search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annadanam"

    • கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும்.
    • நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 118-வது பிறந்த நாள் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். சரவணன் தலைமையில் தியாகராய நகரில் கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாளையொட்டி ம.பொ.சி. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்க நிறுவனர் டாக்டர் கே.வி.எஸ்.சரவணன் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரரும் தமிழறிஞருமான சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    பனைத்தொழில் பாதிப்படையும் வகையில் பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் எம்.பி.மணி, அன்பழகன், உதயா, ஜெயசங்கர், உதய சங்கர், மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கமுதியில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதியில் உள்ள வளையக்கம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னதாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தலைசுமையாக பூஜை பெட்டியை சுமந்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் சாட்டையால் அடித்துக் கொண்டும் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஜெயராமன், மூர்த்தி, வினோத், ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.

    புதுச்சேரி:

    உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பசியாற உணவு அளிக்க வேண்டும் என்று, விஜய் மக்கள் இயக்க தலைவர் முன்னாள்

    எம்.எல்.ஏ புஸ்சி ஆனந்த் உத்தரவின் பேரில் திருபுவனை தொகுதி இளைஞர் அணி தலைவர் ராஜா ஏற்பாட்டின் படி, திருபுவனையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் அசோக், பொருளாளர் மணி கண்டன், மற்றும் மன்ற நிர்வாகிகள் மணி, ஜீவா, எத்திராஜ், மணிகண்டன், ஜெயராமன், மூர்த்தி, வினோத், ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.

    • மேலூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

    மேலூர்

    மேலூர் காந்திஜி பூங்கா அருகில் உள்ள பாலமுருகன் கோவிலின் 38-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் வழங்கினர். இன்று காலை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினரும், செயலாளர் மலைச்சாமி, நிர்வாக கமிட்டியாளர்கள் தயாநிதி சிங்காரம், கார்மேகம், சீத்தாராமன், மணி, ஹரிகிருஷ்ணன், மோகன், ராமச்சந்திரன், வைராத்தாள் ஆகியோரும் செய்திருந்தனர்.

    • தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.
    • பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையூறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா போர்ட் ஆப் டிரஸ்டிகள் சார்பாக தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-

    நாகூர் தர்காவுக்கு வரும் யாத்ரீகர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை தனி மனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும்.

    குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடுங்கள். தங்களது காலணிகளை தர்கா உள்ளே எடுத்து செல்லாதீர்கள். தர்கா கழிவறைகளை பயன்படுத்தினால் சுத்தம் செய்துவிட்டு செல்லுங்கள். குடிநீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.

    தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.தர்கா குளத்தில் உணவு பொருட்களை, குப்பை களை போடக்கூடாது. பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையுறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.

    தர்காவில் பொது இடங்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கண்டால் தர்கா அலுவலகத்தில் தெரியபடுத்தவும்.

    தங்களது உடைகளை தாங்களே பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை உடைமைகள் பொருட்கள் தொலைந்தால் தர்கா அலுவலகம் முன் அமைந்துள்ள தொண்டர் படையை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

    அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களது குறை நிறைகளை மானேஜிங் டிரஸ்டி, நாகூர் தர்கா, நாகூர்-611002 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக தெரியுங்கள்.

    அவரச குறை நிறைகளை வாட்சப் மூலமாக தர்கா மானேஜிங் டிரஸ்டிக்கு 96774-10786, 98424-41404 அனுப்பவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனையும், பஜனையும் நடைபெற்றது.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே, உத்தாணி மெயின் ரோட்டில், முத்து முனியாண்டவர் திருக்கோயிலில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலில், 28ஆம் ஆண்டை முன்னிட்டு அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனையும், பஜனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி ஸ்ரீ அய்யப்பன் பாடல்களை பக்தர்கள் மேள தாளங்களுடன் பாடினார்கள்.

