search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advisory meeting"

    • வருகிற 15-ந் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் வருகிறார்.
    • கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நட்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்

    காங்கயம்:

    காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் காங்கயம் சென்னிமலை சாலை என்.எஸ்.என்.அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி "வாக்குச்சாவடிகளில் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும், வருகிற 15-ந் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் வருகின்ற காரணத்தினால் முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் பேசினார். கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நட்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன், திருப்பூர் மாநகர மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார்,

    மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் மணி, குண்டடம் ஒன்றிய செயலாளர் எம்.பி.சண்முகசுந்தரம், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், சென்னிமலை பேரூர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் அணி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பகுதியில் எம்.எல்.ஏ செந்தில்குமார் தலைமையிலும், கிழக்கு ஒன்றியம் பகுதியில் முன்னாள் எம்.எல். ஏ கோவி. செந்தில்குமார் தலைமையிலும், உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூராட்சி செயலாளர் சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பணியாற்றுவது குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன், கோவிந்தசாமி, சங்கர் உட்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட விவசாய அணி லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர் உவரி கிருபாநிதி ராஜன், வள்ளியூர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் ஞான புனிதா, இந்திரன், பணகுடி பேரூர் துணைச் செயலாளர் ஜெகன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி, திசையன்விளை பேரூர் செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கு பெற்று பூத்கமிட்டி உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பூத் கமிட்டி எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால் துரை செய்திருந்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பூத் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா மண்டல நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேசினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ராஜா, சிவமுருக ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேசினார். கடந்த மாதம் 13, 14-ந் தேதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை யின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் அளித்த வரவேற்பு, அதற்குப் பிந்தைய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், ரேவதி, மாநில மகளிர் அணி செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட செயலாளர்கள் கனல் ஆறுமுகம், அர்ஜுன், பாலாஜி, வீரமணி, மண்டல தலைவர்கள் ஆறுமுகநேரி முருகேச பாண்டியன், திருச்செந்தூர் நவமணிகண்டன், ஆழ்வை கிழக்கு குமரேசன், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ண குமார், அரசு தொடர்பு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, மத்திய அரசு திட்டங்கள் பிரிவு ஆறுமுகநேரி மண்டல தலைவர் அமலரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மேலூரில் வருகிற 14-ந்தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கையில் கூறி உள்ளார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க கலைஞர் நூற் றாண்டு விழா கோலாகல மாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையிலும், டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் கழக இளைஞ ரணி இரண்டாவது மாநில மாநாட்டில் இளைஞர் அணியினர், கழகத்தினர் என 50 ஆயிரத்துக்கு மேற் பட்டோர் பெரும் திரளாக பங்கேற்பது மற்றும் 20-ந்தேதி மேலூரில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை சிறப்புற நடத்து வது உள்ளிட்டவை தொடர் பாக வடக்கு மாவட்ட தி.மு.க. கழகம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 14.09.2023 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு மேலூரில் உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெற உள்ளது.

    இந்த நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட கழக மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வா கிகள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகி கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கிளைச் செயலாளர்கள், நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதி கள், கழகத்தினர் என பெரும் திரளானோர் பங் கேற்று சிறப்பிக்க வேண்டு மென கேட்டுக்கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • திருவண்ணாமலையில் நாளை நடக்கிறது
    • அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றுகிறார்

    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை தி.மு.க. விவசாய அணி கொண்டாட உள்ளது.

    இதனையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை-திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை மண்ட லத்திற்குட்பட்ட தி.மு.க. விவ சாய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    விவாசய அணி மாநில தலைவர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்குகிறார். ஆலோசனை க்கூட்டத்தில் பொதுப்ப ணித்துறை அமைச்சரும், உயர்நிலை செயல்தி ட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    கூட்டத்தில் விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், மண்டல பொறுப்பாளர்கள் டேம் வெங்கடேசன், ர டி.எம்.அரியப்பன், ஜி.புருஷோத்தமன், சூரப்பட்டி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    எனவே ஆலோசனைக்கூட்டத்தில் திருவண்ணாமலை மண்டலத்திற்குட்பட்ட திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, சேலம் மத்தியம், சேலம் கிழக்கு, மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய அணி மாவட்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பாணாவரம் போலீஸ் நிலையத்தில் நடந்தது
    • சிலை 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் போலீஸ் நிலையத்தில் வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி விழா குறித்த அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிலை 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

    சென்ற ஆண்டு சிலை வைத்தவா்கள் மற்றும் ஊா்வலம் நடத்தியவா்களுக்கு மட்டும், இந்த ஆண்டு சிலை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதி வழங்கப்படும்.

    சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் விஜர்சனம் செய்ய வேண்டும்.

    தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தானில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலா ளர் முருகேசன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், முன்னாள் சேர்மன் முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, ஆர்யா, சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டிலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புறநகர்மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதா வது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, சோழ வந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, மருத்துவரணி கருப்பட்டி தங்கப்பாண்டி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழ்பென்னாத்தூர் அலுவலகத்தில் நடந்தது
    • அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குசாவடிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கீழ்பென்னாத்தூர் அலுவலகத்தில் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் நடந்தது.

    துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) மாலதி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் நந்தகோபால் அனைவரையும் வரவேற்றார்.

    கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 285 வாக்குசாவடிகள் பராமரிப்பு நிலை குறித்தும், 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குசாவடிகள் 2- ஆக பிரித்தல் குறித்தும், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 19-பழுதடைந்த மற்றும் இடிக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளை, அதே இடங்களில் இடமாறுதல் செய்து வாக்குசாவடி சீரமைத்தல் குறித்தும் அனைத்து கட்சி நிர்வாகிகளிடமும் விவாதிக்கபட்டு, ஆலோசனை நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இறுதியில் கிராம நிர்வாக அலுவலர் பிரவின்குமார் நன்றி கூறினார்.

    • தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரமக்குடியில் உள்ள சுதந் திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகர–னார் நினைவிடத்தில் செப்டம்பர் 11-ந்தேதி தியாகி நினைவு தினம் அனுசரித்தல் தொடர் பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை முன்னிலையில், மாவட்ட மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், தலைமை–யில் அனைத்துத்துறை அலு–வலர்கள் மற்றும் சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரி–வித்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு விதிமுறைகளை பின் பற்றி நினைவு தின நிகழ்ச் சியில் பங்கேற்றிடும் வகை–யில் அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு கொடுத்து காவல் துறையு–டன் ஒருங்கிணைந்து தேவை–யான முன் அனுமதிகளை பெற்றிட வேண்டும்.

    காவல்துறை வழிகாட்டு–தலின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விளம் பர பலகை வைத்துக் கொள் ளவும். வெளி மாவட்டங்க–ளிலிருந்து வருபவர்களுக்கு தேவையான முன் அனுமதி காவல்துறை மூலம் அனுமதி சீட்டு பெற்று வந்து செல்ல தேவையான நடவடிக்கை–களை முன்கூட்டியே மேற் கொள்ள வேண்டும்.

    மேலும் நினைவிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நினைவு நாள் அன்று வெளியூரிலிருந்து பரமக்குடி–யில் உள்ள நினைவிடத்திற்கு வரக்கூடியவர்களுக்கு காவல்துறையின் மூலம் உரிய வழித்தடங்கள் வழி–யாக பேருந்து சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது. அனும–திக்கப்பட்ட வழித்த–டங்களில் சென்று நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுச் செல்லவும். மேலும் விழா–வினை சிறந்த முறையில் நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித் தார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் வரு–வாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார்கள் ஸ்ரீதர் (ராம–நாதபுரம்), பழனிக் குமார் (கீழக்கரை), கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய–குமார், தேவேந்திரர் பண் பாட்டு கழகம் சார்பில் தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முத்துக் கூரி (ராமநாதபுரம்), மகேஷ் (பரமக்குடி) மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே.முனியசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கள் முனியசாமி (கிழக்கு), சேகர் (மேற்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி தலைவர்களின் கருத்துகளின்படி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்ப ணிக்கான இ-டெண்டரை அந்த ஊராட்சிகளிலே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சிவகங்கை முனியாண்டி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டமைப்பு மாவட்ட தலைவர் உமரிக்காடு ராஜேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    11 அம்ச கோரிக்கை

