search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வடமாநில வாலிபரை தாக்கிய கும்பல்
    X

    கோப்பு படம்

    வடமாநில வாலிபரை தாக்கிய கும்பல்

    • ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்
    • சோனியா காந்தி நகர் ஆதிகேசவன்

    புதுச்சேரி:

    வேலை தேடி வந்த வடமாநில வாலிபரை குடிபோதையில் தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் (வயது22). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை தேடி புதுவை வந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சோனியா காந்தி நகர் ஆதிகேசவன் தெரு ஒரு குடியிருப்பில் தங்கியிருக்கும் தனது ஊரை சேர்ந்தவர்களின் வீட்டில் இருந்து வந்தார்.

    அசோக் தான் தங்கியிருந்த வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கும்பல் அசோக்கிடம் ஏதோ கேட்டனர். ஆனால் அசோக்குக்கு பாஷை புரியவில்லை என்பதால் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கு கிடந்த கருங்கற்களை எடுத்து அசோக்கின் தலையில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த காயம் ஏற்பட்டு அசோக் அலறல் சத்தம் போடவே அவரது ஊர்காரர்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம டைந்த அசோக் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்திரையர்பாளையம் செந்தில்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி குணாவதி. கட்டிட தொழிலாளி. இவர் தான் புதிதாக கட்டி வரும் வீட்டில் மணல் கொட்டி நிரப்பியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் தாயார் புஷ்பா அவரது வீட்டு பாத்திரங்களை எடுத்து வந்து குணாவதியின் வீட்டில் வைத்தார். இதையடுத்து குணாவதி தட்டிக்கேட்ட போது புஷ்பாவின் மகன் ராஜாமணி தகாத வார்த்தைகளால் திட்டி குணாவதியை கையால் தாக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் இதனை தடுக்கவே ராஜாமணி அங்கி ருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து குணாவதி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×