என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vijayakanth birthday"
- நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சென்னை:
தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-
'வானத்தைப் போல' பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று 'புலன் விசாரணை' செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக 'கேப்டனாக' மரியாதையுடன், நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் செட்டிஏரி கரையில் உள்ள சக்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது. முக்கிய இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்கள் 50 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
அரியலூர் ஒன்றியம் கோவிந்தபுரம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடும், கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட பொருளாளர் கவியரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பழக்கடை பாண்டியன், மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் நல்லதம்பி, ராமச்சந்திரன், நகர நிர்வாகிகள் மதி, ரமேஷ், சுந்தர், ராதாகிருஷ்ணன், சின்னமுருகன், நமச்சிவாயம், சக்திவேல், மருதை, பாலா, செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை:
தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் தே.மு.தி.க.வில் இணைந்தனர். மாவட்ட அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்தகுமார், வனிதா துரை, செயற் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்துகுமார், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத், பகுதி நிர்வாகிகள் ராஜா, கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை, ஆக.25-
தே.மு.தி.க. பொது செய லாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
இதையொட்டி புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை, புனித அந்தோ ணியார் ஆலயத்தில் பிரார்த் தனை, தொழிற்சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடி யேற்று விழா, அன்ன தானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடந்தது.
தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப் பட்டது. மேலும் உள்நோயா ளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்கினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி னர். இதைத்தொடர்ந்து 40-வது வார்டில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந் தது. நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு, அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்த குமார், வனிதா துரை,
செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்து குமார், பன்னீர்செல்வம், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
இன்று மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவை:
தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நாளை (சனிக்கிழமை) கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் காட்டன் ஆர். செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நாளை காலை 6 மணிக்கு புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை, தொழிற் சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடியேற்று விழா, அன்னதானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடக்கிறது.
காலை 9 மணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் உள்நோயாளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்குதல், 10 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் கேக் வெட்டு தல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படு கிறது. நாளை மறுநாள்(26-ந் தேதி) மாலை பீளமேடு ரொட்டிக் கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வஅன்பு ராஜ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் கேப்டன் ஆணைப்படி நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிவாரண பொருட்கள் 27-ந் தேதி கேரளாவுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, டாடாபாத்தில் உள்ள அரச மரத்தடி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர் வி.வி.ராஜன் வரவேற்று பேசினார். பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், பகுதி நிர்வாகிகள் நரசிம்மராஜ், பாரதி, ஆறுக்குட்டி, அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்