும் நைர்ருதே வாயென மஞ்சாம்பாம் சப்ர பூஜயேத் பைரவெள த்வஸிதாங்கஞ்ச பூர்வே வாமே சவாபுரம்

    கன்னிமூலையில் கணபதியும் வாயு திசையில் மாளிகைப்புறத்தனும் பகவானுக்கு முன் இரு கடூரவர்களும் கருப்பனும் இடப்புறத்தில் வாபுரனும் இருக்கிறார்கள்.

    சபரிமலையை சுற்றியும் உள்ள 18 மலைகளும், பதினெட்டாம் படியில் உள்ள ஒவ்வொரு படிக்கும் ஒப்புமையாகக் கூறப்படுகிறது.

    • இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக பிரம்மசர்யத்தைக் கடை பிடிக்கிறார் அய்யப்பன்.
    • பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப்படுகிறது.

    மஹிஷி சம்காரத்தின் பொருட் ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம்.

    இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக பிரம்மசர்யத்தைக் கடை பிடிக்கிறார் அய்யப்பன்.

    கலியுகத்தின் மாயை பாதிக்காத இடமாகவும் சகல பாவங்களையும் மாய்க்கும் இடமாகவும் விளங்கும் காரணத்தால்,

    பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப்படுகிறது.

    அதனால்தான் அந்தத் தலத்தைத் தனது ஆலயமாக பகவான் தேர்ந்தெடுத்தார்.

    ஆகாச கங்கையே மதங்க முனிவரின் தத்துவத்திற்கிணங்கி, பம்பா நதியாக உருவெடுத்து வந்தது.

    பகவான் சாஸ்தா ஆகாச கங்கையுடனே பூலோகம் அடைந்து பம்பைக் கரையில் குழந்தையாகக் காட்சி தந்தார்.

    அங்கேயே திருக்கோவில் கொண்டார்.

    • மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு.
    • ஆர்ய சாஸ்தா குழந்தை பாக்கியமும் அருளக்கூடியவர்.

    சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள்.

    'தர்மஸ்ய சாஸ்னம் கரோதி இதி தர்ம சாஸ்தா' தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக அய்யப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

    மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள்.

    அவரே துஷ்ட நிக்ரஹசிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார்.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும்.

    அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு.

    அவை- ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸதா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

    ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா - புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு.

    அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே.

    இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் பொன் சொரிமுத்து ஐயனார் ஆலயமே பிரதானமானது.

    கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும், எம பயம் விலகும்.

    பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிலில் காட்சி தருபவர்.

    ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர்.

    நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே 'தந்வந்த்ரி சாஸ்தா' என்றும் அழைப்பர்.

    தகழி, த்ருப்ரயார் ராம சேத்திரம் முதலான பல தலங்களில் இவர் காட்சி தருகிறார்.

    சம்மோஹன சாஸ்தா சகலவிதமான சவுக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.

    ஆர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு 'ப்ரபா' என்ற மனைவியும், 'ஸத்யகன்' என்ற மகனும் உண்டு.

    இவர் குழந்தை பாக்கியமும் அருளக்கூடியவர்.

    திருகுன்னபுழை எனும் சேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஸ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவைத் தரிசிக்கலாம்.

    இவரது திருக்கோவிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோவில் என்பார்கள்.

    பகவான் வேட்டைக்காரனாக காட்சி தரும் கோலம் - கிராம சாஸ்தா திருக்கோலமாகும்.

    எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடிவில் சாஸ்தாவைக் காணலாம்.

    புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனா - வர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது...

    • அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
    • இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து,

    அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட

    மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து,

    அய்யப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

    இதன் மூலம் அய்யப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

    • சபரிமலை யாத்திரை முதன் முதலாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை.
    • பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    சபரிமலை யாத்திரை முதன் முதலாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை.

    இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்றும் கூறுவர்.

    மண்டல காலமாகிய, கார்த்திகை முதல் நாளில் இருந்து, மார்கழி பதினொன்றாம் தேதிக்குள், வீட்டில் இச்சடங்கை நடத்துவதற்கு நாள் குறித்து விட வேண்டும்.

    பந்தலிட்டு, அதன் நடுப்பகுதியில் மண்டபம் அமைக்க வேண்டும்.

    மண்டபத்தின் நடுவில் அய்யப்பன் படம் வைத்து, சுற்றிலும் கணபதி, மாளிகைப் புறத்தம்மன், கருப்ப சுவாமி,

    கடுத்தை சுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றிற்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும்.

    எல்லா தெய்வங்களுக்கும் அவல், பொரி, பழம், வெற்றிலை, பாக்கு, சித்ரான்னம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    • மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகியவற்றில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
    • பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல்

    ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    இதனை 'திரிகரணசுத்தி' என்பர்.

    அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும்.

    தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது.

    பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும்,

    மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது.

    மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளான இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள்(வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    • மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலி, முத்தாயம்பகையம் நடக்கிறது
    • கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் அறிவிப்பு

    கோவை,

    கோவை சித்தாபுதூர் அய்யப்ப சாமி பொற்கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 17 -ந் தேதி (வெள்ளிக்கிழமை)தொடங்குகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிய வருவது வழக்கம்.

    அய்யப்பசாமி மண்டல பூஜை விழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் 12-ந்தேதி செவ்வாய்க்கிழமை வரை ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் புகழ்பெற்ற தாந்திரீக ஆச்சாரியார்கள் முன்னிலையில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு காரிய சித்திக்கான சிறப்பு அர்ச்சனைகள், சனிதோஷ சாந்திஜெபம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 13-ந்தேதி அய்யப்பசாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும்.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 16 -ந்தேதி சனிக்கிழமை அகண்டநாம பஜனையும், 17 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது.27-ந்தேதி புதன்கிழமை மகாகணபதி ஹோமம், மண்டல விளக்கு பூஜை நடக்கிறது. அன்றையதினம் மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

    மேலும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்ல வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அய்யப்ப சேவாசங்கம் செய்து வருகிறது.ஜனவரி 15-ந்தேதி திங்கட்கிழமை மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலியும், மாலையில் மகா தீபாராதனை, முத்தாயம்பகையும் நடைபெறும்.

    இந்த தகவலை கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.

    • மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம்.
    • நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது.

    நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் தோன்றிய மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம். மயிலையில் நீங்கள் எந்ததெருவுக்குள் சென்றாலும் நிச்சயம் ஏதாவது ஒரு ஆலயத்தை காண்பீர்கள்.

    இந்த சிறப்பின் ஒரு அம்சமாக மயிலையில் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் இருந்து மிக, மிக எளிதாக இந்த ஆலயத்தை சென்று அடையலாம்.

    லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.

    முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன.

    விநாயகரை வணங்கி முண்டகக்கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.

    வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். அவள் தரும் பிரசாதமே அம்மை நோய், விஷக்கடி, பில்லி, சூனியம், கடும் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்தாக உள்ளது.

    முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம். ஒரே ஒரு பிரகாரம் தான். பிரகாரத்தை சுற்றத் தொடங்கியதும் அருகில் தனி அறை போல உள்ள அமைப்பினுள் சில சன்னதிகள் இருப்பதை காணலாம்.

    ஞானஜோதி நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி, அய்யப்பன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ஆஞ்சநேயர், வள்ளலார் தனி தனி சன்னதிகளில் உள்ளனர். அந்த அறையின் ஒரு பகுதி சுவரில் சித்த புருஷர்களும், மகான்களும் படங்களில் உள்ளனர்.

    இதையடுத்து வெளியில் வந்து மீண்டும் பிரகாரத்தை தொடர்ந்தால், முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதி வரும். அங்கு தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.

    இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எனவே இந்த இடத்தில் பொங்கல் வைக்க பெண்கள் போட்டி போடுவது உண்டு. இந்த பகுதியை பொங்கல் மண்டபம் என்று அழைக்கிறார்கள்.

    இதையடுத்து அம்மனின் இடதுபுற பக்கவாட்டில் தனி சன்னதியில் உற்சவர் அம்மன் இருப்பதை காணலாம். சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் உள்ளாள்.

    ஆலய கிணறு, மடப்பள்ளியை கடந்து சென்றால் தான் உற்சவரை கண்டு வழிபட முடியும். உற்சவர் சன்னதி இடதுபுறம் சப்த கன்னியர்கள் உள்ளனர். அந்த சன்னதி அமைப்பின் இருபுறமும் ஜமத்கனி முனிவரும் அவரது மகன் பரசுராமரும் உள்ளனர்.

    இவர்களை வழிபட்டால் அத்துடன் வழிபாடு முடிந்தது. அந்த அளவுக்கு இந்த ஆலயம் மிக சிறிய ஆலயமாக உள்ளது. முண்டகக்கண்ணி அம்மன், நாகர் இருவரையும் தான் மக்கள் அதிகமாக வழிபடுகிறார்கள்.

    வழிபாடுகள் முடிந்ததும் ஆலயத்தின் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமரலாம். பிறகு மற்றொரு வாயில் வழியாக வெளியேறலாம். மயிலை பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.

    • சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • மழை பெய்து வருவதால் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லும் கன்வேயர் நிறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடிமாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பக்தர்களுக்கு வசதியாக நிலக்கல் மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் மையங்களும் செயல்பட்டன. இந்நிலையில் சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நனைந்தது.

    பழைய காணிக்கை பெட்டியில் இருந்து காணிக்கை பணத்தை கொண்டு செல்லும் கன்வேயர் மழைநீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தில் ஏராளமானவை, தண்ணீரில் நனைந்து நாசமானதாக தெரிகிறது.

    ஆனால் எவ்வளவு பணம் தண்ணீரில் நனைந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தண்ணீரின் நனைந்த பணத்தை உலர வைக்கும் பணியும், பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர் மோட்டார் பம்ப் மூலம் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லும் கன்வேயர் நிறுத்தப்பட்டுள்ளது.

    ×