search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான் எண்"

    • விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
    • ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை.

    திருநின்றவூர்:

    சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சொத்துவரி செலுத்துபவர்கள் தங்களது ஆதார், பான் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த கடித்தத்தில் சொத்து வரி செலுத்துபவர்கள் தங்களது செல்போன் எண், குடும்ப அட்டை எண், ஆதார், இ- மெயில் முகவரி, பான் எண், வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண் மற்றும் மின் இணைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் பூர்த்தி செய்யப்பட்ட அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.

    ஆனால் விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த விபரம் சேகரிப்பு எதற்காக நடத்தப்படுகிறது என்ற தெளிவான விளக்கமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்.

    இது குறித்து ஆவடியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'சொத்துவரி செலுத்துவோரிடம் இருந்து இது போன்ற விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று மாநகராட்சி தெளிவான விளக்கம் கூறவில்லை.

    மின்இணைப்பு எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை வழங்க பொது மக்கள் தயங்குகின்றனர்' என்றார்.

    இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்பகராஜ் கூறும்போது, 'ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை. பல சொத்துக்கள் வேறு ஒருவருக்கு மாறி உள்ளது. இதுபற்றிய சரியான விபரங்கள் இல்லை.

    மேலும் எங்களிடம் உள்ள பெரும்பாலான தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் தற்போதைய சரியான விபரங்களை கேட்டு பதிவு செய்து வருகிறோம். பொது மக்கள் இது குறித்த விபரங்களை தயக்கம் இல்லாமல் அளிக்கலாம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம்.
    • ஒரே பெயர், பிறந்த தேதியால் இந்த குளறுபடி நடந்திருக்கலாம் என தெரிகிறது.

    மாமல்லபுரம்

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் டில்லி (வயது 41). இவர், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு தன்னுடைய மாத சம்பளம் மற்றும் வங்கி தேவைக்காக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பான் எண் பெற்றார். இவர் திருக்கழுக்குன்றம் ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். வங்கி கணக்குடன் ஏற்கனவே பான் எண்ணை இணைத்துள்ளார்.

    இந்த நிலையில் டில்லி ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் போன்றவற்றில் உள்ள எழுத்து வித்தியாசத்தை சரி செய்யவும், வங்கி கணக்கு எண்ணில் செல்போன் எண்ணை மாற்றவும், தற்போது வங்கியில் கடிதம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். அவரது பான் எண் பிழையாக உள்ளதாக வங்கி இணையதள சர்வர் காட்டுவதாக வங்கி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

    பிழை குறித்து மேலும் விசாரித்தபோது அவரது பெயரையே கொண்டுள்ள வேறு நபருக்கும் அதே பான் எண் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். வங்கி தரப்பினர் வேறு நபரின் செல்போன் எண்ணை தெரிந்து அவரிடம் இது குறித்து விசாரித்தனர்.

    இதில் அவர் திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தபால் துறை ஊழியரான டில்லிபாபு (21) என்பது தெரிய வந்தது. ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம். இருவரது தந்தை பெயரும் ஒரே பெயர், இருவரும் ஒரே நாளில் பிறந்துள்ளனர். கல்வித்துறை ஊழியர் டில்லி பான் எண் பெறும் முன்பே, கடந்த 2008-ம் ஆண்டு டில்லிபாபுவுக்கு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் கடந்து டில்லிக்கும் அதே பான் எண் அளிக்கப்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.

    இதையடுத்து கல்வித்துறை பணியாளர் டில்லி, வருமான வரித்துறை பணியாளர்களின் அலட்சியபோக்கால் இப்படி ஒரே பான் எண் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு உடனடியாக வேறு பான் எண் வழங்கக்கோரி இ.மெயில் மூலம் வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    புதுடெல்லி:

    நமது நாட்டில் 'பான்' என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது.

    இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 'பான்' எண்ணுடன் ஆதாரை இணைத்துவிட வேண்டும்.

    அப்படி இந்த மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத தனிப்பட்ட 'பான்' எண்கள் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது:-

    நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 48 கோடி தனி நபர் 'பான்' எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன.

    விதிவிலக்கு பெற்ற பிரிவினர் உள்பட 13 கோடி பேர் இணைக்கவில்லை. விதிவிலக்கு பிரிவினர் தவிர்த்து அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் 31-ந் தேதி) இணைத்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். (அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலத்தில் வசிக்கிறவர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி வசிக்காதவர்கள்; இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் விதிவிலக்கு பிரிவினர் ஆவார்கள்).

    இணைக்காதவர்கள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும். இணைக்காதவர்கள் பல்வேறு வணிக நடவடிக்கைகளை, வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது பலன் பெற மாட்டார்கள்.

    பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    'பான்' எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன சிக்கல்கள் எழும் என்றால்-

    * 'பான்' எண் செயலற்றதாகி விடும்.

    * செயலிழந்த 'பான்' எண்ணைக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

    * வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை (ரீபண்ட்) திரும்பப்பெற முடியாது.

    * 'பான்' செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது.

    * 'பான்' எண் செயலற்றதாகி விட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் எந்தவொரு செயலை மேற்கொள்வதும் கடினமாகி விடும். ஏனென்றால் கே.ஒய்.சி என்று அழைக்கப்படுகிற வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களில் 'பான்' எண் முக்கிய இடம் வகிக்கிறது.

    ×