search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பகுதியில் எம்.எல்.ஏ செந்தில்குமார் தலைமையிலும், கிழக்கு ஒன்றியம் பகுதியில் முன்னாள் எம்.எல். ஏ கோவி. செந்தில்குமார் தலைமையிலும், உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூராட்சி செயலாளர் சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பணியாற்றுவது குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன், கோவிந்தசாமி, சங்கர் உட்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×