search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arumugasamy inquiry commission"

    ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.#JayadeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 100 சாட்சிகள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.

    டாக்டர்கள் புவனேஸ்வரி சங்கர், பாபு மனோகர், சாய் சதீஷ், மற்றும் நர்சுகள் அனிஷ், சாமூண்டீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    நாளை அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ரேடியா லஜிஸ்ட் டாக்டர் மீரா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தவபழனி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. #JayadeathProbe #ApolloHospital

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆஜரானார்கள். #JayadeathProbe
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் வெங்கட் ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் விளக்கங்களை அளித்தனர்.


    மேலும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆகியோர் இன்று குறுக்கு விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பில் வக்கீல் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். #JayadeathProbe
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது. #JayaDeathProbe #OPanneerSelvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவர் சிகிச்சை தொடர்பாக முடிவு செய்தவர்கள் பற்றியும் மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்த மர்மங்களுக்கு விடை காண்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த விசாரணை கமி‌ஷன் விசாரணையை நடத்தி வருகிறது.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் இந்த விசாரணை கமி‌ஷனின் பதவி காலம் நிறைவு பெற உள்ளது. ஆனால் இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவே விசாரணை கமி‌ஷனின் பதவி காலத்தை நீட்டிக்க செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஜெயலலிதா உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அவர்களது உதவியாளர்கள், ஜெயலலிதாவுக்கு அரசு பணிகளில் உதவியாக இருந்த அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சிகிச்சை அளித்த டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    அந்த வாக்குமூலங்களில் மிகுந்த முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சசிகலா உறவினர்களும், டாக்டர்களும் சொல்லும் தகவல்களுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கலாமோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.


    இந்த விவகாரத்தில் முக்கியமாக கருதப்படுபவர் சசிகலாதான். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர் தான் சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்தார். ஜெயலலிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தது முதல் அடக்கம் செய்தது வரை அருகில் இருந்தது சசிகலா மட்டுமே.

    எனவே சசிகலா சொல்லும் தகவல்கள் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    தற்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு வரவழைத்து விசாரிப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    எனவே பெங்களூர் சிறைக்கே சென்று விசாரணை நடத்தலாமா? என்று ஆறுமுகசாமி கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. சசிகலாவிடம் நேரில் விசாரிக்க அனுமதி கிடைக்காத பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதுபோல ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் டாக்டர்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    சசிகலாவிடம் விசாரணை நடத்திய பிறகு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

    இவர்கள் தவிர அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடமும் விசாரிக்க விசாரணை கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. தேவைப்பட் டால் அப்பல்லோ டாக்டர்களை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா? என்பது தெரிய வரும். #JayaDeathProbe #OPanneerSelvam #Vijayabaskar #Arumugasamycommission
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். #JayaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதுவரை 100-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்தி இருக்கிறது. டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

    சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.


    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ ஆஸ்பத்திரி, நிர்வாக அதிகாரி டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களில், சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாதவர்களுக்கு ஆணை யம் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    ஆஜராகாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சம்மனில் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டாக்டர்கள் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.

    நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஜெயலலிதா சிகிச்சை பற்றி வாக்குமூலம் அளித்தார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறினார். #JayaDeathProbe #ApolloHospital
    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 23-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை கமி‌ஷன் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

    வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ளனர்.

    தற்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, நிதிஷ் நாயக், அஞ்சன் டிரிக்கா ஆகிய 3 பேருக்கும் விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



    அதில், வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    அப்பல்லோவில் வருகிற 29-ந்தேதி ஆணையம் ஆய்வு செய்யும் போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்று ஆணையத்திடம் ஜெ. தீபா சார்பில் அவரது வக்கீல் மனு அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவ்வப்போது குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே ஆஜராகி இருக்கிறார். கடந்த 10 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    வருகிற 29-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆணையம் சார்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் அப்போது உடன் செல்கிறார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுகள், அமைச்சர்கள் தங்கி இருந்த இடங்கள், வி.ஐ.பி.க்கள் வந்து சென்ற இடங்கள் என 10 இடங்களை ஆணையம் சார்பில் போட்டோ எடுக்க உள்ளனர்.

    இந்த ஆய்வின் போது அப்பல்லோவுக்கு தன்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்றுஜெ.தீபா கூறி உள்ளார்.

    இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா சார்பில் வக்கீல் சுப்பிரமணியம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகிய நாங்கள் இருவரும்தான் ஜெயலலிதாவின் ரத்த உறவுகள். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில்தான் இதற்கு முன்பு வசித்து வந்தோம்.


    ஜெயலலிதாவின் இறுதி சடங்கையும் தீபக் நடத்தினார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது ஆஸ்பத்திரிக்குள் என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

    இப்போது ஆணையம் சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும், போயஸ் கார்டனிலும் ஆய்வு செய்ய போவதாக அறிகிறேன். இந்த ஆய்வின் போது என்னையும், எனது வக்கீலையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    நான் ரத்த உறவு என்பதால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டை பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆணையத்தில் அளிக்க கூடிய சாட்சிகள் சில உண்மை தன்மை இல்லாததால் தன்னை முக்கிய சாட்சியாக ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். #Jayalalithaa #Deepa
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் இன்று ஆஜரானார்கள்.
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஆஜராகுமாறு பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலா உறவினர்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார்.

    இந்த நிலையில் இன்று விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இவர்கள் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி இருந்தனர். தற்போது மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

    டாக்டர்கள் இருவரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி தனது சந்தேகங்களையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரித்தார்.

