search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirikarana suthi"

    • பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.
    • தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.

    சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது.

    தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.

    திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள்- கடன் நிவாரணத்தை அளிக்கும்.

    பஞ்சகவ்யம்-ஞானம் அருளும்.

    பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.

    பசும்பால்-செல்வ வளத்தை அளிக்கும்.

    தயிர் அபிஷேகம்-தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.

    நெய் அபிஷேகம்- நோயற்ற வாழ்வு தரும்.

    தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.

    கருப்பஞ்சாறு -வம்ச விருத்தி உண்டாகும்.

    பழச்சாறுகள்-தோற்றப்பொலிவைத் தரும்.

    இளநீர்-சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.

    சந்தன அபிஷேகம்- தான்ய லாபத்தையும் தேக சௌக்கியத்தையும் அளிக்கும்.

    விபூதி அபிஷேகம்- ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.

    புஷ்போதக அபிஷேகம்-ராஜ பதவியை அளிக்கும்.

    • சபரிமலையை தவிர மற்ற கோவில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம்.
    • சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா, விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்.

    பகவான் சாஸ்தாவுக்குத் தேவர்கள் அபிஷேகம் செய்யும் தீர்த்தமே உரல் குழி தீர்த்தமாக-கும்பளம் தோடு எனும் இடத்தில் உருவாகி வெளி வருகிறது.

    சபரிமலையின் முக்கிய தீர்த்தமாக இது விளங்குகிறது.

    சபரி மலை யாத்திரையின் போது, கட்டு நிறை முடிந்து யாத்திரை கிளம்புவதற்கு முன் நாம் தேங்காய் உடைத்து விட்டு கிளம்புகிறோம்.

    இது நமக்காகக் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அய்யபனின் பரிவார தெய்வங்களுக்காக உடைப்பது.

    அய்யப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத்தில் ஜோதிஸ்வரூபனாகவே காண்கின்றனர்.

    மண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாள்களாகவே கூறப்பட்டது.

    கார்த்திகை ஒன்றாம் நாள் மாலையிட்டு மகர விளக்கு தரிசனமே ஒரு சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்.

    சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா, விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்,

    ஆலயத்தின் பூஜை முறைகளையும், யாத்தரைக்கான வழிகாட்டுதலையும் உருவாக்கி கொடுத்தவர் அகத்திய மகரிஷி.

    மணிகண்ட அவதார காலத்தில், பவான் பூதநாதனால் தன் வளர்ப்புத் தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத நூலே 'ஸ்ரீ பூதநாத கீதை'

    சபரிமலையை தவிர மற்ற கோவில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம்.

    அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும் மறு கால் மடித்தபடியும் இருக்கும்.

    மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

    நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களைக் குறிக்கும் ஆறு சாஸ்தா சேத்திரங்கள் உண்டு.

    அவை..

    மூலாதாரம்- சொரிமுத்தய்யன் கோவில், ஸ்வாதிஷ்டாவனம் - அச்சன் கோவில், மணிபூரகம்- ஆர்யங்காவு, அனாஹதம்- குளத்துபுழை, அனாஹதம்- குளத்துபுஜை, விசுத்தி- எருமேலி, அக்ஞை- சபரிமலை.

    • சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது.
    • இருமுடியில்லாமல் அய்யப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.

    கலியுக தேவதையாக அய்யப்பன் விளங்கும் காரணத்தால் சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது.

    அதனால்தான் சபரிமலை இந்த தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    இருமுடியில்லாமல் அய்யப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.

    மஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் புறப்பட்ட போது, தேவேந்திரனே சிங்கமாகவும் குதிரையாகவும் உருக்கொண்டு அய்யப்பனைத் தாங்கி நின்றான்.

    வன்புலி வாகனன் என்று நாம் அய்யப்பனை அழைத்தாலும், அது புலிப்பாலுக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் மட்டுமே.

    உண்மையில் சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைத்தான் கொடி மரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்..

    பதினெட்டாம் படிகளுக்குக் காவலாக கடூரவன் என்ற கடுத்த சுவாமியும், க்ருஷ்ணாபன் என்ற கருப்ப சுவாமியும் இருப்பதாக ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுகிறது.

    சபரி மலையின் மணிகண்டனின் அங்கரஷகனாக விளங்குபவன் வாபுரன் என்ற சிவ பூதகணத் தலைவன்.

    கணேசும் நைர்ருதே வாயென மஞ்சாம்பாம் சப்ர பூஜயேத் பைரவெள த்வஸிதாங்கஞ்ச பூர்வே வாமே சவாபுரம்

    கன்னிமூலையில் கணபதியும் வாயு திசையில் மாளிகைப்புறத்தனும் பகவானுக்கு முன் இரு கடூரவர்களும் கருப்பனும் இடப்புறத்தில் வாபுரனும் இருக்கிறார்கள்.

