search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கலெக்டர் ஆபீசில் முதியவர் மண்எண்ணை குடித்து தற்கொலை முயற்சி
    X

    வேலூர் கலெக்டர் ஆபீசில் முதியவர் மண்எண்ணை குடித்து தற்கொலை முயற்சி

    வேலூர் கலெக்டர் ஆபீசில் முதியவர் மண்எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் கன்சால் பேட்டையை சேர்ந்தவர் சின்னப்பன். கொணவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் 15 வருடமாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.

    அவருக்கு கிடைக்க வேண்டிய நிதி பயன்களை வழங்குமாறு தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சின்னப்பன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

    அப்போது தான் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணையை எடுத்து குடித்து விட்டார். மேலும் மண்எண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் உஷாராகி அவரை தடுத்தனர்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×