search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கிய வாலிபர்"

    • 23 வயது மாணவி. தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடையை சேர்ந்தவர் 23 வயது மாணவி. இவர் நவஇந்தியாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    மாணவி பள்ளியில் படிக்கும் போது வாலிபர் ஒருவருட ன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் வாலிபரின் நடவடிக்கைகள் மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனால் அவர் வாலிபரை காதலிப்பதை நிறுத்தினார். மேலும் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் வந்தார்.

    அவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று அவரிடம் பேச முயன்றார். ஆனால் மாணவி பேசாமல் நடந்து சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகள் பேசி மாணவியை தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து மாணவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இளம்பெண் காந்திபுரத்தில் உள்ள அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் காந்திபுரத்தில் உள்ள அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு 80 அடி ரோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். பின்னர் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    இதனையடுத்து இளம்பெண் வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்தார். அவரது காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் வாலிபரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றார். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.

    இதனையடுத்து அவர் செல்போன் மூலமாக தனது முன்னாள் காதலிக்கு தன்னிடம் பேசி பழகுமாறு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். ஆனால் இதனை இளம்பெண் கண்டுகொள்ளவில்லை.

    சம்பவத்தன்று இளம்பெண் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்று விட்டு 80 அடி ரோடு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அவரது முன்னாள் காதலன் தன்னிடம் பேசி பழகுமாறு கூறினார். அதற்கு இளம்பெண் பதில் அளிக்காமல் நடந்து சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவரது முன்னாள் காதலன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னுடன் பழக மறுத்த முன்னாள் காதலியை நடுரோட்டில் வைத்து தாக்கிய வாலிபரை தேடி வருகிறார்கள். 

    ×