search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிப்பு
    X

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரித்தலின் போது முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிப்பு

    • தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரமக்குடியில் உள்ள சுதந் திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகர–னார் நினைவிடத்தில் செப்டம்பர் 11-ந்தேதி தியாகி நினைவு தினம் அனுசரித்தல் தொடர் பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை முன்னிலையில், மாவட்ட மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், தலைமை–யில் அனைத்துத்துறை அலு–வலர்கள் மற்றும் சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரி–வித்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு விதிமுறைகளை பின் பற்றி நினைவு தின நிகழ்ச் சியில் பங்கேற்றிடும் வகை–யில் அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு கொடுத்து காவல் துறையு–டன் ஒருங்கிணைந்து தேவை–யான முன் அனுமதிகளை பெற்றிட வேண்டும்.

    காவல்துறை வழிகாட்டு–தலின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விளம் பர பலகை வைத்துக் கொள் ளவும். வெளி மாவட்டங்க–ளிலிருந்து வருபவர்களுக்கு தேவையான முன் அனுமதி காவல்துறை மூலம் அனுமதி சீட்டு பெற்று வந்து செல்ல தேவையான நடவடிக்கை–களை முன்கூட்டியே மேற் கொள்ள வேண்டும்.

    மேலும் நினைவிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நினைவு நாள் அன்று வெளியூரிலிருந்து பரமக்குடி–யில் உள்ள நினைவிடத்திற்கு வரக்கூடியவர்களுக்கு காவல்துறையின் மூலம் உரிய வழித்தடங்கள் வழி–யாக பேருந்து சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது. அனும–திக்கப்பட்ட வழித்த–டங்களில் சென்று நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுச் செல்லவும். மேலும் விழா–வினை சிறந்த முறையில் நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித் தார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் வரு–வாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார்கள் ஸ்ரீதர் (ராம–நாதபுரம்), பழனிக் குமார் (கீழக்கரை), கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய–குமார், தேவேந்திரர் பண் பாட்டு கழகம் சார்பில் தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முத்துக் கூரி (ராமநாதபுரம்), மகேஷ் (பரமக்குடி) மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே.முனியசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கள் முனியசாமி (கிழக்கு), சேகர் (மேற்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×