என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பூத் கமிட்டி எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வள்ளியூர்:
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட விவசாய அணி லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர் உவரி கிருபாநிதி ராஜன், வள்ளியூர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் ஞான புனிதா, இந்திரன், பணகுடி பேரூர் துணைச் செயலாளர் ஜெகன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி, திசையன்விளை பேரூர் செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கு பெற்று பூத்கமிட்டி உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பூத் கமிட்டி எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால் துரை செய்திருந்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பூத் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்