என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது
- மதுரை-சிவகங்கையில் ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- சிலைமான், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் 7 பேரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்தது தெரியவந்தது.
மதுரை
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த சேதுபதி என்பவர் மகன் மவுலிகண்ணா (வயது21). இவர் தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேைல முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அப்போது 3 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இதே போல் எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த ஜாபர் ெஷரிப் என்பவர் சம்பவத்தன்று இரவு வெளியே வந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுபற்றி தெரிய வந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் மதுரை கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்த மகாதேவன் (24), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், கொந்தன்குளம் சதீஷ்குமார் (23) என்பதும், இவர்களது கூட்டாளி சிவா என்றும் தெரிய வந்தது.
அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிலைமான், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் 7 பேரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்