    சபரிமலையை சுற்றியும் உள்ள 18 மலைகளும், பதினெட்டாம் படியில் உள்ள ஒவ்வொரு படிக்கும் ஒப்புமையாகக் கூறப்படுகிறது.

    • இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக பிரம்மசர்யத்தைக் கடை பிடிக்கிறார் அய்யப்பன்.
    • பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப்படுகிறது.

    மஹிஷி சம்காரத்தின் பொருட் ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம்.

    இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக பிரம்மசர்யத்தைக் கடை பிடிக்கிறார் அய்யப்பன்.

    கலியுகத்தின் மாயை பாதிக்காத இடமாகவும் சகல பாவங்களையும் மாய்க்கும் இடமாகவும் விளங்கும் காரணத்தால்,

    பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப்படுகிறது.

    அதனால்தான் அந்தத் தலத்தைத் தனது ஆலயமாக பகவான் தேர்ந்தெடுத்தார்.

    ஆகாச கங்கையே மதங்க முனிவரின் தத்துவத்திற்கிணங்கி, பம்பா நதியாக உருவெடுத்து வந்தது.

    பகவான் சாஸ்தா ஆகாச கங்கையுடனே பூலோகம் அடைந்து பம்பைக் கரையில் குழந்தையாகக் காட்சி தந்தார்.

    அங்கேயே திருக்கோவில் கொண்டார்.

    • மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு.
    • ஆர்ய சாஸ்தா குழந்தை பாக்கியமும் அருளக்கூடியவர்.

    சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள்.

    'தர்மஸ்ய சாஸ்னம் கரோதி இதி தர்ம சாஸ்தா' தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக அய்யப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

    மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள்.

    அவரே துஷ்ட நிக்ரஹசிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார்.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும்.

    அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு.

    அவை- ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸதா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

    ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா - புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு.

    அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே.

    இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் பொன் சொரிமுத்து ஐயனார் ஆலயமே பிரதானமானது.

    கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும், எம பயம் விலகும்.

    பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிலில் காட்சி தருபவர்.

    ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர்.

    நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே 'தந்வந்த்ரி சாஸ்தா' என்றும் அழைப்பர்.

    தகழி, த்ருப்ரயார் ராம சேத்திரம் முதலான பல தலங்களில் இவர் காட்சி தருகிறார்.

    சம்மோஹன சாஸ்தா சகலவிதமான சவுக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.

    ஆர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு 'ப்ரபா' என்ற மனைவியும், 'ஸத்யகன்' என்ற மகனும் உண்டு.

    இவர் குழந்தை பாக்கியமும் அருளக்கூடியவர்.

    திருகுன்னபுழை எனும் சேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஸ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவைத் தரிசிக்கலாம்.

    இவரது திருக்கோவிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோவில் என்பார்கள்.

    பகவான் வேட்டைக்காரனாக காட்சி தரும் கோலம் - கிராம சாஸ்தா திருக்கோலமாகும்.

    எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடிவில் சாஸ்தாவைக் காணலாம்.

    புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனா - வர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது...

    • அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
    • இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து,

    அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட

    மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து,

    அய்யப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

    இதன் மூலம் அய்யப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

    • சபரிமலை யாத்திரை முதன் முதலாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை.
    • பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    சபரிமலை யாத்திரை முதன் முதலாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை.

    இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்றும் கூறுவர்.

    மண்டல காலமாகிய, கார்த்திகை முதல் நாளில் இருந்து, மார்கழி பதினொன்றாம் தேதிக்குள், வீட்டில் இச்சடங்கை நடத்துவதற்கு நாள் குறித்து விட வேண்டும்.

    பந்தலிட்டு, அதன் நடுப்பகுதியில் மண்டபம் அமைக்க வேண்டும்.

    மண்டபத்தின் நடுவில் அய்யப்பன் படம் வைத்து, சுற்றிலும் கணபதி, மாளிகைப் புறத்தம்மன், கருப்ப சுவாமி,

    கடுத்தை சுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றிற்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும்.

    எல்லா தெய்வங்களுக்கும் அவல், பொரி, பழம், வெற்றிலை, பாக்கு, சித்ரான்னம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    • மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகியவற்றில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
    • பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல்

    ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    இதனை 'திரிகரணசுத்தி' என்பர்.

    அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும்.

    தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது.

    பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.

    கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும்,

    மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

    ×