search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirunallar temple"

    • வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது.
    • சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது. அதேசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், இன்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதல் திருநள்ளாறு நலன் குளத்தில் புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரி சனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்த சாமி தம்பிராயன் சுவாமிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், போலீசார் செய்து வருகின்றனர்.

    • சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
    • பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    திருநள்ளாறில் உலகபுகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

    சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.

    பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவிலுக்கு 25 பஸ்கள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் 15-ந்தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றார்.

    • சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி நடக்கிறது.
    • இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இ்ங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.

    அதிகாலை முதலே வந்த பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் எள் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகையையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நகர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வெளி மாநிலங்களிலில் இருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.
    • கோவில் அருகே உள்ள நள தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கோடைவிடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது். இதையொட்டியும் நேற்று சனிக்கிழமை என்பதாலும் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் பக்தர்கள் குவிந்தனர்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலில் இருந்தும் திரளான பக்தர்கள் திரண்டனர். கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, கோவில் அருகே உள்ள நள தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர். கோடை வெயில் தாக்கிவருவதால் பக்தர்கள், வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். அங்கு வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின் சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
    • டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 3-ந்தேதி நடந்தது.

    இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதி உலா வந்தார். முன்னதாக சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று இரவு தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் வருகிற டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    • நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலா நடக்கிறது.
    • 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.

    காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 23-ந் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் வாகன ரூடராய் சகோதர வீதி உலா நடைபெற்றது. விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 5 தேர்களில் முதல் தேர் சொர்ண கணபதி, 2-வது வள்ளி சமேத சுப்பிரமணியர், 3-வது தேர் செண்பக தியாகராஜர், 4-வது தேர் நீலோத்பலாம்பாள், 5-வது தேரில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தனர்.

    நிகழ்ச்சியில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.சிவா , மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை (31-ந் தேதி) சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய அடியார்கள் நால்வரும் பல வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதையடுத்து வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகன சகோபுர வீதியுலாவும், 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • மே 30-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.
    • ஜூன் 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி அளவில் ரிஷப வானத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் இளநீர் விபூதி, பழரசம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 23-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலாவும், மே 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சாலை சீரமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட வருகின்றது.

    • 30-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.
    • ஜூன் 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கணபதி பூஜை நடந்தது.

    முன்னதாக இரட்டை விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லாக்கில் வீதியுலா மே 23-ந் தேதியும், மே 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்க காக்கை வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
    • கொடியேற்றம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சிவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும். விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியாக, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நடைபெற்றது. நேற்று காலை 5 தேர்களுக்கான தேர்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மேற்சவ விழா கொடியேற்றம் வருகிற 16-ந் தேதியும், தியாகராஜர் ஆட்டம் எனப்படும் உன்மத்த நடனம் 27-ந் தேதியும், தேரோட்டம் 30-ந் தேதியும் நடக்கிறது. சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி வருகிற 31-ந் தேதி நடக்கிறது.

    தெப்போற்சவவிழா அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

    திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.
    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. விழாவில் கோவில் அறக்கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் வருகிற 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா, 9-ந் தேதி தேரோட்டம், 10-ந் தேதி சனீஸ்வரர் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா, 11-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்சியான 5 தேர்கள் பங்கேற்கும் தேரோட்டம் வரும் ஜூன் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கொடியேற்றம் வரும் 26-ந் தேதி நடைபெறவுள்ளது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்சியான 5 தேர்கள் பங்கேற்கும் தேரோட்டம் வரும் ஜூன் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதற்காக 5 தேர்களை அலங்கரிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் தேர்களில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக்கை சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிவடையும் எனவும், அதேபோல், தேர் செல்லும் சாலைகள் சீர்படுத்தும் பணி இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கி முடிவடையும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிருநாதன் தலைமையில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    ×