search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attacked"

    • தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாக ஹமித் கான் கூறி உள்ளார்.
    • எதிர்தரப்பில் பெண்ணின் தந்தை பீர்பால் கான் என்பவர் மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் ஹமித் கான் என்ற வாலிபரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் கும்பலாக வந்து கடத்திச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவரது மூக்கையும் அறுத்துள்ளனர். திருமணத்தை ஏற்காததால் மனைவியின் குடும்பத்தினர் இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹமித் கான், கெகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில், தன்னையும் தன் மனைவி ரஜியாவையும் வீட்டில் இருந்து ஒரு வாகனத்தில் கடத்தி சென்றதாகவும், பின்னர் தன்னை மட்டும் வேறு வாகனத்தில் கடத்திச் சென்று நாகவுர் மாவட்டம் மரோத் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகில் வைத்து கடுமையாக தாக்கி தனது மூக்கை அறுத்ததாகவும் ஹமித் கான் கூறி உள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறி உள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஜியாவின் தந்தை பீர்பால் கான் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் எதிர்தரப்பில் பீர்பால் கான் தன் மகளை காணவில்லை என்று மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக போலீசாரிடம் விசாரணையின்போது கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

    • விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை நரியம்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 53), விவசாயி. இதே பகுதியில் கணேஷ்குமார் (31) என்பவரும் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நரியம்பட்டி கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. அப்போது பணம் விவகாரம் தொடர்பாக சுகுமாறன்- கணேஷ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சுகுமாறன் நரியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து கணேஷ்குமார் கல்லால் சுகுமாறனை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக சுகுமாறன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

    • குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர்.
    • பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

    டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றபோது அங்குள்ள ஊழியருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சுற்றுலா வந்த டெல்லி குடும்பத்தினரை சரமாரியாக தாக்கி உள்ளனர். வாள் மற்றும் கத்திகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை அடையாளம் கண்டு கைது செயதுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதல் வழக்கு வேறு ஒரு அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ரிசார்ட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

    இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சிகரமானது மற்றும் சகித்துக்கொள்ளமுடியாதது என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

    • 23 வயது மாணவி. தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடையை சேர்ந்தவர் 23 வயது மாணவி. இவர் நவஇந்தியாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    மாணவி பள்ளியில் படிக்கும் போது வாலிபர் ஒருவருட ன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் வாலிபரின் நடவடிக்கைகள் மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனால் அவர் வாலிபரை காதலிப்பதை நிறுத்தினார். மேலும் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் வந்தார்.

    அவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று அவரிடம் பேச முயன்றார். ஆனால் மாணவி பேசாமல் நடந்து சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகள் பேசி மாணவியை தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து மாணவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி கடத்தி தாக்கப்பட்டார்
    • காரில் மர்மநபர்கள் துாக்கி சென்றனர்.

    கரூர்:

    கரூர் அருகே கோதூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). இவர் கரூர் மாவட்ட அ.தி.மு.க., ஐ.டி. விங்க் (தகவல் தொழில்நுட்ப அணி) இணை செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு, 8.00 மணியளவில் கரூர்-ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரு காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிவராஜை சராமரியாக தாக்கி குண்டுக்கட்டாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.இதுபற்றிய தகவலறிந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சக்திவேல், சேரன் பழனிசாமி, சுரேஷ், தினேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, பாசறை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் கரூர், கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் முனியப்பன் கோவில் அருகே கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடத்தப்பட்ட நபர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். கடத்திய நபர்கள் அவரை வேறொரு இடத்தில் விட்டு விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் சிவராஜை, ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் மறியலில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க.வினர் அங்கு விரைந்து சென்றனர்.தன்னை தி.மு.க.வினர் கடத்தி சென்று, சரமாரியாக தாக்கியதாக சிவராஜ் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் போலீசாரிடம் கடத்திய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.போலீசார் பேசிக்கொண்டு இருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. பிறகு ஏ.டி.எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. தேவராஜ் உள்ளிட்ட போலீசார் சிவராஜை தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக கரூர்-ஈரோடு, கரூர்-கோவை சாலைகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுயைமான குளிரில் பலர் பாதிக்கப்பட்டனர். கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் திருவிகா மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் தேர்தல் முடிந்த பின்னர் அவரை விடுவித்தனர். அவரும் தன்னை தி.மு.க.வினர் கடத்திச் சென்றதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகியை கடத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




