search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபா"

    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது காதலன் சிராஜூதீனிடம் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    'வாய்தா' படத்தில் கதாநாயகியாக நடித்த 29 வயதான நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா, தான் வசித்து வந்த சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் நடிகை பவுலின் ஜெசிகா, சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பவரை காதலித்து வந்ததும், தற்கொலைக்கு முன்பாக கடைசியாக சிராஜூதீனுடன் தான் அவர் பேசியதும் தெரிந்தது. சிராஜூதீனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர், காரைக்குடியில் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்படிப்பில் கலந்து கொண்டு இருந்ததால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

     

    இந்நிலையில் நேற்று சிராஜூதீன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான், நடிகை பவுலின் ஜெசிகாவை காதலிக்கவில்லை. அவர்தான் என்னை காதலித்து வந்தார். அவருக்கு நான் ஒரு நல்ல நண்பராக இருந்து வந்தேன். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததால் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தேன்.

     

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    அது சம்பந்தமாக என்னிடம் அடிக்கடி பேசி வந்தார். நான் வாங்கி கொடுத்த செல்போனை எடுத்து வரும்படி எனது நண்பரிடம் நான் சொல்லவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக என்னிடம்தான் பவுலின் ஜெசிகா பேசினார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

     

    இதையடுத்து போலீசார், நடிகை பவுலின் ஜெசிகாவுக்கு உண்மையாகவே தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததா?. இதற்காக அவர் சிகிச்சை பெற்றது உண்மையா? என்பதை கண்டறிய அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நடிகையின் செல்போன் முடிவுகள் வந்த பிறகு பவுலின் ஜெசிகா தற்கொலையில் இறுதி முடிவு எட்டப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.

    சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.


    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர்.


    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னை, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் என்று அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை தீபாவின் வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி அலைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட விவரங்களை வைத்து காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தீபாவின் ஐ போனை காணவில்லை என்று நடிகையின் சகோதரர் ராஜூ ஏற்கனவே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபாவின் சகோதரரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.

    சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

     

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.

     

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

     

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    இந்நிலையில் நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர். காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னையில் விசாரணைக்கு ஆஜாராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெசிகாவின் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை கைப்பற்றி இருக்கும் போலீசார், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டுள்ளனர்.

    தீபா

    தீபா

     

    "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று ஜெசிகா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஜெசிகா, ஒருதலை காதலால் உயிரை விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நடிகையின் இந்த ஒருதலை காதலின் பின்னணி பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நடிகை ஜெசிகாவை ஒருதலையாக காதலில் விழ வைத்த வாலிபர் சினிமா துறையைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தீபா

    தீபா

     

     

    நடிகை எழுதிய கடிதத்தில் தான் காதலித்த வாலிபர் யார்? என்பதை குறிப்பிடவில்லை. இதனால் அவர் யார்? என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாததால், நடிகை ஜெசிகாவின் செல்போன் எண்ணை வைத்து அவரது காதலன் யார்? என்பதை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவரது செல்போனை முழு மையாக ஆய்வு செய்து வருகிறார்கள். தற்கொலை தொடர்பாக செல்போனில் ஏதேனும் பதிவுகளை ஜெசிகா வைத்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தீபா

    தீபா

     

    நடிகையின் காதலனை அடையாளம் கண்டு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதால், இந்த விசாரணைக்கு பிறகே நடிகை தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா? என்பது தெரியவரும். இதற்கிடையே நேற்று காலையில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த நடிகை ஜெசிகா வண்ணாரப் பேட்டையை சேர்ந்த தனது நண்பர் ஒருவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை, சாகப்போகிறேன் என்று கூறிவிட்டு துண்டித்துள்ளார்.

    தீபா

    தீபா

     

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் அருகில் உள்ள சக நண்பர்களுடன் அங்கு சென்று பார்ப்பதற்குள் ஜெசிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெசிகாவின் மறைவிற்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்தவர் தீபா.
    • சென்னை விருகம்பாக்கத்தில் நடிகை தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற பவுலின் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 29. இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

     

    தீபா

    தீபா

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளார்.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை அறையை பார்வையிட ஜெ.தீபாவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #Jayalalithaa #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் ராஜன் ஹெக்டே மற்றும் நர்சு ஜோஸ்னமோல் ஜோசப் ஆகியோர் இன்று ஆஜரானார்கள். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி செய்தவர்கள்.

    அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு இருவரும் பதில் அளித்தனர். இதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனை ஆய்வின்போது தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடந்தது.

    அப்போது ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் ஆய்வில் பங்கேற்பதற்கு ஆணையம் மற்றும் அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து ஜெ.தீபா சார்பில் ஆஜராக வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    ஆய்வின்போது தனது ஆதரவாளர்கள் வந்தாலும் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுடன் நடப்பார்கள். எந்த தவறும் நடக்காது என்று அதில் கூறி இருந்தார்.

    ஜெ.தீபாவின் உறுதி மொழியை ஏற்று அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா மற்றும் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பங்கேற்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முதலில் அனுமதி வழங்கியது. 

    பின்னர், அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் பங்கேற்க தீபாவிற்கு அனுமதி இல்லை என்றும், ஆனால் வரும் 29-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆணையம் ஆய்வு செய்யும் போது ஜெ சிகிச்சை பெற்ற அறையை இரவு 8.15 மணி முதல் 8.40 வரை தீபா பார்வையிட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. #Jayalalithaa #Deepa #inquiryCommission #ApolloHospital
    ×