search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellore collector office"

    • நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    பென்னாத்தூர் அருகே உள்ள அல்லி வரும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் இன்று காலை குறை தீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் முன்பு வந்தார். திடீரென அவர் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் எடுத்து தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    அல்லிவரம் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுதர வேண்டும் என கூறினார்.

    இதே போல குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்ற முதியவர் இன்று காலை கலெக்டர் அலுவலக வாசலில் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

    மோடிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு வழிபாதை இல்லாமல் அவதிப்படுகிறேன். நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

    ஒரே நாளில் 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
    • இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2 பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) வழக்கறிஞராக உள்ளார்.

    இவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் குடும்பத்தினர் 8 பேர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    எங்களுக்கு சொந்தமான நிலம் வேலூர் காந்தி ரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் சோதனையை மீறி முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேன் கொண்டு சென்ற சம்பவம் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் எர்த்தாங்கல் ஏரியில் மீன் பிடிக்க பொதுப்பணித்துறையில் ரூ. 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

    ஆனால் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர் ஏரி எங்களுடைய பஞ்சாயத்தில் உள்ளதால் இந்த ஏரியில் மீன் பிடிக்கக்கூடாது எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் தான் மீன் பிடிக்க வேண்டும் என ஆறுமுகத்தை மீன்பிடிக்க விடாமல் தடுத்து வந்துள்ளனர்.

    இதுகுறித்து ஆறுமுகம் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் மற்றும் திருவலம் போலீசில் புகார் செய்துள்ளார். இவரின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த ஆறுமுகம் பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு லிட்டர் பெட்ரோலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு கொடுக்க சென்றபோது தன் பையில் மறைத்து எடுத்துவந்த பெட்ரோல் கேனை வெளியே எடுத்தார்.

    இதனைக் கண்ட அதிகாரிகள் திடுக்கிட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆறுமுகத்திடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்தனர். இதையடுத்து ஆறுமுகத்திடம் விசாரணை செய்வதற்காக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரையும் பரிசோதனை செய்த பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். போலீசார் சோதனையை மீறி முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேன் கொண்டு சென்ற சம்பவம் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் கலெக்டர் ஆபீசில் வன அதிகாரி மனைவி 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    ஆற்காடு தாலுகா பூகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா அமிர்தி வனச்சரக அலுவலராக பணியாற்றினார். தற்போது சஸ்பெண்டாகி உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி மெர்லின்மாலதி (38). அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி மெர்லின்மாலதி மனு கொடுத்தார். அதில் தனது கணவர் ராஜா, வனத்துறையில் வேலை பார்த்து வந்தார்.

    தற்போது சஸ்பெண்டு செய்யபட்டுள்ளார் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார். இது பற்றி கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்.

    இதுபற்றி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தேன் ஆனால் விசாரணைக்கு வரவில்லை. அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மெர்லின்மாலதி மகன்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் கலெக்டர் ஆபீசில் முதியவர் மண்எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் கன்சால் பேட்டையை சேர்ந்தவர் சின்னப்பன். கொணவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் 15 வருடமாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.

    அவருக்கு கிடைக்க வேண்டிய நிதி பயன்களை வழங்குமாறு தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சின்னப்பன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

    அப்போது தான் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணையை எடுத்து குடித்து விட்டார். மேலும் மண்எண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் உஷாராகி அவரை தடுத்தனர்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.

    ஜோலார்பேட்டையை சேர்ந்த ரேவதி(39) அவரது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென மண் எண்ணை கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து மண் எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    இதுபற்றி ரேவதி கூறுகையில், எனது கணவர் இறந்துவிட்டார்.அவரது இன்சூரன்ஸ் பணம் வந்தது.அதனை ஜோலார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கடனாக பெற்றார். அந்த பணத்தை தற்போது தரமறுக்கிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் அதனை வாங்க மறுக்கின்றனர். அதனால் குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்தேன் என்றார். அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுகொடுக்க வரும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டரை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடந்தது.

    கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5653 பேருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது கட்டமாக 500 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.

    மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். திருமண உதவி திட்டம், தாலி தங்கம் வழங்கும் திட்டங்கள் உள்பட அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசா பாராட்டினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணியினர் மனு கொடுப்பதற்காக விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்து முன்னணி அமைப்பு கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர்.

    கலெக்டர் அலுவலக மேம்பாலத்திற்குள் புகுந்து ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினரை, டி.எஸ்.பி. அலெக்ஸ் மேற்பார்வையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான ஏராளமான போலீசார், பேரிகார்ட்டுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல இந்து முன்னணியினர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸ் அறிவுறுத்தியது. இதையடுத்து கோட்ட தலைவர் மகேஷ் உள்பட சிலர், கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்ட அரங்கிற்கு சென்று விநாயகர் சிலை கையில் கோரிக்கை மனுவை வைத்து அதிகாரிகளிடம் வழங்கினர்.

