search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 14-ந்தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    வருகிற 14-ந்தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மேலூரில் வருகிற 14-ந்தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கையில் கூறி உள்ளார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க கலைஞர் நூற் றாண்டு விழா கோலாகல மாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையிலும், டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் கழக இளைஞ ரணி இரண்டாவது மாநில மாநாட்டில் இளைஞர் அணியினர், கழகத்தினர் என 50 ஆயிரத்துக்கு மேற் பட்டோர் பெரும் திரளாக பங்கேற்பது மற்றும் 20-ந்தேதி மேலூரில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை சிறப்புற நடத்து வது உள்ளிட்டவை தொடர் பாக வடக்கு மாவட்ட தி.மு.க. கழகம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 14.09.2023 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு மேலூரில் உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெற உள்ளது.

    இந்த நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட கழக மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வா கிகள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகி கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கிளைச் செயலாளர்கள், நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதி கள், கழகத்தினர் என பெரும் திரளானோர் பங் கேற்று சிறப்பிக்க வேண்டு மென கேட்டுக்கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×