search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar number"

    • 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 295 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    உடுமலை :

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி இந்த பணிகள் கடந்த 1 ந்தேதி தொடங்கியது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    மொத்தம் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு முகாம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை ஆடியோ ஆர் .ஜஸ்வந்த் கண்ணன் தொடங்கி வைத்தார். உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், தேர்தல் துணை தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் 50 பேருடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 32 மாணவ மாணவிகளின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் இதுவரை 20 சதவீத வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    நெல்லை:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை,அம்பாசமுத்திரம், பாளை, நாங்குநேரி மற்றும் ராதபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதார் விபரம்

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6 பி-யில் வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் பெற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்கள் இந்த அலுவலர்களிடம் ஆதார் அட்டை விவரங்களை தெரிவித்து ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் பி-யில் குறிப்பிட்டுள்ள வருமான வரி அட்டை

    ( பான்கார்டு) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவண விவரத்தை தெரிவித்து அதனை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம்.

    ஆன்லைன் பதிவு

    வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    இந்த பணியினை சிறந்த முறையில் நிறைவேற்றிட நெல்லை மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • செங்கோட்டை நகராட்சிக்கு ட்பட்ட 3,4-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் வாஞ்சிநாதன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்திலோ உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து ெகாள்ளலாம் என அறிவிப்பு வெளியானது.

    இதையொட்டி செங்கோட்டை நகராட்சிக்கு ட்பட்ட 3,4-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் வாஞ்சிநாதன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் சுடரொளி ராமதாஸ், ஜெகநாதன் ஆகியோர் ஆதார் எண் இணைப்பு பணிகளை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண்ணை யு.ஐ.டி.ஏ.ஐ. கட்டாயமாக்கியுள்ளது.
    • ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில் ஆதார் அட்டைக்கு பதிவுசெய்து அந்த எண்ணைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) அளித்த புள்ளிவிபரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன்படி ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வாயிலாக சேவைகளைப் பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் யு.ஐ.டி.ஏ.ஐ. சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் சலுகைகளைப் பெற கட்டாயம் ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும். அப்படி ஆதார் அட்டை வழங்கப்படாத பட்சத்தில், ஆதார் அட்டைக்கு பதிவு செய்து அந்த எண்ணைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது.

    அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என யு.ஐ.டி.ஏ.ஐ. அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

    நிரந்தர ஆதார் வரும்வரை, அந்த நபருக்கு ஆதார் பதிவு அடையாள எண் ஒதுக்கப்படும். அந்த ஸ்லிப்புடன் மாற்று அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவர் அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம் என யு.ஐ.டி.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
    • வாக்காளர்கள் இணையதளத்தில் மற்றும் செயலி மூலமாக தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களின் விருப்பத்தின்படி ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரெ தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் தவிர்க்க முடியும். வாக்காளர்கள் இணையதளத்தில் NVSP மற்றும் voter portal மூலமாகவும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம்.

    இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6B என்ற விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு முகாமில் படிவம் 6B யை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவுசீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த தகவலை தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

    • துவரை பி.எம். கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியைப்பொருத்து விவசாயிகளுக்கு 11தவணை வரை தொகைகள்வரப் பெற்றுள்ளது.
    • விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

    உடன்குடி:

    திருச்செந்தூர், உடன்குடி வட்டார விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ 6000 க்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சேருவதற்கு விவசாயிகளுக்கு வேளாண்மைஉதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் அழைப்பு விடுப்பு உள்ளார், அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் உடன்குடி வட்டாரத்தில் பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வேளாண்மை இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை பி.எம். கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியைப்பொருத்து விவசாயிகளுக்கு 11தவணை வரை தொகைகள்வரப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லதுவிவசாயியை தெரிந்து கொள்ளுங்கள், இதனால் விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.இதற்கு அருகாமையிலுள்ள இசேவை மையத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி இ.கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்களதுஆதார் எண்ணுடன்கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார்எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி. மூலம் சரிபார்ப்பு செய்யலாம். திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் மேற்காணும் ஏதேனும் ஒரு முறையில் தங்களதுஆதார் விவரங்களை உடனடியாக பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில்பதிவு செய்து தொடர் தவணைகள் பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறு திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
    • வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவத்தை அளிக்க உள்ளனர்.

    சென்னை:

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்படுவதன் மூலம் போலி வாக்காளர்களை முற்றிலும் ஒழிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது, இடம் மாறி குடியேறிவர்களின் விவரங்கள் மாறாமல் இருப்பது போன்றவை தேர்தல் ஆணையத்துக்கு பெரிய சவாலாக உள்ளன.

    இந்த பிரச்சினைகளை சரி செய்ய வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டது. நாடு தழுவிய அளவில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் இந்த பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

    இதற்காக 6பி என்ற படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்படும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவத்தை அளிக்க உள்ளனர்.

    இதில் ஆதார் எண், வாக்காளர் பட்டியல் வரிசை எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும். வாக்காளர்கள் இதனை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுத்து விட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இதனை வழங்கி விடுவர். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.

