search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதார் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    ஆதார் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது

    • பல்லடம் தபால் அலுவலகம் மற்றும் பணிக்கம்பட்டி தபால் அலுவலகம் ஆகியவை இணைந்து 3 நாட்கள் ஆதார் முகாம் நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பல்லடம் தபால் அலுவலகம் மற்றும் பணிக்கம்பட்டி தபால் அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு ஆதார் முகாம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை, ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு, கைரேகை பதிவு, முகவரி, பெயர் மாற்றம் மற்றும் பிறந்த தேதி பதிவு போன்ற முக்கிய திருத்தங்கள் பதிவு செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் இந்த சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×