search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி மன்றம்"

    • பேரூராட்சி மன்றத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கடைகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப் பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த பழைய வணிகவளாக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் அதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் இங்கு ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகள் தங்களுக்கே கடைகள் வேண்டும் என்றும், புதிதாக வியா பாரம் தொடங்கு பவர்கள் எங்களுக்கு தான் கடைகளை விட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய நிலையில் யாருக்கு கடைகளை விடுவது என்று தெரியாமல் இருந்த நிலையில் இப்பிரச்சி னையை வியாபாரிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

    வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த காரணத்தினால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டதது. இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி இக்கடை களுக்கான ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) மீண்டும் நடைபெற உள்ள இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதோடு கடைகளை திறக்க ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள்,பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
    • வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் கூட்ட அரங்கில் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படிநமக்கு நாமே திட்டம் அல்லது பொது நிதி மூலம் செப்டிக் டேங்க் வாகனம் வாங்கி சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்மற்றும் பேரூராட்சி பகுதியில் கழிவறை கழிவுநீர் ஆகியவற்றை அப்புறப்படுத்தலாம். மேலும் அவினாசி பேரூராட்சி பொதுமக்கள்பயன்பாட்டில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை வருவாய் துறையிடம் கேட்டு பெறுவது என்று தலைவர் தனலட்சுமி கூறினார்.

    இதையடுத்துவார்டு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், சூளை பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீரை வெளியேற்றவேண்டியது குடிசை மாற்று வாரியத்தின் பணியாகும். நமது பேரூராட்சிக்கு தேவையான குப்பை வண்டி வாங்க சொல்லி பல கூட்டங்களில் வலியுறுத்தியும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

    திருமுருகநாதன் பேசுகையில்,அவினாசி வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது. அந்த பணி எப்போது முடியும் என்றார். தலைவர் பேசுகையில், டேங்க் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீக்கிரம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

    ×