    அந்த மனுவில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு அரசாணை மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்கள் கொண்டாட முடியாத அளவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்து மக்களுக்கு மத வழி பாட்டு உரிமையை மறுப்பு போல் உள்ளது.

    விநாயகர் சிலையை வைக்க கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை சாமானிய மக்களும் கொண்டாட வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.

    இதில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யடுவார்கள். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டும். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும். இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

    டிரைவர் பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம் இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 23 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமலும், உயரம்162.5 செ.மீக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

    டிரைவிங் லைசென்ஸ், பேட்ஜ் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு மனிதவள நேர்காணல், கண் பார்வை, சாலை விதிகள் சம்பந்தப்பட்ட தேர்வு ஆகியன நடத்தப்படும்.

    மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இ.எம்.டி. பிரிவினருக்கு பி.எஸ்.சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பாம், டி.எம்.எல்.டி. அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் பங்கேற்கலாம். வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

    இ.எம்.டி. டிரெய்னி பிரிவுக்கு ஓராண்டு டெக்னீசியன் கோர்ஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கன்டெய்னர் லாரி, நிலக்கரி ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் பலியானார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கன்டெய்னர் லாரி, நிலக்கரி ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் பலியானார். இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கார்களை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை புறப்பட்டது. லாரியை அரியானாவை சேர்ந்த தரம்வீர்சிங் (வயது 48) என்பவர் ஓட்டினார். காலை 8 மணி அளவில் வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே சென்னை - பெங்களூரு பைபாஸ் சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கன்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு எதிர் திசையில் உள்ள சாலைக்கு சென்றது.

    அப்போது எதிர்திசையில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஓசூருக்கு நிலக்கரி ஏற்றி சென்ற லாரி மீது, கன்டெய்னர் லாரி மோதியது. இதில், நிலக்கரி ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பு சுவரில் ஏறி அணுகுசாலையில் (சர்வீஸ் ரோடு) இறங்கி கால்வாய் மீது மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் தரம்வீர்சிங் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குரும்பூர்பள்ளி கிராமத்தை சேர்ந்த மணி படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், விபத்தில் பலியான டிரைவர் தரம்வீர்சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு பைபாஸ் சாலையின் ஒருபுறம் மற்றும் அதன் அணுகுசாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் வேலூர் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    அதையடுத்து போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்கினர். கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக வாகனங்கள் வேலூருக்கு வந்து, பின்னர் கொணவட்டம் பகுதியில் பைபாஸ் சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக வேலூர் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பள்ளி, அலுவலகத்துக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, லாரிகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் டீசல் டேங்க்கில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் டீசல் சாலையில் வழிந்தோடியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீ விபத்து ஏற்படாமல் இருக்க சாலையில் வழிந்தோடிய டீசல் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ராட்சத கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    வேலூர் கலெக்டர் ஆபீசில் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்ற இந்து அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தின் நீட்சியாக நேற்று வேலூருக்கு வந்திருந்தார். பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவரை, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற இந்து அமைப்பினர் தாக்க முயன்றனர்.

    சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர், தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன் பட்டியில் மதமாற்றம் செய்ய தாக்குதல் நடத்துபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது தான், அய்யாக்கண்ணுவை ஒருமையில் பேசி தாக்க முற்பட்டனர். மேலும் கோ‌ஷம் எழுப்பினர்.

    கலெக்டர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் கோ‌ஷம் எழுப்பிய புகாரில் சத்துவாச்சாரி போலீசார், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ராஜகோபால் (வயது 48) உள்பட 4 நிர்வாகிகளை கைது செய்தனர்.

    ஆனால் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்றது தொடர்பாக, சக்தி சேனா அமைப்பினர் மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  #Tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணுவை இந்து அமைப்பினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணமாக இன்று வேலூருக்கு வந்தார். வேலூர் கோட்டை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். பிறகு, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க சென்றார்.

    அப்போது, நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர்வளத்துறை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலாற்றில் அணைகள் கட்ட வேண்டும். தென்பெண்ணையாற்றை பாலாற்றுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்க இன்று வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த கமிட்டிக்கு காவிரி விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமற்ற கமிட்டி என்றால் எங்களுக்கு தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சரை அழைப்போம். முதல்- அமைச்சர் வரவில்லை என்றாலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    அய்யாக்கண்ணு மோடி மீது விமர்சனம் வைத்ததால், அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக பாடை கட்டி வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பினர் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்தனர். மோடியை பற்றி விமர்சிக்க உனக்கு தகுதியில்லை. விவசாய சங்கத்திற்கு நீ தலைவனாக இருப்பதற்கும் தகுதியில்லை என்று ஒருமையில் பேசினர்.

    இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், இந்து அமைப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சித்தனர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, மோதலை தடுத்து அய்யாக்கண்ணுவை மீட்டனர். பின்னர், இது பற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே, திருச்செந்தூரில் பா.ஜ.க. பெண் பிரமுகர் அய்யாக் கண்ணுவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
    ×