search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol"

    • பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • மது அருந்தி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஐயப்பன் (வயது 30). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பேரளம் போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இறப்பதற்கு முன் ஐயப்பனுடன் பேரளம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் மணிகண்டன், பிரபு உள்ளிட்ட நண்பர்கள் மது விருந்து நடத்தி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனைத் தொடர்ந்து இறந்து போன ஐயப்பனின் தந்தை அன்பழகன், தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் பேரளம் போலீஸ் மணிகண்டன் மற்றும் பிரபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    இந்த புகார் மனு குறித்து மாவடட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி நேரத்தில் உரிய அனுமதியின்றி தனிப்பட்ட நபரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால் மணிகண்டன், பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    பணி நேரத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மது போதையில் நடனம் ஆடிய போலீசார் 2 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோஷின், மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.
    • அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

    திருப்பூர் :

    மது போதையில் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரை சேர்ந்த மோஷின், (36). மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.

    பனியன் தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே பல இடங்களில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கா்நாடகத்தில் இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு திரும்ப அளிக்க வேண்டும்.
    • இஸ்லாமியா்கள் மீதான விரோதப்போக்கினை ஜனநாயகரீதியாக எதிா்கொள்வோம்.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த அருள்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் 23வது மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மேலாண்மைக் குழுத் தலைவா் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம்.எஸ்.சுலைமான், பொதுச்செயலாளா் ஆா்.அப்துல்கரீம், செயலாளா் என்.அல்அமீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-

    கா்நாடகத்தில் இஸ்லாமியா்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு திரும்ப அளிக்க வேண்டும். தமிழகத்தில் 2 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருப்பதை நீக்க வேண்டும். ஹிஜாப் அணிய தடை, காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து 370 பிரிவு நீக்கியது, ஹலால் இறைச்சி தடை உள்ளிட்ட பா.ஜ.க அரசின் அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாமியா்கள் மீதான விரோதப்போக்கினை ஜனநாயகரீதியாக எதிா்கொள்வோம்.

    தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3.5 சதவீத இடஒதுக்கீடு பல துறைகளில் முறையாக வழங்கப்படுவதில்லை. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழக அரசு இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் அனைத்து வழிமுறைகளையும் அரசு நிறைவேற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். 

    • சாப்டூர் வனப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
    • அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை சோதனை இட்டபோது டிரம்களில் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து

    அந்த டிரம்களில் இருந்த சுமார் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அந்தப் பகுதியில் சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுப்பதற்காக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மதுரை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்.
    • மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மது விற்பனை

    மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கள்ளசாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ள சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முழு வதும் உள்ள போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வந்த மணி மகன் ராமச்ச ந்திரன் (வயது 38) என்பவ ரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும், தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கீதா (34), ராஜா இவரது மனைவி சத்யா( 30 )ஆகியோரிடம் இருந்து 40 லிட்டர் சாராயமும், பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பால கிருஷ்ணன் வயது 34 என்பவரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும் நாககு ப்பம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சின்னதுரை (வயது 34) என்பவரிடமிருந்து 10 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்து 5பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்.
    • முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது.

    தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

    மேலும், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற புகாரில் தனியார் பார் உரிமையாளர் பழனி மீது கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மதுவில் சயனைடு கலந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களை உடற்கூராய்வு செய்ததில் சயனைடு இருப்பது தெரியவந்தது.

    இருவரையும் கொல்ல மதுவில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒட்டிய அரசு பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில்,

    இறந்தவர்களின் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதில், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு விஷம் உள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

    இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது.

    இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.
    • சிகிச்சைக்காக 2 பேரும் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 67).

    அதே பகுதியை சேர்ந்தவர் விவேக் (36).

    இவர்கள் 2 பேரும் இன்று கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

    இதை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.

    உடனடியாக இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது,

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு குப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து விவேக்கிற்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழகத்தில் கள்ளசாராயத்தில் பலர் இறந்த நிலையில் தஞ்சையில் இன்று மது குடித்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

    • நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.
    • ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது.

    நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.

    இந்த சலுகையை பெற அலுவலகத்தில் குறைந்தது 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் ஒரு வாளகத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவை வைத்திருக்க வேண்டும் என்றும் அது சுயமானதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில்-பஸ்களில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. தெற்கு -வடக்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதி யாக மதுரை திகழ்கிறது. மதுரைக்கு ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்ற னர்.

    இந்தநிலையில் மது குடித்துவிட்டு பஸ் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் சில பயணிகள் ரகளையில் ஈடுபடுவதால் அனைத்து பயணிகளும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது குடித்து வந்த பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை வேறு வேறு பெட்டிகளில் போலீசார் பிரித்து வைத்த னர். இருந்த போதிலும் போதை அதிகமான ஒரு வாலிபர் மீண்டும் மீண்டும் வேறு பெட்டிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்தனர். அவரது தொல்லை சில மணிநேரம் நீடித்ததால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை அடித்து வழிக்கு கொண்டு வந்தனர்.

    இதேபோல் நீண்ட தூரம் செல்லும் பஸ்களிலும் பயணிகள் மது குடித்துவிட்டு வந்து மோதலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. மதுரை யில் இருந்து செல்லும் பஸ்களில் போதையில் பயணம் செய்யும் பயணிகள் அடிக் கடி ரகளையில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.

    இத்தகைய சம்பவங் களால் பாதிக்கப்படும் பயணிகள் பஸ் மற்றும் ரெயில்களில் மது குடித்து விட்டு பயணம் செய்பவர் களை அனுமதிக்கக்கூடாது.

    மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் அல்லது சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகின்ற னர். இதனை நடைமுறைப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

    • புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் நடந்தது.
    • தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் உமேஷ் (31). சம்பவத்தன்று இரவு இவர் 'நல்உள்ளங்கள் கூட்டமைப்பு" சார்பில், கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உமேஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உமேசை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஸ், சையது அப்துல் என்ற தில்ரூபா, சம்சுதீன், சோட்டு, ஏழு மண்டை என்ற முகமது, காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×