search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar"

    • இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதார்’.
    • இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    வெண்ணிலா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆதார்'. இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.


    ஆதார்

    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் சிறந்த தமிழ் பட தயாரிப்பிற்கான விருது 'ஆதார்'திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி. சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • ஏதாவது ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு அதில் வரும் ஓ.டி.பி., வாயிலாக ஆதாரை இணைக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
    • மின்நுகர்வோர் தாமதமின்றி ஆதாரை இணைக்க முன்வர வேண்டும் என்றனர்.

    திருப்பூர் :

    மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் ஓ.டி.பி., பெறுவதில் பல சிரமம் இருந்து வந்தது. அதாவது மின்நுகர்வோரின் ஆதார் அட்டையில் பதிவாகியுள்ள செல்போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., செல்வதால், செல்போன் எண்ணை மாற்றியவர்கள் ஆதார் இணைக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வீட்டு மின் இணைப்புகளுக்கு எப்படி ஆதார் இணைப்பது என்ற சந்தேகமும் இருந்து வந்தது. இந்நிலையில் ஆதார் இணைப்பை 31 ந் தேதிக்குள் முடிக்க வேண்டியிருப்பதால் சிரமங்களை குறைத்து ஆதார் இணைக்கும் வகையில் புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆதார் அட்டையில் உள்ள செல்போன் எண் கைவசம் இருந்தால் அதன் வாயிலாக, ஓ.டி.பி., பெற்று ஆதார் விவரத்தை இணைக்கலாம். ஆதார் அட்டையுடன் இணைத்த செல்போன் இல்லாதவர்கள், ஓ.டி.பி., இல்லாமலேயே ஆதார் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் ஆதார் இணைக்க விரும்புவோர் கைவசம் உள்ள ஏதாவது ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு அதில் வரும் ஓ.டி.பி., வாயிலாக ஆதாரை இணைக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 40 சதவீத இணைப்புகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.ஏதாவது ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தி ஆதாரை இணைக்கலாம்.ஆதார் அட்டையில் உள்ள செல்போன் எண் வாயிலாகவும் இணைக்கலாம். அதேபோல் வீட்டு உரிமையாளர், வாடகை வீட்டில் வசிப்போர், பெயர் மாற்றம் செய்யாத உரிமையாளரின் ஆதார் விவரத்தை இணைக்கலாம்.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வீட்டு இணைப்புக்கு நியமிக்கப்பட்ட உறவினர் ஒருவரின் ஆதார் விபரத்தை இணைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் தாமதமின்றி ஆதாரை இணைக்க முன்வர வேண்டும் என்றனர். 

    • ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.

    சென்னை :

    மின்சார இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வக்கீல் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், ''ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்க எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை. எனவே, இதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ''இந்த அரசாணை முறையாக பிறப்பிக்கப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன், வாடகைக்கு குடியிருப்பவரின் ஆதார் எண்ணை இணைத்து, மின்சார மானியம் பெறுவது என்பது வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை'' என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 19-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    • நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையமானது தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் முகமையினை பதிவாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை ஆதார் சேர்க்கை முகமையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களின் முகவரி நிரந்தரமாக இருந்தால் ஆதார் தரவை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.

    தற்போது பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மார்ச் மாதம் 5-ந் தேதியும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 18-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 12-ந் தேதியும், அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற ஜனவரி மாதம் 8-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 19-ந் தேதியும் ஆதார் சேவை மையம் செயல்படும்.

    ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 22-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 26-ந் தேதி, பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 29-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 9-ந் தேதியும், காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதியும், உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 23-ந் தேதியும், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதியும் ஆதார் சேவை மையங்கள் செயல்படும்.

    இதுபோல் எல்காட் மூலமாக நடக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தொட்டிப்பாளையம், நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பல்லடம், உடுமலை, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம், தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படுகிறது.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். ஆதார் புதிய பதிவு, 5 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்ததேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்களை புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.

    தமிழக அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் ஆதார் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர், புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோர் தெரிவித்தனர்.