    விழாவில் கலந்து கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள், பெண்கள் ஆகியோர் அய்யப்பன், முத்து முனியாண்டவரை தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்ப ட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தாணியை சேர்ந்த கிராமவாசிகள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • ஜெயலலிதா நினைவுநாளில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
    • ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    சிவகாசி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற அபினேஷ்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ரத்தின விலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி மற்றும் நிர்வாகிகள் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நகர (வடக்கு) செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், நகர (தெற்கு) செயலாளர் பரமசிவம், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என். பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்பட ரதத்துடன் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக ஜவகர் மைதானத்தை சென்றடைந்தது.அங்கு அம்மா உணவகம் அருகில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் வி.எஸ்.ராஜா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் யோகசேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, வனராஜ், நகர மகளிர் அணி செயலாளர் ராணி, வள்ளியம்மாள், மாவட்ட பிரதி நிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி ஆந்திராகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

    பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக தொன்னையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
    • திருமண பந்திகளில் பரிமாறுவது போல், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் வாழை இலை போட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    கொரோனா தொற்று குறைந்த பிறகு கடந்த சில நாட்களாக தொன்னையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அது பக்தர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இந்நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று முதல் பக்தர்களை அமரவைத்து, மீண்டும் வாழை இலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. திருமண பந்திகளில் பரிமாறுவது போல், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    • ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது.
    • ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கு கிராமத்தில் மன்னார்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பெரமையா கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இங்கு ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது. மேலும் காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முடியும் வரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக திங்கட்கிழமைகளில் விமர்சையாக ஆடி திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

    அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும்.
    அன்னதானம், சொர்ண தானம், வஸ்திரதானம், கோதானம், பூ தானம், கண் தானம் என்று தானங்கள் பல வகைப்படும். இவற்றையெல்லாம் விட ஒரு மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய தானம், ‘நிதானம்.’ அந்த நிதானம் நம்மோடு இருந்தால் நிம்மதி கிடைக்கும். ‘பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். எனவே எதையும் நிதானமாகச் செய்ய வேண்டும்.

    தானங்களில் பிறர் பசியைப் போக்கும் அன்ன தானம் முதன்மை பெறுகிறது. அன்னதானம் என்பது பிறர் பசியைப் போக்குவது. பாத யாத்திரை வருபவர்களுக்கு, ஸ்தல யாத்திரை வருபவர் களுக்கு, கிரிவலம் வருபவர்களுக்கு எல்லாம், நடந்துவரும் களைப்பைப் போக்க பல இடங்களில் பலரும் உணவளிக்கின்றனர். அதன் மூலம் அவர்களது ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது. தானங்களில் எல்லாம் சிறந்த தானம் ‘அன்னதானம்.’

    ஒருவரிடத்தில் எதைக் கொடுத்தாலும் ‘போதும்’ என்று சொல்ல மாட்டார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், பணம் கொடுத்தால் ‘இன்னும் கொஞ்சம் தரலாமே’ என்றுதான் மனம் நினைக்கும். ஆனால் சாப்பாடு போடுகிற பொழுது, வயிறு நிறைந்த வுடன் போதும் என்று சொல்லிதான் ஆக வேண்டும். சாப்பிட முடியாத அளவுக்கு இலையில் உணவு பரிமாறி விட்டால், உடனே பதறியபடி ‘போதும்’ என்று சொல்வார்கள். இந்தப் “போதும்” என்ற சொல்லே, அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தைக் கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம் என்று சொல்லி வைத்திருக் கிறார்கள். அன்னதானம் செய்யும் பொழுது, திருப்தியாக நல்ல மனதோடு செய்ய வேண்டும். ‘போதும்’ என்று பிறர் சொல்லும் அளவிற்கு வைக்க வேண்டும்.

    அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் பரிமாற வேண்டும். தங்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு. பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட சிறிய அளவில் தங்களால் முடிந்ததைச் செய்யலாம். தங்கள் மேற்பார்வையில் முறையாகச் செய்ய வேண்டும்.

    அன்னதானத்திற்கு பெயர் பெற்ற ஊர் வடலூர். இங்கு அணையா அடுப்பும், அணையா விளக்கும் உள்ளது. அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்கம்பிள்ளையின் சத்யஞான சபை அருகில் உள்ள மண்டபத்தில், மூன்று வேளையும் பசிப்பிணி போக்கும் அன்னதானம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1867-ல் ஏற்றப்பட்ட அந்த அடுப்பு இன்றுவரை அணையாமல் அன்னத்தைச் சமைத்துக் கொண்டே இருக்கிறது என்று சொன்னால் எவ்வளவு ஆச்சரியம்.

