search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய வியாபாரி
    X

    கைதான முருகன்.

    மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய வியாபாரி

    • மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்ணை, தொழிலாளி தாக்கினார்.
    • பணம் தர மறுத்ததால் தாக்கியதாக கூறினார்.

    மதுரை

    மேலூரை அடுத்த கள்ளம்பட்டியை சேர்ந்த நேவான் மனைவி பழனி (வயது 58). இவர் நேற்று மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    அங்கு ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தை சேர்ந்த முருகன்(45) என்பவர் சாலையோரத்தில் விண்ணப்ப மனுக்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். பழனி அவரிடம் மனு எழுத கொடுத்தார். அவரிடம் முருகன் ரூ.250 பணம் கேட்டதாக தெரிகிறது.

    மூதாட்டி பணம் தர மறுத்தார். ஆத்திரமடைந்த முருகன் மூதாட்டியை தாக்கினார். இதுகுறித்து மூதாட்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வியாபாரி முருகனை கைது செய்தார்.

    Next Story
    ×