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி தலைவர்களின் கருத்துகளின்படி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பேற்று 3½ ஆண்டு ஆகிறது. இந்த கூட்டம் 3-ம் ஆண்டாக நடத்தப்படுகிறது. ஊராட்சித் தலைவர்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு இருக்கிறது. அதனை மீட்கும் வகையிலும், ஊராட்சித் தலைவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ. 30 ஆயிரமும், ஓய்வு ஊதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்குவது உட்பட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு அனைவரும் தபால் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

    ஒருங்கிணைப்பாளர் சித்திரவேல் ராமசாமி, இணைச் செயலாளர் சித்திரைபாண்டி, ஒன்றிய கூட்டமைப்பு தலைவர்கள் விளாத்திகுளம் ரவீந்திரன், கோவில்பட்டி ரத்தினவேல், கருங்குளம் அருணாச்சலம் வடிவு உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், ரஜினிகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி யூனியனில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் குமாரகிரி ஜாக்சன் துரைமணி, அய்யனடைப்பு அதிர்ஷ்ட கணபதி ராஜேந்திரன், முள்ளக்காடு கோபி நாத்நிர்மல், கட்டாலங்குளம் சங்கரேஸ்வரி ஏசுவடியான், அல்லிகுளம் ஆனந்தி மாரிமுத்து, திம்மராஜபுரம் சித்திரை செல்வன் உட்பட மாவட்ட முழுவதும் இருந்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக கூட்டமைப்பு மாநில தலைவர் சிவகங்கை முனியாண்டி பங்கேற்று சிறப்புரையாற்றி பேசியதாவது:-

    1994-ம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி ஊராட்சி களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசால் பறிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி, அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது ஏற்புடையதல்ல.

    பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஆடு -மாடு கொட்டகை பயனாளிகள் தேர்வு செய்ய ஊராட்சிமன்றம் மற்றும் கிராம ஊராட்சிசபை தீர்மா னங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்ப ணிக்கான இ-டெண்டரை அந்த ஊராட்சிகளிலே நடத்த அனுமதிக்க வேண்டும்.

    தற்போது ஊராட்சிகளில் ஆன்லைன் வரிவசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி பழைய வரிகளை வசூலிப்பதில் சிரமம் உள்ளது. எனவே கட்சி பாகுபாடு இன்றி அனைத்து ஊராட்சித் தலைவர்களும் செயல்பட வேண்டும். முதல்-அமைச்சர், கவர்னர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் கோரிக்கை தபால்களை அனுப்ப வேண்டும்.

    பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் வருகிற 31-ந்தேதி 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் அனைத்து ஊராட்சித் தலைவர்களும் கருப்பு சட்டை அணிந்து சென்னை யில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஊராட்சி களுக்கு தேவையான மின்விளக்கு, குழாய் பைப்புகள், குப்பைத் தொட்டிகள், பேட்டரி வண்டிகள், டிரைசைக்கிள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட உபகரண பொருட்கள் அனைத்தும் ஊராட்சிகளின் நிதி நிலைக்கு தக்க ஊராட்சி நிர்வாகமே கொள்முதல் செய்யவும், மின்சாரம் கட்டணங்களை செலுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது.

    • பேரூராட்சி மன்றத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கடைகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப் பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த பழைய வணிகவளாக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் அதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் இங்கு ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகள் தங்களுக்கே கடைகள் வேண்டும் என்றும், புதிதாக வியா பாரம் தொடங்கு பவர்கள் எங்களுக்கு தான் கடைகளை விட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய நிலையில் யாருக்கு கடைகளை விடுவது என்று தெரியாமல் இருந்த நிலையில் இப்பிரச்சி னையை வியாபாரிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

    வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த காரணத்தினால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டதது. இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி இக்கடை களுக்கான ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) மீண்டும் நடைபெற உள்ள இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதோடு கடைகளை திறக்க ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள்,பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×