search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது அருந்தி பலி"

    • இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்.
    • முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது.

    தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

    மேலும், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற புகாரில் தனியார் பார் உரிமையாளர் பழனி மீது கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மதுவில் சயனைடு கலந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களை உடற்கூராய்வு செய்ததில் சயனைடு இருப்பது தெரியவந்தது.

    இருவரையும் கொல்ல மதுவில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒட்டிய அரசு பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில்,

    இறந்தவர்களின் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதில், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு விஷம் உள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

    இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது.

    இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×