    தைப்பூச விழாவின் போது பழனிக்கு, பல லட்சம் பக்தர்கள் நடைப்பயணமாக செல்கிறார்கள். நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல் வைத்து தண்ணீர் கொடுப்பார்கள். நீர், மோர் கலந்து ஒரு சிலர் கொடுப்பார்கள். ரொட்டி, பழம், லட்டு என ஒரு சிலர் வழங்குவார்கள். அதனால் புண்ணியத்தை சேர்க்க முற்படுகின்றனர். ஆனால் வாங்கிய பொருட்களை அவமதிக்காமல் யாருக்காவது பயன்படும் விதத்தில் கொடுத்து உதவ வேண்டும். இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் உணவை வீணாக்கக் கூடாது. கொடுப்ப தற்கு ஆளின்றி இருக்கும் இவ்வுலகில், உணவைக் கெடுப்பதற்கு ஒருபோதும் நினைக்கா தீர்கள்.

    வாரம் ஒருவருக்கு அல்லது மாதம் ஒருவருக்கு உணவு வழங்கலாம். வருடம் ஒரு முறை விழாக்களை முன்னிட்டு அன்னதானம் வழங்கலாம். உங்களது பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்தநாள், முன்னோர்களின் நினைவு நாள் ஆகிய நாட்களிலும், இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

    அன்னதானம் செய்ய இயலாதவர்கள், ‘பசி’ என்று சொல்லி வருபவர்களுக்கு முகமலர்ச்சியோடு உணவளித்தாலே போதும். அதுவே அன்னதானத்திற்குச் சமமானதுதான். அடுத்தவர் முகமறிந்து பசிதீர்த்து, பிறகு நாம் நமது பசிக்கு உருவருந்தினால், அது இந்தப் பிறவியின் பயனை நமக்கு பெற்றுத்தரும். எனவே பசித்தவருக்கு ‘இல்லை’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். இருப்பவற்றை கொடுத்து இளைப்பாறச் செய்யுங்கள். இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து, எந்நாளும் உதவி செய்வான் என்பது உண்மை.

    அன்புடனும், கருணையுடனும் மனிதாபிமான அடிப் படையிலும் செய்யும் அன்னதானங்கள், நம்முடைய அடுத்த பிறவி வரை பலன் கொடுக்கும். மீனுக்கு பொரி போடுவதும், யானைக்கு கரும்பு கொடுப்பதும், பசுவிற்கு கீரை, பழம், வைக்கோல், பருத்திக் கொட்டை கொடுப்பதும் கூட ஒரு வகையில் அன்னதானம் தான். அன்னதானம் செய்பவர்களின் வாழ்க்கையில் பசிப்பிணி வராது. அவர் களின் சந்ததிகளும் தழைத்தோங்க வழிகிடைக்கும்.

    அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும்.
    திருப்பதி பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான 13-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 6 நாட்கள் மொத்தம் 16 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. #Tirupati #Brahmotsavam
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்ட அதிகாரி வேணுகோபால் கூறியதாவது:-

    பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம், குடிநீர், மோர், காபி, டீ, பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. திருமலையில் உள்ள தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 12 மணிவரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதுதவிர திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 1,2,3,4 ஆகியவற்றில் நிரந்தரமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகள் அருகில், தரிசன கவுண்ட்டர்கள், நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகள், திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் கதம்பம், சாம்பார், தயிர், புளிசாதம், உப்புமா ஆகிய உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆக மொத்தம் பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் 1 லட்சம் பக்தர்களுக்குமேல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான 13-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 6 நாட்கள் மொத்தம் 16 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று 5 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்களுக்கு உணவும், 3 லட்சம் மோர் பாக்கெட்டுகளும், 3 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. தினமும் 10 டன் காய்கறிகளை பக்தர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்களாக மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 826 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். #Tirupati #Brahmotsavam

    ×