     புதூர்

    மதுரை வடக்கு மின் கோட்டம் சார்பில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (10-ந் தேதி) நடக்கிறது. புதூர் கவுன்சிலர் அலுவலகம், மூன்று மாவடி ரவுண்டானா, வளர் நகர், உத்தங்குடி பஸ் நிலையம் அருகில், அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில், வண்டியூர் கவுன்சிலர் ஆபீஸ் அருகில், அய்யர் பங்களா அய்யாவு தேவர் திருமண மண்டபம், பனங்காடி செக் போஸ்ட், நாராயணபுரம் எம்.ஐ.ஜி. காலனி, கிருஷ்ணாபுரம் காலனி மெயின் ரோடு ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை பொதுமக்கள் இணைத்துக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர் மலர்விழி, புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • மின்‌ இணைப்பு எண்ணை, ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணி சேலம்‌ மின்‌ பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்‌ வாரிய பிரிவு அலுவலகங்களிலும்‌ நவம்பர்‌ 28-ந்‌ தேதி முதல்‌ டிசம்பர்‌ 31-ந்‌ தேதி வரை நடைபெற்று வருகிறது.
    • ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30மணி முதல்‌ மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்‌நடைபெறும்‌.

    சேலம்:

    சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வீடுகள்‌, கைத்தறி, விசைத்தறி, சூடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புதாரர்கள்‌ தங்க ளது மின்‌ இணைப்பு எண்ணை, ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணி சேலம்‌ மின்‌ பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்‌ வாரிய பிரிவு அலுவலகங்களிலும்‌ நவம்பர்‌ 28-ந்‌ தேதி முதல்‌

    டிசம்பர்‌ 31-ந்‌ தேதி வரை நடைபெற்று வருகிறது. ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30மணி முதல்‌ மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்‌நடைபெறும்‌. இந்த சிறப்பு

    முகாமை பயன்படுத்தி பொது மக்கள்‌ பயன்‌ பெறுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு, இதறகான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன.
    • மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயனர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பின் கடந்த வாரம் மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது கட்டாயம் என மீண்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஆன்லைன் மற்றும் மின் வாரிய அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகாமை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

    ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

    - முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணைய முகவரியை திறக்க வேண்டும்

    - அடுத்து திரையில் உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும்

    - மொபைல் நம்பரை பதிவிட்டு, அதன் பின் கடவுச்சொல்லை பெற வேண்டும்

    - மொபைல் நம்பருக்கு வந்த கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்

    - மின் இணைப்பை பயன்படுத்துவோர் விவரங்களை பதிவிட வேண்டும்

    - இனி இணைக்க வேண்டியவரின் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்

    - அடுத்து ஆதாரில் உள்ளதை போன்று பெயரை பதிவிட வேண்டும்

    - ஆதார் அட்டை நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    - இறுதியில் படிவத்தை சமர்பித்து விட்டு, பதிவேற்றம் செய்ததற்கான ரசீதை டவுன்லோட் செய்ய வேண்டும்

    • வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 15 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
    • மார்ச் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும்.

    சென்னை :

    வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் இறந்தவர் பெயர்களை நீக்குவது, ஒரே பெயர் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை சரி செய்வது, போலி வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி இப்பணிகள் தொடங்கின.

    இதற்காக வாக்காளர்கள் இணையதள மூலமாக ஆதார் விவரங்களை இணைக்க விண்ணப்பிக்கலாம். வீடு, வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பப்படிவத்தை பெற்று அதன் வாயிலாகவும் இணைக்கலாம் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இந்த பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் முடிவடைகிறது. தமிழகத்தில் இதுவரை 58 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் நம்பரை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

    தமிழகத்தில் மொத்தமுள்ள 6.18 கோடி வாக்காளர்களில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைப்பதற்காக 58.73 சதவீதம், அதாவது 3.62 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும் நிலையில், அதனுடன் சேர்த்து, ஆதார் விவரங்களும் பெறப்படுகின்றன. ஆதார் விவரங்கள், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 84.9 சதவீதமும், அரியலூரில் 84.3 சதவீதமும் பெறப்பட்டுள்ளன. சென்னை 22 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. 27 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். மார்ச் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். அதன்பின், ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்த விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிடும். அதன் பின்னர் அவை இணைக்கப்படும்.

    வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 15 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தொகுதி ரீதியாக வாக்காளர்கள் பெயர் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை பெற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதார் விவரங்கள் சேகரித்தல், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
    • 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு மாதம் துவங்கி நடைபெற்றுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்ட சபை தொகுதிகளில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்ட மொத்த வாக்காளர்களில் 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் ஆதார் இணைப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தநிலையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.8 தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பில் பின்தங்கிய பகுதிகளைச்சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆதார் இணைப்பு விகிதத்தை உயர்த்தவேண்டும் என ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில்டி.ஆர்.ஓ., ஜெய்பீம், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.
    • நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது.

    நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்ட மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற வகையில் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்ற மின் நுகர்வோருக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது குறித்து தெரிவிக்கப்படுகிறது.

    பின்னர், ஆதாரை இணைக்கும் பக்கத்துக்கு தானாகவே சென்று ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேவையான விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தும் பக்கத்திற்கு செல்லும் வகையில் அந்த இணையதளத்தில் மின்வாரியம் மாறுதல்களை செய்துள்ளது.

    அதேபோன்று கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி குறுஞ்செய்தி அனுப்ப மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    இதன்மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளில் இணையதளம் மூலம் கட்டணத்தை செலுத்த முயன்ற பலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகும் மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    அதாவது, ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கு மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்பதாகவும், இன்னும் சிலருக்கு தங்களது ஆதார் பதிவு ஏற்கப்படவில்லை, மீண்டும் முயற்சிக்கவும் என பதில் வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, 'இணையதளம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஆதார் எண்ணை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்பே இணைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதாரை இணைக்கும் போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

    ஆதார் இணைப்பு தொடர்பான மின் நுகர்வோரின் தொழில்நுட்ப புகார்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்யப்படுகிறது. மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்பது போன்று ஒரு கெடு விதிக்கப்படாதபோது ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை அடையாது' என்றார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதன்மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும், ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

    * ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக தங்களது ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    * ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் 300 'கே.பி.' அளவுக்கு அதனை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    * தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்திற்கோ அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கோ சென்று ஆதாரை இணைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

    * முதலில் மின் இணைப்பு எண், அதன்பின்பு செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். இதன்பின்பு செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதனை பதிவிட வேண்டும்.

    * அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும். சரியான தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.

    * இதன்பின்பு தயாராக வைத்திருக்கும் 300 'கே.பி.' அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    * பின்னர், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து 'சப்மிட்' செய்ய வேண்டும். இதன்பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் வரும். இத்தோடு ஆதாரை இணைக்கும் பணி முடிவடையும்.

    * வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம்.
    • மின் இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம்.

    திருப்பூர் : 

    தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம் என மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் வரும் குறுஞ்செய்தியில், இதுதொடர்பான அரசாணை தேதியும், ஆதார் இணைப்புக்கான இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மின்நுகர்வோர், https://www.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம். பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண் வாயிலாக, உரிமையாளர் சரிபார்க்கப்படுகின்றனர். அதற்கு பிறகு, ஆதார் எண்ணை பதிவு செய்து, அதன் போட்டோவை பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    சொத்து வாங்கிய உரிமையாளர், தங்கள் பெயருக்கு மின் இணைப்பை மாற்றாமல் இருந்தாலும், புதிய உரிமையாளரின் ஆதார் எண்ணை பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யாமல் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. எனவே ஆதார் இணைக்க வசதியாகவும், பெயர் மாற்ற ஏதுவாகவும், சிறப்பு முகாம்கள் நடத்திட மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • 10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது
    • பெரம்பலூர் கலெக்டர் தகவல்

    பெரம்பலூர்:

    10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான மத்திய அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.

    அரசு நலத்திட்டங்கள் அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் தாங்கள் ஆதார் எண் பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால், தற்போதைய புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், தற்போதைய முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆதார் தரவுகளை புதுப்பித்திடுவதன் வாயிலாக, மத்திய சேமிப்பகத்தில் ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக பதிவில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    அப்போது அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் மற்றும் சேவைகளையும் எவ்வித சிரமமும் இன்றி உடனடியாக பெற்று பயன் பெறலாம்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த பொதுமக்கள் தங்கள் அடையாளம் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ள ஏதுவாக ''மை ஆதார்" என்ற இணையதளத்திலும், செயலியிலும் "அப்டேட் டாக்குமெண்ட்" என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. பொது மக்கள் நேரடியாக இத்தளத்திற்குள் சென்று தங்களுடைய விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். இது தவிர பொதுமக்கள் அருகே உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது ஆதாரினை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கோரி தொலைபேசி வாயிலாக வரும் எந்தவித அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பொதுமக்கள் எவரும் பதிலளித்து தங்கள் ஆதார் விவரங்களை தர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    ×