    • காரில் சென்ற என்ஜினீயரை கும்பல் பட்டா கத்தியால் தாக்கியது.
    • மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). மஸ்கட் நாட்டில் பொறியாளராக உள்ளார்.

    இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் ஆண்டுக்கு 2 முறை மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இவர் மதுரை வந்திருந்தார். மகனை பள்ளியில் விடுவதற்காக, செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சர்வேயர் காலனிக்கு வந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் கும்பல் பட்டாக்கத்திகளுடன் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் கூறுகையில், "எனக்கும் சகோதரர் நவநீதகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் உள்ளது. அவர் என்னை ஆள் வைத்து தாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் செந்தில்குமாருடன் தொடர்பு உடைய சிலரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாரின் மனைவி சிலரிடம் ரகசியமாக பேசி வருவது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை-சிவகங்கையில் ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சிலைமான், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் 7 பேரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்தது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த சேதுபதி என்பவர் மகன் மவுலிகண்ணா (வயது21). இவர் தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேைல முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அப்போது 3 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இதே போல் எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த ஜாபர் ெஷரிப் என்பவர் சம்பவத்தன்று இரவு வெளியே வந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் மதுரை கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்த மகாதேவன் (24), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், கொந்தன்குளம் சதீஷ்குமார் (23) என்பதும், இவர்களது கூட்டாளி சிவா என்றும் தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிலைமான், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் 7 பேரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கம்ப்யூட்டர் என்ஜினீயரை தாக்கி லேப்டாப், செல்போன் பறித்த 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    மதுரை

    ஆந்திர மாநிலம், நாராயணபுரத்தைச் சேர்ந்த சிம்மாசலம் மகன் அனவேஸ் (வயது 19). இவர் மதுரை வளர் நகரில் தங்கி தனியார் கணினி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், நண்பர்கள் சாஜித், ஜீவன்குமார் ஆகியோருடன் மதுரை-மேலுார் 4 வழிச் சாலையில் நடந்து சென்றார்.

    அங்கு வந்த 10 பேர் கும்பல், அனவேசிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியது. அவர் தர மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல், அனவேசை தாக்கியது. பின்னர் அந்த கும்பல் அனவேஸ் வைதத்திருந்த லேப்டாப், செல்போனை பறித்து கொண்டு தப்பியது.

    காயமடைந்த அனவேசை நண்பர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை, ஆதிநாராயணன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அனவேசை தாக்கிய கும்பல் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீசார் கருப்பாயூரணி, மேலூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் 7 பேர் சிக்கினர்.

    அவர்களை போலீசார் மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களில் 2 பேர் தவிர மீதம் உள்ள 5 பேரும் சிறுவர்கள் என்பது தெரியவந்தது.இதையடுத்து அனவேசிடம் லேப்டாப், செல்போன் திருடிய மேலூர் தெற்கு தெரு, வைத்தியநாத அய்யர் சந்து பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வசந்தகுமார் என்ற மணிப்புறா (24), கருப்பாயூரணி சீமான் நகர், பிள்ளையார் கோவில் தெரு முத்துப்பாண்டி மகன் மாலை வீரன் (21) ஆகியோர் உள்பட 7 பேரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்ணை, தொழிலாளி தாக்கினார்.
    • பணம் தர மறுத்ததால் தாக்கியதாக கூறினார்.

