search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar"

    • வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் ஆணையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நடைமுறை தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, வாக்காளர்கள் தங்களது கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ள பழைய வாக்காளர் அட்டையினை மாற்றுவதற்கோ, வாக்காளர் அடையாள அட்டை சேதம் அடைந்திருந்தாலோ அல்லது மாற்று அடையாள அட்டை வாங்குவதாக இருந்தாலோ படிவம் 8 - ஐ பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியரிடமோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ நேரிடையாக படிவத்தை வழங்கலாம். நேரில் வழங்க முடியாத வாக்காளர்கள் NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களுக்கு அவர்களது வாக்காளர் அடையாள அட்டையானது விரைவு அஞ்சல் மூலமாக கட்ட ணமின்றி வாக்காளர்களின் முகவரிக்கே வந்தடையும்.

    இதுநாள் வரை வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காதிருந்தால், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை இணைப்பதற்கென பிரத்யேகமான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது. பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண் பொன்ற விவரங்களை படிவம் 6பி - இல் பூர்த்தி செய்து சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.

    சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கக்கூடிய நாட்களில் அலுவலக வேளை நேரத்தில் அதாவது காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியரிடம் படிவம் 6பி- இல் பொது மக்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை வழங்கலாம். படிவம் 6பி- ஐ பூர்த்தி செய்து நேரில் வழங்க முடியாத வாக்காளர்கள் NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடலாம்.

    வாக்காளர்கள் தங்களது மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது மூலம் மொபைல் எண் வழியே மின்னணு வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் இப்பணியை கடந்த 2021ல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது.

    இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இச்சிப்பட்டி கிளை அஞ்சலகம் இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தியது.
    • சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி-கருகம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இச்சிப்பட்டி கிளை அஞ்சலகம் இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தியது. இந்த முகாமில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி , மொபைல் எண் , பிறந்ததேதி போன்றவை மாற்றம் செய்து தரப்ப்பட்டது, 5வயது முதல் 15வயதுக்குட்பட்டோருக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் புதுப்பிக்கப்பட்டது.

    மேலும் இம்முகாமில் பொதுமக்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்குகளும் துவங்கப்பட்டது. இந்த ஆதார் சிறப்பு முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி,துளசிமணிஆறுமுகம் மற்றும் அஞ்சலக பணியாளர்கள் நிவேதா,விஜய், பத்மஸ்ரீ, ஆறுமுகம், கிரி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கருகம்பாளையம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை.
    • இன்றைக்குள் இணைக்காவிட்டால், மின்கட்டணம் செலுத்தமுடியாது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதற்காக, மின்கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரம் பயன்படுத்துவோர் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 65 லட்சம் பேர், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்த்துவிட்டனர்.

    சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்காத நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே கூறிவிட்டார்.

    இன்றைக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால், மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் வழியாக ஆதார் எண்ணை இணைத்தவர்கள் சிலருக்கு, ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று குறுந்தகவல் சென்றுள்ளது. எனவே, உடனடியாக அவர்கள் மீண்டும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும்.

    இதேபோல், வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி வேறு ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால், அதையும் சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • பல்லடம் தபால் அலுவலகம் மற்றும் பணிக்கம்பட்டி தபால் அலுவலகம் ஆகியவை இணைந்து 3 நாட்கள் ஆதார் முகாம் நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பல்லடம் தபால் அலுவலகம் மற்றும் பணிக்கம்பட்டி தபால் அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு ஆதார் முகாம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை, ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு, கைரேகை பதிவு, முகவரி, பெயர் மாற்றம் மற்றும் பிறந்த தேதி பதிவு போன்ற முக்கிய திருத்தங்கள் பதிவு செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் இந்த சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது
    • மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதியும் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் நகரியம், கிராமியம், கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர், லெப்பைக்குடிகாடு, குன்னம் உபகோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

    இதுவரை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத 82 மின் நுகர்வோர்கள் முகாமில் கலந்து கொண்டு இணைத்து கொண்டனர். மேலும் மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த 12 மின் நுகர்வோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்ச்செல்வன், செல்வராஜ், ரவிக்குமார், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கக்கூடிய மின் இணைப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 604 ஆகும். அதில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 596 மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மாவட்டத்தில் 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதியும் நடைபெறவுள்ளது. அதில் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு சம்பந்தமான வருவாய் ஆவணங்கள் மற்றும் ஆதார் எண், செல்போன் எண், மின் இணைப்பு எண், ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    புதுடெல்லி:

    நமது நாட்டில் 'பான்' என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது.

    இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 'பான்' எண்ணுடன் ஆதாரை இணைத்துவிட வேண்டும்.

    அப்படி இந்த மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத தனிப்பட்ட 'பான்' எண்கள் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது:-

    நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 48 கோடி தனி நபர் 'பான்' எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன.

    விதிவிலக்கு பெற்ற பிரிவினர் உள்பட 13 கோடி பேர் இணைக்கவில்லை. விதிவிலக்கு பிரிவினர் தவிர்த்து அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் 31-ந் தேதி) இணைத்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். (அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலத்தில் வசிக்கிறவர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி வசிக்காதவர்கள்; இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் விதிவிலக்கு பிரிவினர் ஆவார்கள்).

    இணைக்காதவர்கள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும். இணைக்காதவர்கள் பல்வேறு வணிக நடவடிக்கைகளை, வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது பலன் பெற மாட்டார்கள்.

    பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    'பான்' எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன சிக்கல்கள் எழும் என்றால்-

    * 'பான்' எண் செயலற்றதாகி விடும்.

    * செயலிழந்த 'பான்' எண்ணைக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

    * வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை (ரீபண்ட்) திரும்பப்பெற முடியாது.

    * 'பான்' செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது.

    * 'பான்' எண் செயலற்றதாகி விட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் எந்தவொரு செயலை மேற்கொள்வதும் கடினமாகி விடும். ஏனென்றால் கே.ஒய்.சி என்று அழைக்கப்படுகிற வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களில் 'பான்' எண் முக்கிய இடம் வகிக்கிறது.

    • நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகரிய கோட்டத்தில் உள்ள வீடு, விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 463 ஆகும். இவற்றில் 80 ஆயிரத்து 364 எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 22 ஆயிரத்து 99 எண்ணிக்கை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணைஇணைக்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி, தஞ்சை மேற்கு, நீதிமன்றசாலை, மானம்பு ச்சாவடி, அருளானந்தநகர், ஈஸ்வரிநகர், கரந்தை, அரண்மனை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    எனவே நகரிய கோட்டத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ள 22 ஆயிரத்து 99 மின் நுகர்வோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொன்னமராவதியில் ஆதார் நிரந்தர பதிவு மையம் தொடங்கப்பட்டது
    • காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி ஒன்றியத்தில் தாலுகா அலுவலகத்தில் மட்டுமே ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த சேவையை ஒன்றிய அலுவலகம் மற்றும் காரையூர் பகுதியில் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் நிரந்தர பதிவு மையம் அமைக்கப்பட்டு இதன் தொடக்க விழா நடந்தது.

    ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி ஆதார் பதிவு மையத்தை தொடங்கிவைத்தார். இதில் ஒன்றிய ஆணையர்கள் தங்கராசு, குமரன், ஊராட்சித்தலைவர்கள் கீதாசோலையப்பன், கிரிதரன், அழகுமுத்து, மீனாள்அயோத்திராஜா, லெட்சுமி, துணைஆணையர்கள் குமார், கற்புக்கரசி, வள்ளி, ஒன்றிய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் புதிதாக ஆதார் எடுத்தல் திருத்தம், மொபல் எண் மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட ஆதாரின் அனைத்துப்பணிகளும் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும். இதே போல காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்துள்ளது.
    • மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு செய்தார்.மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து மீண்டும் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் எண் இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே சீர்காழி வாணிவிலாஸ் துவக்கப்பள்ளியில் மின்சாரவாரியம் சார்பில் மின் நுகர்வோர்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

    இந்த பணியை மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசித்ரா, உதவி கணக்கு அலுவலர் (பொ) செந்தாமரை, உதவி பொறியாளர் முத்துக்குமார், மின்வாரிய பணியாளர் ஆனத்தக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    • ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    புதுடெல்லி :

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் வக்கீல் ரவி, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த டிசம்பர் 21-ந்தேதி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து வக்கீல் ரவி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
    • 6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சென்னை:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார்.

    ×