search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை 17-ந்தேதி தொடங்குகிறது
    X

    கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை 17-ந்தேதி தொடங்குகிறது

    • மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலி, முத்தாயம்பகையம் நடக்கிறது
    • கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் அறிவிப்பு

    கோவை,

    கோவை சித்தாபுதூர் அய்யப்ப சாமி பொற்கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 17 -ந் தேதி (வெள்ளிக்கிழமை)தொடங்குகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிய வருவது வழக்கம்.

    அய்யப்பசாமி மண்டல பூஜை விழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் 12-ந்தேதி செவ்வாய்க்கிழமை வரை ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் புகழ்பெற்ற தாந்திரீக ஆச்சாரியார்கள் முன்னிலையில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு காரிய சித்திக்கான சிறப்பு அர்ச்சனைகள், சனிதோஷ சாந்திஜெபம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 13-ந்தேதி அய்யப்பசாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும்.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 16 -ந்தேதி சனிக்கிழமை அகண்டநாம பஜனையும், 17 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது.27-ந்தேதி புதன்கிழமை மகாகணபதி ஹோமம், மண்டல விளக்கு பூஜை நடக்கிறது. அன்றையதினம் மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

    மேலும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்ல வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அய்யப்ப சேவாசங்கம் செய்து வருகிறது.ஜனவரி 15-ந்தேதி திங்கட்கிழமை மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலியும், மாலையில் மகா தீபாராதனை, முத்தாயம்பகையும் நடைபெறும்.

    இந்த தகவலை கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×