    இந்த இணைப்பின் மூலம் போலி வாக்காளர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவர். ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தேர்தல் தொடர்பான விவரங்களை வாக்காளர்களுக்கு செல்போன் வழியாக அனுப்புவதற்கு இந்த இணைப்பு பயன்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்களில் 6பி – படிவம் சமர்பித்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம் பெற்றுள்ளதா அல்லது ஒரே வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறியவும், வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இப்பணியானது வருகிற 01.08.2022 முதல் தொடங்கப்பட உள்ளது. வாக்காளர் தன்விருப்பதின் அடிப்படையில் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பயன்பாட்டு செயலிகளை பயன்படுத்தி இணைய வழியில் 6பி படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம்.

    அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக இப்பணிக்கு வரும்போது தன்விருப்பதின் அடிப்படையில் படிவம் 6பி யினை பூர்த்தி செய்து சமர்பித்தும் அல்லது இது தொடர்பாக நடைபெற உள்ள சிறப்பு முகாம்களிலும் 6பி – படிவம் சமர்பித்தும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலை மேம்படுத்திட ஏதுவாக, வாக்காளர் அனைவரும் தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை அளித்து, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை.
    • இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் கமிஷனிடம் இருந்து பெறப்பட்ட அறிவுரைகள் அலுவலர்களிடம் பகிர்கொள்ளப்பட்டன.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி வாக்காளர் பதிவு விதிகளில் 26 பி என்ற சிறப்பு விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்து, வக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பத்தின் மூலம் அளிக்கலாம்.

    இந்த திட்டத்தின் நோக்கம் தற்போது சட்டமாக்கப்பட்டு இருப்பதால், ஆதார் எண்ணை வாக்காளர்கள் தானாக முன்வந்து அளிக்க வேண்டும். நேரடியாக ஆதார் எண்ணை அளிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை 1.4.2023 தேதிக்குள் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. #AadhaarNumber #CentralGovernment #Farmer
    புதுடெல்லி:

    மத்திய பா.ஜனதா அரசு 1-ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமும் ஒன்று. 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிதி உதவி 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    இந்த திட்டம் குறித்து மத்திய அரசின் விவசாய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான முதல் தவணை மார்ச் மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முதல் தவணைக்கு மட்டும் ஆதார் எண் அவசியம் இல்லை. அதற்கு பதிலாக பயனாளிகளின் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொடுக்கலாம்.



    ஆனால் அதே சமயம் 2-வது தவணை பெறும் போது ஆதார் எண் அவசியம் இருக்க வேண்டும். இது தொடர்பாக பயனாளிகளின் பெயர், நிலத்தின் அளவு, ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஆண்/பெண் போன்ற விவரங்களை மாநில அரசு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி 1-ந் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. எனவே அதற்கு பிறகு வேறு யார் பெயரிலாவது நிலம் மாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் இந்த திட்டத்துக்கு தகுதி பெற இயலாது.

    இது தொடர்பாக மாநில அரசு குறைதீர்க்கும் முகாம் நடத்தி சரியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதி உடைய எந்த பயனாளிகளும் விடுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை கண்காணிக்க மத்திய அரசு ஒரு குழு அமைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு 2018-19-ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டிரில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கலாம்.

    இதற்கு மத்திய அரசின் வேளாண் எந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ? அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலை உள்ள எந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான agrimachinery.nic.in&™ இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணைய தளத்திலேயே கணக்கிடப்படும்.

    விவசாயிகள் முகவரை ஒருமுறை தேர்வு செய்தபின், வேறு முகவரை தேர்வு செய்ய இயலாது. ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் எதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும். வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இணைய தளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஆதார் எண் மூலம் டிராய் தலைவரின் தகவல்கள் திருடப்பட்டதாக வெளிவந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமை, அவரது தகவல்கள் ஆதாரின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ளது. #Aadhaar #UIDAI
    புதுடெல்லி:

    மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் எனும் தனிநபர் அடையாள அட்டை பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. தனிநபரின் தகவல்கள் திருடப்படுவதாகவும், பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

    அதே சமயம் ஆதார் தகவல்களை திருட முடியாது எனவும், பலகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆதார் முகமை தனது சார்பில் விளக்கத்தை அளித்து வருகிறது.

    இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். எனது ஆதார் எண்ணை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.



    இவரது இந்த திடீர் சவால் ட்விட்டரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்பவர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

    அத்துடன், “வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் ட்வீட்டும் செய்திருந்தார். இதனால் ஆதாரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை மீண்டும் வெடிக்க துவங்கியது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமை, டிராய் தலைவர் ஷர்மாவின் தகவல்கள் ஆதார் எண் மூலம் திருடப்படவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும், அவர் பல ஆண்டுகளாக அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என குறிப்பிட்ட ஆதார் முகமை, ஒரு அரசு ஊழியரின் அடிப்படை தகவல்களை கூகுள் போன்ற சாதாரண இணையங்களில் இருந்தே பெற முடியும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளில் ஆதார் முகமை விளக்கம் அளித்துள்ளது என்றாலும், ஆதாரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சையும், சந்தேகமும் முற்றுபெறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. #Aadhaar #UIDAI
    ×