    இதே போல் ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த ராமலிங்கம், ஸ்டெல்லா மேரீஸ் கிளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளர் மகாலட்சுமி ஆகியோரும் இன்று ஆஜரானார்கள். சசிகலா தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி குறுக்கு விசாரணை நடத்தினார். #Jayalalithaa
    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    அதன்பிறகு சிறை வாசலில் நிருபர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் வாய்சவடால் பேசுகிறார். ஆனால் இதுவரை அவர் தூத்துக்குடி பக்கமே போகவில்லை.

    நாங்கள் தூத்துக்குடியில் தெருத்தெருவாக சென்றோம். அதுபோல் அவரை போகச் சொல்லுங்கள் பார்ப்போம். 2 ஆயிரம் போலீசாரை கூட அழைத்து செல்ல சொல்லுங்கள். இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம் ஆறுதல் சொல்லி விட்டு வரவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் இங்கேயே உட்கார்ந்து கொண்டுள்ளார்.

    18 சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்ப்பு விரைவில் வரப்போகிறது என்கிறீர்கள். முதலில் தீர்ப்பு வரட்டும் மற்றதை பார்க்கலாம்.

    நாங்கள் எங்கள் கட்சி அலுவலகத்தை ஜூன் 3-ந் தேதி திறந்ததற்கும், கருணாநிதி பிறந்தநாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    1988-ல் அம்மா ஆழ்வார்பேட்டை அசோக் தெருவில் கட்சி அலுவலகம் திறந்தபோது இப்படித்தான் எதிர் அணியில் இருந்தவர்கள் பேசினார்கள். அதுபோல இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்று பேசுகிறார்கள்.

    அசோக்நகரில் அலுவலகம் திறந்ததோடு கோட்டையையும் நாங்கள்தான் பிடிப்போம். அ.தி.மு.க. தலைமை கழகத்தையும் அம்மாவின் உண்மை தொண்டர்களாகிய நாங்கள் நிச்சயமாக மீட்டெடுப்போம்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என்று பார்த்தோம். அம்மா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்ட போது அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள்.

    கடந்த வாரம் விசாரணை ஆணையத்தில் அம்மா பேச்சு அடங்கிய ஆடியோவை டாக்டர் சிவக்குமார் சமர்ப்பித்திருந்தார். அந்த ஆடியோவை ஆறுமுகசாமி ஆணையமே வெளியிடுகிறது.

    இந்த ஆடியோவை வெளியிட்டதற்கு என்ன காரணம்? இதற்கு யார் மீது வழக்கு தொடுப்பது? தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இதனை வெளியிட்டுள்ளனர். ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கமே இதுவரை தெரியவில்லை.

    இவ்வாறு தினகரன் கூறினார்.

    அப்போது அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் கே.எஸ்.வேதாச்சலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.  #TTVDhinakaran
    சசிகலா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். #JayalalithaaDeath #Jayalalitha
    சென்னை:

    2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. பத்திரிகையாளர் சோ மகன் ஸ்ரீராம், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜ் (முன்பு ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தவர்) ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

    ‘பத்திரிகையாளர் சோ ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கி வந்தார். இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மறைந்த சோ மூலம் ஸ்ரீராமிற்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது’ என்ற அடிப்படையில் ஆணையம் ஸ்ரீராமிடம் விசாரணை நடத்தியது.

    அப்போது அவர், ‘சசிகலா வெளியேற்றப்பட்ட போது போயஸ் கார்டனில் என்னை அனுமதித்ததாக கூறுவது தவறானது. நான், ஜெயலலிதாவை பார்த்தது இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை எனது தந்தை சோவுடன் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி உள்ளார். அதை எனது தந்தை, எங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தது கிடையாது. மறுநாள் பத்திரிகையில் செய்தி வந்த பிறகு தான் எங்களுக்கு தெரியவரும்’ என்று கூறி உள்ளார்.

    அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் மருது அழகுராஜ் செய்தி ஆசிரியராக பணியாற்றியதால் அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசி இருப்பார் என்ற அடிப்படையில் அவரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவர் ஆணையத்தில் கூறியதாக கூறப்படுவதாவது:-

    என்னை ஜெயலலிதாவிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியது சசிகலாவின் உறவினர் ராவணன்தான். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வேலை பார்த்த நான், ஜெயலலிதாவுக்கு உரை எழுதி தரும் பணியையும் மேற்கொண்டேன்.

    2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதி செய்கிறார்கள் என்று கூறி அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா என்னிடம், ‘சசிகலா உள்ளிட்டோரை நீக்கி உள்ளேன். இவர்கள் எல்லாம் ராஜ துரோகம் புரிந்தவர்கள். ராவணன் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால் நீங்களும் வெளியே சென்று விடலாம்’ என்று கூறினார். அப்போது நான், ‘உங்களுடன் இருக்கவே பிரியப்படுகிறேன்’ என்றேன்.

    சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, ஜெயலலிதா தனது நம்பிக்கைக்கு பாத்திரமான பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியன் போயஸ் கார்டன் பணிகளை மேற்கொள்வார் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுமாறும் எனக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் 3 மாதங்கள் கழித்து சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா இறக்கும்வரை சேர்த்துக்கொள்ளவில்லை.

    ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்தும் போயஸ் கார்டனில் ஆம்புலன்சை தயார் நிலையில் வைத்திருக்க எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

    போயஸ்கார்டனில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்காதது யாருடைய குற்றம்?. ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களின் குற்றம்தானே. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

    ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் மருத்துவமனையில் கூடியிருந்த சிலர் பொய் சொன்னார்கள். இதை ஏன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவில்லை. அப்படியென்றால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் உடந்தை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.



    இவ்வாறு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மருது அழகுராஜூவிடம் ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர். #JayalalithaaDeath #Jayalalitha 
    ×