    மதுரை

    மேலூரை அடுத்த கள்ளம்பட்டியை சேர்ந்த நேவான் மனைவி பழனி (வயது 58). இவர் நேற்று மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    அங்கு ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தை சேர்ந்த முருகன்(45) என்பவர் சாலையோரத்தில் விண்ணப்ப மனுக்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். பழனி அவரிடம் மனு எழுத கொடுத்தார். அவரிடம் முருகன் ரூ.250 பணம் கேட்டதாக தெரிகிறது.

    மூதாட்டி பணம் தர மறுத்தார். ஆத்திரமடைந்த முருகன் மூதாட்டியை தாக்கினார். இதுகுறித்து மூதாட்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வியாபாரி முருகனை கைது செய்தார்.

    • ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்
    • சோனியா காந்தி நகர் ஆதிகேசவன்

    புதுச்சேரி:

    வேலை தேடி வந்த வடமாநில வாலிபரை குடிபோதையில் தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் (வயது22). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை தேடி புதுவை வந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சோனியா காந்தி நகர் ஆதிகேசவன் தெரு ஒரு குடியிருப்பில் தங்கியிருக்கும் தனது ஊரை சேர்ந்தவர்களின் வீட்டில் இருந்து வந்தார்.

    அசோக் தான் தங்கியிருந்த வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கும்பல் அசோக்கிடம் ஏதோ கேட்டனர். ஆனால் அசோக்குக்கு பாஷை புரியவில்லை என்பதால் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கு கிடந்த கருங்கற்களை எடுத்து அசோக்கின் தலையில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த காயம் ஏற்பட்டு அசோக் அலறல் சத்தம் போடவே அவரது ஊர்காரர்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம டைந்த அசோக் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்திரையர்பாளையம் செந்தில்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி குணாவதி. கட்டிட தொழிலாளி. இவர் தான் புதிதாக கட்டி வரும் வீட்டில் மணல் கொட்டி நிரப்பியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் தாயார் புஷ்பா அவரது வீட்டு பாத்திரங்களை எடுத்து வந்து குணாவதியின் வீட்டில் வைத்தார். இதையடுத்து குணாவதி தட்டிக்கேட்ட போது புஷ்பாவின் மகன் ராஜாமணி தகாத வார்த்தைகளால் திட்டி குணாவதியை கையால் தாக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் இதனை தடுக்கவே ராஜாமணி அங்கி ருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து குணாவதி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
    • இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே உருவையாறு லட்சுமி நரசிம்மர் நகரை சேர்ந்தவர் காந்தி (வயது62). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரம்சந்த் திருமணம் முடிந்து தனது மனைவி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் மாடியில் வசித்து வருகிறார். இளையமகன் ஸ்ரீதர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே கரம்சந்த் தனது பெற்றோரிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் வாசலில் இருந்த அலங்கார விளக்கை கரம்சந்த் கழற்றிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் வசந்தி பார்த்து ஏன் அலங்கார விளக்குகளை கழற்றுகிறாய் என கேட்டார். அப்போது கரம்சந்த் தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை தட்டிக்கேட்ட அவரது தந்தை காந்தியை முகத்தில் குத்தினார். இதனை தடுக்க முயன்ற தாயையும் அவர் தாக்கினார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த காந்தி மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோர் கரிக்கலாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து காந்தி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • அம்மாபேட்டையில் போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நாகராஜ் (35). லாரி டிரைவர்.

    இவர் நேற்று மாலை அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் தனது மோட்டார் சைக்கிளுக்கு என்ஜின் ஆயில் இலவசமாக மாற்றி தர வேண்டும் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையன் மற்றும் போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் நாக ராஜை எச்சரித்தனர்.

    மேலும் நாகராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாகராஜ் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நாகராஜ் போலீஸ் ஏட்டுவின் சட்டையை பிடித்து தாக்கி பேனாவால் குத்தினார். மேலும் அவரின் கை விரலை கடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் ஏட்டு முருகன் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் நாகராஜை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

    இது குறித்து போலீஸ் ஏட்டு அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×